No products in the cart.

தினம் ஓர் ஊர் – மம்சாபுரம் (Mamsapuram) – 14/01/25
தினம் ஓர் ஊர் – மம்சாபுரம் (Mamsapuram)
மாவட்டம் – விருதுநகர்
வட்டம் – திருவில்லிபுத்தூர் (Thiruvilliputhur)
அல்லது ஶ்ரீவில்லிபுத்தூர்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – விருதுநகர்
மக்கள் தொகை – 18,635
கல்வியறிவு – 65%
மாவட்ட ஆட்சியர் – Bro. V.P.Jeyaseelan (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. L. Pitchi (I.P.S)
District Revenue Officer – Bro. R Rajendran (Virudhunagar)
மக்களவைத் தொகுதி – தென்காசி
சட்டமன்றத் தொகுதி – ஸ்ரீவில்லிபுத்தூர்
மக்களவை உறுப்பினர் – Sis. Rani Srikumar (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. E.M.Manraj (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. M.Sugandhi (Virudhunagar)
நகராட்சி தலைவர் – Bro. R.Madhavan (Virudhunagar)
நகராட்சி துணை தலைவர் – Sis. T.Dhanalakshmi
Principal District Judge – Bro. K.Jeyakumar
Chief Judicial Magistrate – Bro. M. Veeranan (Srivilliputtur)
Principal Sub Court – Bro. J.Jeya Sudhahar (Srivilliputtur)
ஜெபிப்போம்
மம்சாபுரம் (Mamsapuram) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இது ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து 8 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 51 கிமீ தொலைவிலும் உள்ளது.
மருதநாயகம் அல்லது கான்சாகிப் என்கிற முகமது யூசுப்கானின் பெயரால் மகம்மது கான்சாகிப் புரம் என்றழைக்கபட்ட ஊரே இப்பொழுது மம்சாபுரம் என்றழைக்கப்படுகிறது.
மம்சாபுரம் பேரூராட்சி ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. E.M.Manraj அவர்களுக்காகவும், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Sis. Rani Srikumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பரிசுத்த கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியின் நகராட்சி ஆணையர் Sis. M.Sugandhi அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. R.Madhavan அவர்களுக்காகவும், துணை நகராட்சி தலைவர் Sis. T.Dhanalakshmi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்காகவும், இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
மம்சாபுரம் பேரூராட்சி 52 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 18 வார்டுகளும், 5,388 வீடுகளும், 150 தெருக்களும், 18,635 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள் தொகையில் ஆண்கள் 49% மற்றும் பெண்கள் 51%. மம்சாபுரத்தில் சராசரி கல்வியறிவு 65% உள்ளது. ஆண்களின் கல்வியறிவு 74% மற்றும் பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். மம்சாபுரத்தில் 11% மக்கள் 6 வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மம்சாபுரம் பேரூராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கிற தொழில்கள் ஆசீர்வதிக்கக்பட ஜெபிப்போம். வாலிப பிள்ளைகளுக்காகவும், சிறுபிள்ளைகளுக்காகவும் ஜெபிப்போம்.
மம்சாபுரம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். மம்சாபுரம் பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம். மம்சாபுரம் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.