No products in the cart.

தினம் ஓர் ஊர் – சுசீந்திரம் (Suchindram) – 24/08/23
தினம் ஓர் ஊர் – சுசீந்திரம் (Suchindram)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 11,953
கல்வியறிவு – 86%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – கன்னியாகுமரி
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
Revenue Officer (Nagercoil) – Bro. K.Sethuramalingam
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Thalavai Sundaram (MLA)
மாநகராட்சி ஆணையாளர் – Bro. Anand Mohan
Principal District Court – Bro. S.Arulmurugan
ஜெபிப்போம்
சுசீந்திரம் (Suchindram), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். ஸ்தல புராணத்தில் இருந்து இத்தலம் சுசீந்திரம் என்று பெயர் பெற்றது. கோவிலில் உள்ள பிரதான லிங்கத்தின் இடத்தில் தேவர்களின் ராஜாவான இந்திரன் சாபத்தில் இருந்து விடுபட்டதாக இந்து புராணம் கூறுகிறது. சுசீந்திரத்தில் உள்ள “சுச்சி” என்ற சொல் “சுத்திகரிப்பு” என்பதைக் குறிக்கும் சமஸ்கிருத அர்த்தத்திலிருந்து பெறப்பட்டதாக நம்பப்படுகிறது. சுசீந்திரம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
சுசீந்திரம் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு கோயில் நகரமாகும். இது கன்னியாகுமரி நகரத்திலிருந்து 11 கிமீ தொலைவிலும், நாகர்கோவில் நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவிலும், அருகிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 105 கிமீ தொலைவிலும், திருவனந்தபுரம் நகரத்திலிருந்து சுமார் 81 கிமீ தொலைவிலும் உள்ளது. சுசீந்திரம் நகரம் தாணுமாலயன் கோயிலுக்கு புகழ்பெற்றது மற்றும் திருவிதாங்கூரின் முக்கியமான கோட்டையாக இருந்தது.
இந்நகரமானது பழையாற்றின் கரையில் அமைந்த்துள்ளது. இது ஒரு முக்கியமான புனித யாத்திரை மையம் மற்றும் புகழ்பெற்ற தாணுமாலயன் கோயில் உள்ளது. கன்னியாகுமரியுடன் இணைந்த நகரம் திருவிதாங்கூரின் ஒரு பகுதியாக இருந்தது. இது 1956 இல் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.
இந்த பேரூராட்சி 7.55 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 84 தெருக்களும், 3,644 வீடுகளையும் கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளுக்காகவும், ஒவ்வொரு தெருக்களுக்காகவும், ஒவ்வொரு வீடுகளுக்காகவும் ஜெபிப்போம். வார்டு உறுப்பினர்களுக்காக அவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம்.
சுசீந்திரம் பேரூராட்சி கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Thalavai Sundaram அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
மாவட்ட கலெக்டர் Bro. P.N.Sridhar அவர்களுக்காகவும், துணை மாவட்ட கலெக்டர் Bro. H.R.Koushik அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. D.N.Hari Kiran Prased அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் அலுவலர் Bro. J.Balasubramaniam அவர்களுக்காகவும், District Forest Officer Bro. M.Ilayaraja (I.F.S) அவர்களுக்காகவும், Joint Director / Project Director Bro. P.Babu அவர்களுக்காகவும், மாநகராட்சி ஆணையாளர் Bro. Anand Mohan அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
சுசீந்திரம் நகரத்தில் மொத்தம் 11,953 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இதில் ஆண்கள் 49% மற்றும் பெண்கள் 51%. சுசீந்திரம் சராசரி கல்வியறிவு விகிதம் 86% ஆகும். சுசீந்திரத்தில், 9% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள். இந்த பேரூராட்சியில் உள்ள ஆண்களுக்காக, பெண்களுக்காக, சிறுபிள்ளைகளுக்காக, வாலிப பிள்ளைகளுக்காக ஜெபிப்போம். குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் (Suchindram Theroor Birds Sanctuary) ஒரு பாதுகாக்கப்பட்ட இடமாகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது, சுசீந்திரம் குளம் மற்றும் தேரூர் குளம் மற்றும் வேம்பன்னூர் நீர்த்தட வளாகம் ஆகியவற்றை உள்ளடக்கியப் பகுதியாகும். அனைத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் நகருக்கு அருகில் உள்ளது. இது மத்திய ஆசியப் பறக்கும் பாதையின் தென்கோடி எல்லையில் அமைந்துள்ளதால், இடம்பெயர் பறவைகளுக்கு முக்கியமான இடமாகும்.
சுசீந்திரம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் செய்கின்ற எல்லா வேலைகளிலும் கர்த்தருடைய கரம் அவர்களோடுகூட இருந்து பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம். சுசீந்திரம் பேரூராட்சியில் உள்ள மக்கள் மத்தியில் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.