No products in the cart.

தினம் ஓர் ஊர் – நீடாமங்கலம் (Needamangalam) – 02/12/23
தினம் ஓர் ஊர் – நீடாமங்கலம் (Needamangalam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருவாரூர்
மக்கள் தொகை – 147,451
கல்வியறிவு – 74.99%
மக்களவைத் தொகுதி – திருவாரூர்
சட்டமன்றத் தொகுதி – தஞ்சாவூர்
District Collector – Sis. T.Charusree (I.A.S)
Additional Collector (Development) /
Project Director – Sis. S. Priyanka (I.A.S)
The Superintendent of Police – Bro. S. Jeyakumar (I.P.S)
District Revenue Officer – Bro. K.Shanmuganathan
மக்களவை உறுப்பினர் – Bro. S.S.Palanimanickam (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. T.R.B.Rajaa (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. Malligha
நகராட்சி தலைவர் – Sis. S.Bhuvanapriya
நகராட்சி துணை தலைவர் – Sis. S.Akila
Chief Judicial Magistrate – Bro.T.Balamurugan (Tiruvarur)
District Munsif Cum Judicial Magistrate – Sis. A.Seethalakshmi (Needamangalam)
ஜெபிப்போம்
நீடாமங்கலம் (Needamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டம் மற்றும் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். சங்ககாலத்தில் இந்த ஊர் நீடூர் என்னும் பெயருடன் விளங்கியது. அக்காலத்தில் இது மிழலை நாட்டின் தலைநகர். எவ்வி என்னும் வள்ளல் சங்ககாலத்தில் இதனை ஆண்டுவந்ததாக கூறப்படுகிறது. நீடாமங்கலம் தாலுகாவிற்காக ஜெபிப்போம்.
நீடாமங்கலம் தமிழ்நாட்டின் காவிரி டெல்டாவில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரப் பஞ்சாயத்து ஆகும். நீடாமங்கலம் முதலில் 1997 AD வரை பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டில், இது யமுனாம்பாள்புரம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த நகரம் தஞ்சாவூருக்கு கிழக்கே 20 கிமீ தொலைவிலும், திருச்சிராப்பள்ளியிலிருந்து கிழக்கே 80 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 318 கிமீ தெற்கிலும் அமைந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் District Collector Sis. T.Charusree அவர்களுக்காகவும், Additional Collector (Development) / Project Director Sis. S. Priyanka அவர்களுக்காகவும், The Superintendent of Police Bro. S. Jeyakumar அவர்களுக்காகவும், District Revenue Officer Bro. K.Shanmuganathan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.
இந்த நகரம் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் Bro. S.S.Palanimanickam அவர்களுக்காகவும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. T.R.B.Rajaa அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களையும், இவர்கள் செய்கின்ற பணிகளையும் கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.
இந்த நகரமானது 2.62 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 58 தெருக்களும் கொண்டுள்ளது. இந்த வட்டத்தின் நகராட்சி ஆணையர் Sis. Malligha அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. S.Bhuvanapriya அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Sis. S.Akila அவர்களுக்காகவும், ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய கடமைகளை பொறுப்போடும், உண்மையோடும் நிறைவேற்றிட ஜெபிப்போம்.
நீடாமங்கலம் வட்டம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும். நீடாமங்கலம் வட்டத்தின் கீழ் 51 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த நகரத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவம் அவர்களுடைய ஆசீர்வாதத்திற்காகவும், தேவைகளுக்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஒன்றியங்களில் ஒன்றாகும். நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி நான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. நீடாமங்கலம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நீடாமங்கலத்தில் இயங்குகிறது. நீடாமங்கலம் ஊராட்சி மன்ற தலைவருக்காகவும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இவ்வட்டம் 147,440 மக்கள்தொகை கொண்டது. இதில் 72,770 ஆண்களும், 74,670 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 76.4% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் 37,256 குடும்பங்கள் இருக்கிறார்கள். மக்கள்தொகையில் இந்துக்கள் 78.82%, இசுலாமியர்கள் 18.03%, கிறிஸ்தவர்கள் 2.92% மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர். இந்த வட்டத்தில் வாழும் மக்களுக்காக அவர்களின் தேவைகளுக்காக ஜெபிப்போம். குடும்பங்களை பரிசுத்த ஆவியானவர் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
நீடாமங்கலம் தாலுக்கா வடக்கே வெண்ணாறும், தெற்கில் கோரயாறு ஆறும் கடக்கிறது. வங்காள விரிகுடாவிற்கு அருகில், வெண்ணர் ஆறு மூன்று பெரிய விநியோக நிலையங்களாகப் பிரிகிறது, வடக்கு கிளை அதன் அசல் பெயரான வெண்னார். மற்ற இரண்டு கிளைகள் பாமினியாறு மற்றும் கோரையாறு ஆகும். இந்த நகரத்தில் உள்ள நீர்நிலைகள் பாதுகாக்கப்பட ஜெபிப்போம்.
நீடாமங்கலம் தாலுகாவில் பெரும்பாலோர் விவசாயிகள். மேலும் இந்த தாலுகாவில் சேர்ந்த பலர் இப்போது வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்காவில் வேலை செய்கிறார்கள். இந்த வட்டத்தில் வாழும் விவசாயிகளுக்காகவும், விவசாய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். அவர்கள் செய்கின்ற தொழிலின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம். அவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.