Daily Updates

தினம் ஓர் ஊர் – பேரையூர் (Peraiyur) – 28/02/24

தினம் ஓர் ஊர் – பேரையூர் (Peraiyur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – மதுரை

மக்கள் தொகை – 200,510

கல்வியறிவு – 63.31 %

மக்களவைத் தொகுதி – விருதுநகர்

சட்டமன்றத் தொகுதி – திருமங்கலம்

District Collector – Sis. M. S. Sangeetha (IAS)

Additional Collector (D) / Project Director – Bro. S. Saravanan (IAS)

Superintendent of Police – Bro. Dongare Pravin Umesh (IPS)

District Revenue Officer – Bro. R. Sakthivel

மக்களவை உறுப்பினர் – Bro. B. Manickam Tagore (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. R. B. Udhayakumar (MLA)

Mayor – Sis. Indirani Pon Vasanth

Deputy Mayor – Bro.T. Nagarajan

Madurai Corporation Commissioner – Bro. C. Dinesh Kumar

Deputy Commissioner – Bro. M. Dhayanithi

Deputy Commissioner – Bro. K. Saravanan

Principal District and Sessions Judge – Bro. S. Sivakadatcham (Madurai)

ஜெபிப்போம்

பேரையூர் (Peraiyur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மதுரை மாவட்டத்தின் வருவாய்த் தொகுதிகளில் இதுவும் ஒன்று. பேரையூர் நகரம் மதுரை நகருக்கு தென்மேற்கே 42 கிமீ தொலைவிலும், விருதுநகருக்கு தென்கிழக்கே 28 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. பேரையூர் நகரத்திற்காக ஜெபிப்போம்.

பேரையூர் வட்டம் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். உசிலம்பட்டி வருவாய் கோட்டத்தில் அமைந்த இந்த வட்டத்தின் தலைமையகமாக பேரையூர் நகரம் உள்ளது. தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது. இந்த வட்டத்தின் அத்திப்பட்டு, எழுமலை, மோதகம், பேரையூர், சேடப்பட்டி, தே. கல்லுப்பட்டி என ஆறு உள்வட்டங்களில், 75 வருவாய் கிராமங்கள் உள்ளது.

பேரையூர் நகரம் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. விருதுநகர் மக்களவை உறுப்பினர் Bro. B. Manickam Tagore அவர்களுக்காகவும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் Bro. R. B. Udhayakumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் பொறுப்புகளை உண்மையாக நிறைவேற்றிட ஜெபிப்போம்.

பேரையூர் என்பது மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி நகரமாகும். பேரையூர் நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. Madurai Mayor Sis. Indirani Pon Vasanth அவர்களுக்காகவும், Deputy Mayor Bro.T. Nagarajan அவர்களுக்காகவும், Madurai Corporation Commissioner Bro. C. Dinesh Kumar அவர்களுக்காகவும், Deputy Commissioner Bro. M. Dhayanithi அவர்களுக்காகவும், Deputy Commissioner Bro. K. Saravanan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இவ்வட்டம் 2,00,510 மக்கள்தொகையும் கொண்டது. இதில் 100,448 ஆண்கள் ஆகவும்; 100,062 பெண்கள் ஆகவும் உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 54,835 குடும்பங்கள் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 97.59%, இசுலாமியர்கள் 1.62% கிறித்தவர்கள் 0.49%% & பிறர் 0.28% ஆகவுள்ளனர். இந்த வட்டத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை பரிசுத்த ஆவியானவர் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

பேரையூர் நகரில் மொத்தத் தொழிலாளர்கள் 111,644 பேர் பல திறன்களைச் சார்ந்துள்ளனர். அவர்களில் 60,772 ஆண்கள் மற்றும் 50,872 பெண்கள். மொத்தம் 11,073 விவசாயிகள் விவசாயத்தை நம்பி உள்ளனர், அவர்களில் 6,330 பேர் ஆண்கள் மற்றும் 4,743 பேர் பெண்கள் உள்ளனர். பேரையூரில் 52,540 பேர் விவசாய நிலத்தில் கூலி வேலை செய்கிறார்கள், ஆண்கள் 25,154 பேர், பெண்கள் 27,386 பேர் இருக்கின்றார்கள். இவர்களுக்காகவும், இவர்கள் கையிட்டு செய்கின்ற எல்லா வேலைகளையும் கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.