Daily Updates

தினம் ஓர் ஊர் – பிள்ளாநல்லூர் (Pillanallur) – 27/07/24

தினம் ஓர் ஊர் – பிள்ளாநல்லூர் (Pillanallur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – நாமக்கல்

பரப்பளவு – 4.66 சதுர கிலோமீட்டர்கள் (1.80 sq mi)

மக்கள் தொகை – 11,181

கல்வியறிவு – 74.45%

District Collector – Sis. S. Uma, IAS

Superintendent of Police – Bro. S.Rajesh Kannan, I.P.S

District Revenue Officer – Bro. R.Suman

Project Director – Bro. S.Vadivel

District Forest Officer  – Bro. S.Kalanithi, I.F.S.,

மக்களவைத் தொகுதி – நாமக்கல்

சட்டமன்றத் தொகுதி – இராசிபுரம்

மக்களவை உறுப்பினர் – Bro. Madheshwaran (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. M. Mathiventhan (MLA)

Municipality Commissioner – Bro. A. Muthusamy (Rasipuram)

Chairman – Sis. R. Kavitha Sankar (Rasipuram)

Vice-Chairman – Sis. Gomathi Anandhan (Rasipuram)

Principal District Judge – Bro. R.Gurumurthy (Namakkal)

District Munsif  – Sis. S. Santhi (Rasipuram)

Subordinate Judge – Bro. J.K. Dhilip (Rasipuram)

ஜெபிப்போம்

பிள்ளாநல்லூர் (Pillanallur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி விசைத்தறி மற்றும் நெசவுத் தொழில் மிகுந்த பகுதியாகும்.

பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்கு தெற்கில் நாமக்கல் 21 கிமீ; கிழக்கில் இராசிபுரம் 8 கிமீ; வடக்கில் சேலம் 28 கிமீ மற்றும் மேற்கில் திருச்செங்கோடு 32 கிமீ தொலைவில் உள்ளது.

இப்பேரூராட்சி இராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் Bro. M. Mathiventhan அவர்களுக்காகவும், நாமக்கல் மக்களவை உறுப்பினர் Bro. Madheshwaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

பிள்ளாநல்லூர் நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பில்லாநல்லூர் டவுன் பஞ்சாயத்தில் 11,181 பேர் உள்ளனர், இதில் 5,553 பேர் ஆண்கள் மற்றும் 5,628 பேர் பெண்கள் உள்ளனர். இப்பேரூராட்சியில் 3,127 குடும்பங்கள் வசிக்கிறார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்து 99.45%,  முஸ்லிம் 0.15%, கிறிஸ்தவர் 0.32% மற்றும் சீக்கியர் 0.02% உள்ளனர்.

பிள்ளாநல்லூரில் ஆண்களின் கல்வியறிவு 82.88% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 66.21% ஆகவும் உள்ளது. இப்பேரூராட்சியில் செங்குந்தர் மகாஜன பள்ளிகள் மிகவும் நன்கு அறியப்பட்ட பள்ளியாகும். இதில் அருகிலுள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து மாணவர்கள் வந்து படிக்கின்றனர்.

பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் விவசாயம் மற்றும் நெசவு இரண்டும் முக்கிய வருமான ஆதாரங்கள் ஆகும்.மொத்த மக்கள்தொகையில், 5,934 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3,455 ஆண்கள் மற்றும் 2,479 பெண்கள் ஆவார்கள்.

பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள பள்ளிகளுக்காக ஜெபிப்போம். படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம். விவசாயம் மற்றும் நெசவு தொழில்களில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கின்ற தொழிலின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.