Daily Updates

தினம் ஓர் ஊர் – தேவதானப்பட்டி (Devadanapatti) – 29/10/23

தினம் ஓர் ஊர் – தேவதானப்பட்டி (Devadanapatti)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தேனி

மக்கள் தொகை – 19,285

கல்வியறிவு – 65%

மக்களவைத் தொகுதி – தேனி

சட்டமன்றத் தொகுதி – பெரியகுளம்

மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)

District Revenue Officer – Sis. Jeyabharathi

District Forest Officer – Bro. S.Kowtham

மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. K.S.Saravanakumar (MLA)

நகராட்சி ஆணையர் – Bro. S.Ganesh

நகராட்சி தலைவர் –  Sis. S.Sumitha

நகராட்சி துணை தலைவர் – Bro. S.Raja Mohamed

Revenue Divisional Officer  – Sis. K.Sindhu (Periyakualam)

Town Planning Inspector  – Bro. R.Veeranan

Principal District Judge  – Sis. K. Arivoli

Additional District & Sessions Judge – Bro. P.Ganesan (Periyakulam)

Subordinate Judge  – Bro. K.Mariappan (Periyakulam)

District Munsif  – Bro. A.Kannan (Periyakulam)

Judicial Magistrate  – Bro. K.Kamalanathan (Periyakulam)

ஜெபிப்போம்

தேவதானப்பட்டி (Devadanapatti) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். தேவதானப்பட்டி என்ற பெயர் இரண்டு தமிழ் வார்த்தைகளின் கலவையாகும்: ‘தேவதானம்’ அதாவது ‘கடவுள்களுக்கு நன்கொடை’ அல்லது ‘தெய்வங்கள் அன்பளிப்பு’ மற்றும் ‘பட்டி’ அதாவது “கிராமம்.” எனவே, தேவதானப்பட்டி என்பது தெய்வங்களால் கொடையளிக்கப்பட்ட ஊர் என்று பொருள். தேவதானப்பட்டி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. தேனி மக்களவை உறுப்பினர் Bro. P.Ravindhranath அவர்களுக்காகவும், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் Bro. K.S.Saravanakumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை உண்மையாக நிறைவேற்ற ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

தேவதானப்பட்டி பேரூராட்சி 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பேரூராட்சியின் நகராட்சி ஆணையர் Bro. S.Ganesh அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. S.Sumitha அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. S.Raja Mohamed அவர்களுக்காகவும், Revenue Divisional Officer Sis. K.Sindhu அவர்களுக்காகவும், Town Planning Inspector Bro. R.Veeranan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற எல்லா பணிகளிலும் தேவகரம் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது 14 சகிமீ பரப்பும், 86 தெருக்களும் கொண்டுள்ளது. இந்த நகரத்தில் மொத்த 18,952  மக்கள் இருக்கிறார்கள். மக்கள் தொகையில் ஆண்கள் 50.8% மற்றும் பெண்கள் 49.15% உள்ளனர். மொத்தம் 4298 குடும்பங்கள் வாழ்கிறார்கள். இந்த நகரத்தின் மக்கள்தொகையில் 85.99% இந்துக்கள் மற்றும் 13.44% முஸ்லிம்கள் உள்ளனர். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் இரட்சிப்பிற்காகவும், தேவைகளுக்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை பரிசுத்த ஆவியானவர் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

தேவதானப்பட்டியில் 12,563 பேர் கல்வியறிவு பெற்றுள்ளார்கள். இவர்களில் ஆண்கள் 7,033 மற்றும் பெண்கள் 5,530 ஆவர். இந்த டவுன் பஞ்சாயத்தில் நான்கு பள்ளிகள் உள்ளன. தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஒரு மேல்நிலைப் பள்ளி, இந்து நிர்வாகத்தால் நடத்தப்படும் நடுநிலைப் பள்ளி, சர்ச் ஆஃப் சவுத் இந்தியாவால் நடத்தப்படும் ஒரு தொடக்கப் பள்ளி மற்றும் தமிழ்நாடு அரசாங்கத்தால் நடத்தப்படும் மற்றொரு கல்லாறு தொடக்கப் பள்ளி. படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் அவர்களுக்கு வேண்டிய ஞானத்தையும், பெலத்தையும் கொடுத்து பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.

இவ்வூரின் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றனர். இந்த ஊரின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் பசுமைத் தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இங்கு நெல், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புகளை அதிக அளவில் உள்ளன. இந்த விவசாயப் பணிகளுக்கு மஞ்சளாறு அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணைகளிலிருந்து நீர் பெறப்படுகிறது. விவசாயிகளுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.

தேவதானப்பட்டியில் ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. இதில் சின்ன பள்ளிவாசல் என கட்டப்பட்டு நாளடைவில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் பெரிய பள்ளிவாசலாக கட்டப்பட்டது. பண்டைய காலத்தில் வெள்ளிமலை பள்ளிவாசல் என்ற பள்ளிவாசல் உருவாக்கப்பட்டு தற்பொழுது ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பெருநாள் தொழுகை தொழ வைக்கப்படுகிறது. இவை தவிர மட்டமலை தர்கா, காட்வாவா சாகிபு தர்கா, தைலயார் அருகில் கொந்தாளம் சாயபு தர்கா என பல தர்காக்கள் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள வழிப்பாட்டு தலங்களுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.