No products in the cart.

தினம் ஓர் ஊர் – திருமங்கலம் (Tirumangalam) – 26/02/24
தினம் ஓர் ஊர் – திருமங்கலம் (Tirumangalam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – மதுரை
மக்கள் தொகை – 229,645
கல்வியறிவு – 90.68%
மக்களவைத் தொகுதி – விருதுநகர்
சட்டமன்றத் தொகுதி – திருமங்கலம்
District Collector – Sis. M. S. Sangeetha (IAS)
Additional Collector (D) / Project Director – Bro. S. Saravanan (IAS)
Superintendent of Police – Bro. Dongare Pravin Umesh (IPS)
District Revenue Officer – Bro. R. Sakthivel
மக்களவை உறுப்பினர் – Bro. B. Manickam Tagore (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. R. B. Udhayakumar (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. T. LeenaSimon
நகராட்சி தலைவர் – Sis. M. Ramya Muthukumar
நகராட்சி துணை தலைவர் – Bro. A.Adhavan Adhiyaman
Principal District and Sessions Judge – Bro. S. Sivakadatcham (Madurai)
Judicial Magistrate – Bro. A.Radhakrishnan
ஜெபிப்போம்
திருமங்கலம் (Tirumangalam) என்பது மதுரை மாவட்டத்தின் சந்திப்பு நகரம் என்றழைக்கப்படுகிறது. தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது ‘தூங்கா நகரத்தின் துணை நகரம்’ (மதுரையின் துணை மாவட்டம்) என்றும் அழைக்கப்படுகிறது. திருமங்கலம் நகராட்சிக்காக ஜெபிப்போம்.
தொல்லியல் ஆய்வாளரும் வரலாற்றாசிரியருமான குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கூற்றுப்படி, திருமங்கலத்தின் பழங்கால பெயர் ‘ராஜராஜன் திருமங்கலம்’. ‘மதுரை மீனாட்சி அம்மனுக்கு மாங்கல்யம் /திருமணம் திருமங்கலத்தில் வடிவமைக்கப்பட்டு செய்யப்பட்டது’ என்றும் அறியப்படுகிறது. எனவே திரு+மங்கள்(ய்)ம் என்று பெயர் வந்தது. மற்றபடி, திருப்பரங்குன்றத்தில் (திருமங்கலத்திற்கு அருகில்) உள்ள தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்தபோது, இங்கு “திருமாங்கல்யம்” உண்டாக்கப்பட்டதாகவும், அதனால் இப்பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
திருமங்கலம் வட்டத்தின் மூன்று உள்வட்டங்களைக் கொண்டு, புதிய கள்ளிக்குடி வருவாய் வட்டத்தை 16 ஆகஸ்டு 2018 அன்று துவங்கப்பட்டது. இவ்வட்டடத்தில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் உள்ளது. திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 38 ஊராட்சிகள் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் ஆறு உள்வட்டகளும், 108 வருவாய் கிராமங்களும் இருக்கின்றன.
திருமங்கலம் நகரம் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. விருதுநகர் மக்களவை உறுப்பினர் Bro. B. Manickam Tagore அவர்களுக்காகவும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் Bro. R. B. Udhayakumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் பொறுப்புகளை உண்மையாக நிறைவேற்றிட ஜெபிப்போம்.
திருமங்கலம் தாலுகா 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த வட்டத்தின் நகராட்சி ஆணையர் Sis. T. LeenaSimon அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. M. Ramya Muthukumar அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. A.Adhavan Adhiyaman அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இவ்வட்டத்தில் 229,645 மக்கள்தொகையும், 114,286 குடும்பங்களையும் கொண்டது. மக்கள்தொகையில் 115,359 ஆண்கள் ஆகவும்; 114,286 பெண்கள் ஆகவும் உள்ளனர். மக்கள்தொகையில் 77.7% கிராமபுறங்களில் வாழ்கின்றனர். இவர்களில் இந்துக்கள் 95.33%, இசுலாமியர்கள் 3.14%, கிறித்தவர்கள் 1.37% & பிறர் 0.15% ஆகவுள்ளனர். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம்.
திருமங்கலத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளுக்காகவும், மேல்நிலைப்பள்ளிகளுக்காகவும், ஆசிரியர் பயற்சி நிறுவனங்களுக்காக, நர்சிங் பள்ளிக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் 1908 முதல் மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு கல்வியை வழங்கி வருகின்றன. இதற்காக ஜெபிப்போம்.
இந்த நகரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்காகவும், தேசிய வங்கிகளுக்காகவும், தனியார் வங்கிகளுக்காகவும், அரசு மற்றும் தனியார் அலுவலங்களுக்காகவும் ஜெபிப்போம். கீழத்தெரு பழைய ஜூம்மா பள்ளிவாசல் 1000 வருடம் முன்பு கட்டப்பட்டது. கீழத்தெரு பள்ளிவாசல் திருமங்கலத்தில் பெரிய பள்ளிவாசல் ஆகும்.
1600களில் மதுரை மாவட்டத்தின் 80 விழுக்காடு பருத்தி விவசாயம், திருமங்கலம் வட்டத்தில் மட்டுமே நடந்தது. கரிசல் மண் உறுதியாக இருந்ததாலும், முறையான பராமரித்தலினாலும் இந்தியாவின் மற்ற பருத்தியை விட திருமங்கலம் பருத்தியே அடர் வெள்ளை நிறமாக இருந்தது. இதனாலேயே திருமங்கலத்துப் பருத்திக்கு “தின்னிவெள்ளைப் பருத்தி” என்று பெயரும் உண்டு.
திருமங்கலம் நகரத்திற்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இந்த வட்டத்தில் இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதையடுத்து இஸ்லாமியர்கள் உள்ளனர். கிறிஸ்தவர்கள் மிகவும் குறைவாகதான் இருக்கிறார்கள். ஆகவே கர்த்தர் இந்த பகுதியில் அதிகமான தேவபிள்ளைகளை எழுப்பி தர ஜெபிப்போம்.