situs toto musimtogel toto slot musimtogel link musimtogel daftar musimtogel masuk musimtogel login musimtogel toto
AppamAppam - Tamil

மே 31 – ஆத்துமாவில் சுகம்!

“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறது போல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” (3 யோவான் 2).

அநேகரால் நோய் கொண்ட சரீரத்திற்கும், ஆரோக்கியமுள்ள சரீரத்திற்குமுள்ள வித்தியாசத்தை கண்டுபிடித்துவிட முடிகிறது. அதே நேரத்தில், நோய் கொண்ட ஆத்துமாவுக்கும், ஆரோக்கியமுள்ள ஆத்துமாவுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர்களால் காண முடிவதில்லை. “ஆத்துமாவின் வாழ்வு என்றால் என்ன?” என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.

இன்று அநேகர் ஒருவரையொருவர் வாழ்த்தும்போது, “பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறது போல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு” என்று சொல்லி வாழ்த்துகிறார்கள். ஆனால் அந்த ஆத்துமா வாழுகிறதா, நோய்கொண்டு ஒடுங்கிப் போயிருக்கிறதா, அல்லது மரணமடைந்திருக்கிறதா, என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

‘ஆத்துமா வாழ்கிறது போல’ என்று சொல்லும்போது, ஆத்துமாவின் நிலைமைக்குத்தக்கதான சரீர வாழ்வும் என்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். சில வேளைகளில் இப்படி வாழ்த்துவது சாபமாக மாறிவிடுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால், சிலருக்குள் ஆத்துமா வியாதிப்பட்டு இருக்கிறது. சிலருக்குள் ஆத்துமா செத்துக்கிடக்கிறது. “ஆத்துமா வாழ்வது போல எல்லாவற்றிலும்” என்று சொல்லும்போது அப்படிப்பட்டவர்களை சரீர வியாதிக்கும், உலகப்பிரகாரமான சாவுக்கும் உள்ளாக்கி விடக்கூடும்.

ஆரோக்கியமுள்ள ஆத்துமாவிலே அன்பும், சந்தோஷமும், சமாதானமும் நிரம்பியிருக்கும். ஆத்துமாவில் கர்த்தரைத் துதிக்கும் துதி இருக்குமென்றால், சரீரத்திலே தேவ பிரசன்னம் நிரம்பி வழியும். வேதம் சொல்லுகிறது, “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்” (நெகே. 8:10).

சாதாரணமாக உலகத்திலே துக்கத்தை நெஞ்சிலே அடக்கி வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்லுவார்கள். துக்கமான சூழ்நிலைகள் வரும்போது, நான்கு பேரிடம் தங்களுடைய இருதயத்தின் பாரங்களை பகிர்ந்து கொள்ளுவதன் மூலம் கர்த்தருடைய சமுகத்திலே விழுந்து ஆறுதலையும் தேறுதலையும் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படியில்லாமல் உள்ளத்திற்குள்ளே அடக்கி வைத்துக் கொண்டிருந்தால், நாளடைவில் அந்த துக்கம் சரீரத்திலே இருதய நோயைக் கொண்டு வந்து விடுகிறது.

யோபு பக்தனைப் பாருங்கள்! அவருக்குள்ளே ஒரு பயத்தின் ஆவி கிரியை செய்து கொண்டேயிருந்தது. அவர் தனது பாரத்தை கர்த்தர் மீது வைத்துவிடாமல் தொடர்ந்துபயந்ததினாலே பல வியாதிகள் அவருக்குள் வந்துவிட்டன. அவர் “நான் அஞ்சினது எனக்கு வந்தது. எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது” (யோபு 3:25,26) என்று சொல்லுகிறார். தேவபிள்ளைகளே, உங்களுடைய ஆத்துமாவை விட்டு பயத்தை அப்புறப்படுத்துங்கள்.

நினைவிற்கு:- “தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (மத்.10:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.