No products in the cart.

தினம் ஓர் ஊர் – பாலக்கோடு (Palakkodu) – 21/10/24
தினம் ஓர் ஊர் – பாலக்கோடு (Palakkodu)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தருமபுரி
பரப்பளவு – 2.56 சதுர கிலோமீட்டர்கள் (0.99 sq mi)
மக்கள் தொகை – 345,906
கல்வியறிவு – 58%
மக்களவைத் தொகுதி – தருமபுரி
சட்டமன்றத் தொகுதி – பாலக்கோடு
District Collector – Sis. K.Santhi I.A.S
Superintendent of Police – Bro. S.S. Maheswaran
Municipal Commissioner – Bro. S. Bhuvaneshwaran (a) Annamalai
Municipal Chairman – Sis. M.Lakshmi
Municipal Vice Chairman – Sis. A. Nithya
மக்களவை உறுப்பினர் – Bro. A. Mani (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. K. P. Anbalagan (MLA)
Principal District Judge – Bro. D.V.Aanand (Dharmapuri)
Chief Judicial Magistrate – Bro. B.Santhosh (Dharmapuri)
Judicial Magistrate – Sis. Tmt.J.Nagalakshmi@ Vijayarani (Palacode)
District Munsif – Sis. Tmt.J.Nagalakshmi@ Vijayarani (Palacode)
Subordinate Judge – Bro. K.Gopinath (Palacode)
ஜெபிப்போம்
பாலக்கோடு வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக பாலக்கோடு நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 66 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டம் பாலக்கோடு, புலிக்கரை, மாரண்டஹள்ளி, வெள்ளிச்சந்தை என 4 உள்வட்டங்கள் கொண்டது.
இந்த நகரம் தெற்கில் தருமபுரி 23 கி.மீ.; வடக்கில் காவேரிப்பட்டணம் 20 கி.மீ.; கிழக்கில் காரிமங்கலம் 17 கி.மீ.; மேற்கில் மாரண்டஹள்ளி 15 கி.மீ., தொலைவில் உள்ளன. தேன்கனிகோட்டை 33 கி.மீ. தூரத்தில் உள்ளது.ராயக்கோட்டை 24 கி.மீ. தொலைவில் உள்ளது.
பாலக்கோடு நகரமானது 2.56 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 126 தெருக்களையும் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வட்டத்தில் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாரண்டஹள்ளி பேரூராட்சி உள்ளது. இந்த பகுதியில் தக்காளி மற்றும் மாம்பழம் தொடர்பான விவசாயம் நடைபெறுகிறது. பாலக்கோடு வட்டத்தின் பரப்பளவு சுமார் 73,267 எக்டேர்களாகும்.
இந்த நகரமானது பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் Bro. K. P. Anbalagan அவர்களுக்காகவும், தருமபுரி மக்களவை தொகுதி உறுப்பினர் Bro. A. Mani அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
பாலக்கோடு வட்டத்தில் 345,906 மக்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 178,514 ஆண்கள், 167,392 பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். பாலக்கோடு மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இந்த நகரத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அருணாச்சலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஒரு பொது நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் 16,000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை என்பது தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகும். இது தமிழ்நாட்டில் இயங்கும் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ஒன்றாகும். இந்த ஆலை 1969 இல் நிறுவப்பட்டது. இந்த ஆலையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கரும்பு அரவைப் பணி நடக்கும். இதில் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். இந்தக் கரும்பாலைக்குப் பாலக்கோட்டை சுற்றியுள்ள மல்லாபுரம், பெல்ராம்பட்டி, வெள்ளிச்சந்தை, கோடியூர், வெலாம்பட்டி, திம்மம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்ட அள்ளி, சாமனூர் போன்ற பகுதிகளில் உள்ள கரும்பு விவசாயிகள் தாங்கள் விளைந்த கரும்பைப் பதிவு செய்து ஆலைக்குக் கொடுத்து வருகின்றனர். இங்கு ஆண்டுக்கு 2 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்படுகிறது.
பாலக்கோடு நகரத்திற்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இந்த பகுதியில் உள்ள விவசாய குடும்பங்களுக்காக ஜெபிப்போம். பாலக்கோடு நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கிற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். பாலக்கோடு நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.