AppamAppam - Tamil

Feb 25. போர் ஆயுதங்கள்!

“எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது” (2 கொரி. 10:4).

உங்களுக்கு ஆவிக்குரிய போராயுதங்கள் உண்டு. இவை சாத்தானுடைய அரண்களை நிர்மூலமாக்குகிற தேவபலமுள்ள போராயுதங்கள். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் இந்த போராயுதங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாததினாலே, சாத்தானுடைய போராட்டங்கள் வரும்போது, அவர்களால் எதிர்த்து நிற்க முடிவதில்லை. ஜெயம் கொண்டவர்களாய் விளங்க முடியவதில்லை.

ஒரு முறை ஜான் வெஸ்லி, எனக்கு ஜெபிக்கிற நூறு பேரைத் தந்தால் அவர்களைப் பயிற்றுவித்து, அவர்களுக்கு ஆவிக்குரிய போராயுதங்களைத் தரித்து, இந்த உலகத்தையே அசைத்துக் காண்பிப்பேன் என்றார். ஆம், இன்றைக்கு போராயுதங்களை ஏந்தியிருக்கிற கர்த்தருடைய ஜெப வீரர்கள் தேவை.

அன்றைக்கு இஸ்ரவேலருக்கு விரோதமாய் கோலியாத் புறப்பட்டு வந்தபோது, அவனை எதிர்த்து நிற்கக்கூடிய தைரியம் இஸ்ரவேலருக்கு இல்லாதிருந்தது. இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலுக்கும் தைரியமில்லை. அவன் தளபதிகளுக்கும் தைரியமில்லை.

வாலிபனான தாவீது போர்க்களத்திற்கு வந்தபோது, சவுல் தனது போராயுதங்களைத் தாவீதுக்கு தரிப்பித்தான். வெண்கல தலைச்சீராவையும், கவசத்தையும் பெரிய பெரிய வஸ்திரங்களையும் அணிந்துக்கொண்டு தாவீதால் நடக்க முடியவில்லை. ‘அவைகள் எல்லாம் மாம்சத்துக்கேற்ற போராயுதங்கள். ஆகவே இந்த அப்பியாசம் எனக்கு இல்லை’ என்று சொல்லி தாவீது அவைகளைக் களைந்து போட்டான்.

ஆனால் தாவீதுக்கு என்று கர்த்தர் கொடுத்திருந்த ஆவிக்குரிய போராயுதம் இருந்தது. அது என்ன தெரியுமா? அது கர்த்தருடைய நாமம். தாவீது கோலியாத்தைப் பார்த்து, “நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்” (1 சாமு. 17:45) என்றான்.

  இதுதான் மாம்சத்துக்குரிய போராயுதத்திற்கும், ஆவிக்குரிய போராயுதத்திற்கும் உள்ள வித்தியாசம். ஆவிக்குரிய போராயுதங்கள் சாத்தானின் அரண்களை நிர்மூலமாக்குகிற தேவ பெலனாய் இருக்கிறது. கர்த்தரின் நாமத்தை முன்வைத்து ஆவிக்குரிய வைராக்கியத்தோடு சென்ற தாவீது முன்னேறிச் சென்றார். தாவீதின் போராயுதமாக கர்த்தருடைய நாமம் இருந்தது. தேவனுடைய வைராக்கியம் இருந்தது. மாத்திரமல்ல, ஐந்து கூழாங்கற்கள் இருந்தது. ஏன் ஐந்து கூழாங்கற்கள்?

 அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு என்ற ஐந்து நாமங்கள் கர்த்தருக்கு உண்டு. இதற்காகவே ஐந்து கூழாங்கற்களை தாவீது எடுத்துக் கொண்டார். ஆனால் அவை அனைத்தும் தேவைப்படவில்லை. வல்லமையுள்ள தேவன் என்கிற நாமமாகிய ஒரே கல் வல்லமையாச் சென்று கோலியாத்தை அடித்து வீழ்த்தினது. தேவபிள்ளைகளே, கர்த்தருடைய நாமத்தைத் தரித்துக்கொள்ளுங்கள். ஜெயத்தின்மேல் ஜெயம் பெறுவீர்கள்.

நினைவிற்கு:- “உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்” (சங். 18:29).

உங்களுக்கு ஆவிக்குரிய போராயுதங்கள் உண்டு. இவை சாத்தானுடைய அரண்களை நிர்மூலமாக்குகிற தேவபலமுள்ள போராயுதங்கள். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் இந்த போராயுதங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாததினாலே, சாத்தானுடைய போராட்டங்கள் வரும்போது, அவர்களால் எதிர்த்து நிற்க முடிவதில்லை. ஜெயம் கொண்டவர்களாய் விளங்க முடியவதில்லை.

ஒரு முறை ஜான் வெஸ்லி, எனக்கு ஜெபிக்கிற நூறு பேரைத் தந்தால் அவர்களைப் பயிற்றுவித்து, அவர்களுக்கு ஆவிக்குரிய போராயுதங்களைத் தரித்து, இந்த உலகத்தையே அசைத்துக் காண்பிப்பேன் என்றார். ஆம், இன்றைக்கு போராயுதங்களை ஏந்தியிருக்கிற கர்த்தருடைய ஜெப வீரர்கள் தேவை.

அன்றைக்கு இஸ்ரவேலருக்கு விரோதமாய் கோலியாத் புறப்பட்டு வந்தபோது, அவனை எதிர்த்து நிற்கக்கூடிய தைரியம் இஸ்ரவேலருக்கு இல்லாதிருந்தது. இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலுக்கும் தைரியமில்லை. அவன் தளபதிகளுக்கும் தைரியமில்லை.

வாலிபனான தாவீது போர்க்களத்திற்கு வந்தபோது, சவுல் தனது போராயுதங்களைத் தாவீதுக்கு தரிப்பித்தான். வெண்கல தலைச்சீராவையும், கவசத்தையும் பெரிய பெரிய வஸ்திரங்களையும் அணிந்துக்கொண்டு தாவீதால் நடக்க முடியவில்லை. ‘அவைகள் எல்லாம் மாம்சத்துக்கேற்ற போராயுதங்கள். ஆகவே இந்த அப்பியாசம் எனக்கு இல்லை’ என்று சொல்லி தாவீது அவைகளைக் களைந்து போட்டான்.

ஆனால் தாவீதுக்கு என்று கர்த்தர் கொடுத்திருந்த ஆவிக்குரிய போராயுதம் இருந்தது. அது என்ன தெரியுமா? அது கர்த்தருடைய நாமம். தாவீது கோலியாத்தைப் பார்த்து, “நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்” (1 சாமு. 17:45) என்றான்.

  இதுதான் மாம்சத்துக்குரிய போராயுதத்திற்கும், ஆவிக்குரிய போராயுதத்திற்கும் உள்ள வித்தியாசம். ஆவிக்குரிய போராயுதங்கள் சாத்தானின் அரண்களை நிர்மூலமாக்குகிற தேவ பெலனாய் இருக்கிறது. கர்த்தரின் நாமத்தை முன்வைத்து ஆவிக்குரிய வைராக்கியத்தோடு சென்ற தாவீது முன்னேறிச் சென்றார். தாவீதின் போராயுதமாக கர்த்தருடைய நாமம் இருந்தது. தேவனுடைய வைராக்கியம் இருந்தது. மாத்திரமல்ல, ஐந்து கூழாங்கற்கள் இருந்தது. ஏன் ஐந்து கூழாங்கற்கள்?

 அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு என்ற ஐந்து நாமங்கள் கர்த்தருக்கு உண்டு. இதற்காகவே ஐந்து கூழாங்கற்களை தாவீது எடுத்துக் கொண்டார். ஆனால் அவை அனைத்தும் தேவைப்படவில்லை. வல்லமையுள்ள தேவன் என்கிற நாமமாகிய ஒரே கல் வல்லமையாச் சென்று கோலியாத்தை அடித்து வீழ்த்தினது. தேவபிள்ளைகளே, கர்த்தருடைய நாமத்தைத் தரித்துக்கொள்ளுங்கள். ஜெயத்தின்மேல் ஜெயம் பெறுவீர்கள்.

நினைவிற்கு:- “உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்” (சங். 18:29).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.