No products in the cart.

தினம் ஓர் ஊர் – புளியங்குடி (Puliangudi) – 01/03/25
தினம் ஓர் ஊர் – புளியங்குடி (Puliangudi)
மாவட்டம் – தென்காசி
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 66,080
கல்வியறிவு – 77.36%
மாவட்ட ஆட்சியர் – Bro. Dr. G.S.Sameeran, I.A.S
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – Bro. Aravind, T.P.S.
District Revenue Inspector – Bro. M.Nagaranjan
மக்களவைத் தொகுதி – தென்காசி
சட்டமன்றத் தொகுதி – வாசுதேவநல்லூர்
Principal District Judge – Bro. B. Rajavel (Tenkasi)
Additional District Judge – Bro. S. Manojkumar (Tenkasi)
Chief Judicial Magistrate – Bro. C.Kathiravan (Tenkasi)
ஜெபிப்போம்
புளியங்குடி (Puliangudi), தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஓர் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். எலுமிச்சை ஏற்றுமதிக்காக இரண்டு எலுமிச்சை சந்தைகள் இருப்பதால் இது “இந்தியாவின் எலுமிச்சை நகரம்” என்று அழைக்கப்படுகிறது.
புளியங்குடி என்பது தென்காசி மற்றும் ராஜபாளையத்திற்கு இடையே அமைந்துள்ள ஒரு நகராட்சி நகரம் ஆகும். இது தென்காசி மாவட்டம் மற்றும் கடையநல்லூர் தாலுகாவின் நிர்வாக அதிகார வரம்பிற்கு உட்பட்டது. தாலுகா தலைமையகமான கடையநல்லூர், புளியங்குடியிலிருந்து 16 கி.மீ தெற்கே உள்ளது.
புளியங்குடி நகரம் அமில சுண்ணாம்பு சாகுபடிக்கு பெயர் பெற்றது. காலநிலை, மண் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகள் இந்தப் பயிரை பயிரிடுவதற்கு மிகவும் பொருத்தமானவை, இதனால் இந்த நகரம் அமில சுண்ணாம்பு சாகுபடியில் முன்னணியில் உள்ளது. பூலியன் பாண்டியனின் ஆட்சி நடந்தால் இவ்வூர் பூலியன்குடி என்று இருந்து பின்னர் காலப்போக்கில் புளியங்குடி என்று மாறியது என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்கள்.
இவ்வூரில் உலகத்தின் மிகப்பெரிய எலுமிச்சை மார்க்கெட் உள்ளது. இங்கு இருந்து பல மாநிலம் மற்றும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி நடைபெறுகிறது. புளியங்குடியில் சிறப்பான முறையில் தனியார் மருத்துவமனைகள் உள்ளன.உலக தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நகரம் திருநெல்வேலியிலிருந்து 75 கி.மீ. தொலைவிலும் மதுரையிலிருந்து கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், இராஜபாளையத்திலிருந்து 45 கி.மீ. தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும் இந்த ஊர் அமைந்துள்ளது.
இந்த நகராட்சி வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த நகராட்சியில் 66,080 மக்கள் வசிக்கின்றார்கள். அவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புளியங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். புளியங்குடி நகரத்தில் 72.22% இந்துக்கள், 20.88% முஸ்லிம்கள், 6.81% கிறிஸ்தவர்கள், 0.01% சீக்கியர்கள் மற்றும் 0.07% பிற மதங்களைப் பின்பற்றுகிறவர்கள் இருக்கிறார்கள்.
இவ்வூரில் லுங்கித் துணி நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். மேலும் நகரத்தின் பொருளாதாரம் விவசாயத்தை சார்ந்து அமைந்துள்ளது. மொத்த மக்கள்தொகையில், 29,935 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 18,563 ஆண்கள் மற்றும் 11,372 பெண்கள். நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்கள் செய்கின்ற தொழிலை ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.
புளியங்குடி நகராட்சிக்காக ஜெபிப்போம். புளியங்குடி நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் தேவைகளுக்காக, ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள விவசாயிகளுக்காக ஜெபிப்போம். அவர்களது குடும்பங்களுக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும், நகராட்சி தலைவருக்காகவும், துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம். புளியங்குடி நகராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.