No products in the cart.
தினம் ஓர் ஊர் – சாம்பவர் வடகரை(Sambavar Vadagarai) – 10/08/23

தினம் ஓர் ஊர் – சாம்பவர் வடகரை
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தென்காசி
மக்கள் தொகை – 16,709
கல்வியறிவு – 74.28%
மக்களவைத் தொகுதி – தென்காசி
சட்டமன்றத் தொகுதி – கடையநல்லூர்
மாவட்ட ஆட்சியர் – Bro. Durai Ravichandran (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. E.T.Samson (I.P.S)
District Revenue Inspector – Bro. M.Nagaranjan
Special Revenue Inspector – Bro. A.Abdul Kadar @ Abu
மக்களவை உறுப்பினர் – Bro. Dhanush M.Kumar (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. C.Krishnamurali (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. Ravichandran
நகராட்சி தலைவர் – Bro. A.Habibur Rahman
நகராட்சி துணை தலைவர் – Bro. M.Rajaiah
வருவாய்துறை ஆணையர் – Bro. M.Duraikumarasamy (Kadayanallur)
Principal District Munsif – Bro. K. Baskar
Additional District Judge – Sis. G.Anuradha
ஜெபிப்போம்
சாம்பவர் வடகரை (Sambavar Vadagarai), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தின், கடையநல்லூர் வட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை பேரூராட்சி ஆகும். இந்த பேரூராட்சி திருநெல்வேலியிலிருந்து 60 கிமீ; சுரண்டையிலிருந்து 5 கிமீ; ஆய்க்குடியிலிருந்து 5 கிமீ; கடையநல்லூரிலிருந்து 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சாம்பவர் வடகரை பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
தென்காசி மாவட்டத்தில் ஹனுமன்நதி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள சாம்பவர்வடகரை, ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ள மேலூர் (மேல் நகரம்) மற்றும் கீழூர் (கீழ் நகரம்) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் சாம்பவர் (ஒரு துணை சாதி), வட (வடக்கு) மற்றும் கரை (கரை) ஆகிய தமிழ் வார்த்தைகளின் போர்ட்மேன்டோ ஆகும்.
இப்பேரூராட்சி கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. C.Krishnamurali அவர்களுக்காகவும், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Dhanush M.Kumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
கடையநல்லூர் நகராட்சி ஆணையர் Bro. Ravichandran அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. A.Habibur Rahman அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. M.Rajaiah அவர்களுக்காகவும், வருவாய்துறை ஆணையர் Bro. M.Duraikumarasamy (Kadayanallur) அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களை கர்த்தருடைய ஆளுகைக்குள்ளாக ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.
இப்போரூராட்சி 11 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 102 தெருக்களும் கொண்டுள்ளது, ஒவ்வொரு வார்டுகளுக்காக, வார்டு உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம். அவர்களுக்கு கொடுக்கப்பட பணிகளுக்காக ஜெபிப்போம். வார்டுகளில் உள்ள மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட ஜெபிப்போம்.
சாம்பவர் வடகரை பேரூராட்சியில் மொத்தம் 16,709 மக்கள் வாழ்கிறார்கள். இந்த நகரத்தில் 4,423 குடும்பங்கள் உள்ளன. இங்கு வாழும் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம், குடும்பங்களை கர்த்தருடைய கரம் ஆளுகை செய்ய ஜெபிப்போம். குடும்பங்களில் உள்ள பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.
சாம்பவர் வடகரை பேரூராட்சி 1956 ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இதன் பெயர் சிவபெருமானின் பண்டைய பூசாரிகளுக்குப் பிறகு சாம்பவர் சாதியைக் குறிக்கிறது. தாம்பிராபரணி ஆற்றின் காணிக்கையாக ஹனுமன்நதி ஆற்றங்கரையில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சிவன் கோயிலே கிராமத்தின் முக்கிய ஈர்ப்பாகும். சால்வேஷன் ஆர்மி தேவாலயம் (தென்காசி பிரிவின் கீழ்), CSI தேவாலயம் மற்றும் ஒரு மசூதி ஆகியவை இப்பகுதியில் உள்ளன. இந்த பேரூராட்சியில் உள்ள வழிபாட்டு தளங்களுக்காக ஜெபிப்போம்.
நகரத்தில் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி, மூன்று அரசு தொடக்கப் பள்ளிகள், ஒரு சால்வேஷன் ஆர்மி தொடக்கப் பள்ளி மற்றும் ஒரு தனியார் பள்ளி உள்ளது. படிக்கின்ற பிள்ளைகளுக்காக, ஆசிரியர்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்களுக்கு வேண்டிய ஞானத்தையும், பெலத்தையும் கட்டளையிட ஜெபிப்போம்.
சாம்பவர் வடகரை பேரூராட்சியில் உள்ள மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவந்து அநேக பிள்ளைகள் கர்த்தருக்காக எழும்பிட ஜெபிப்போம். அநேக தேவ ஊழியர்களை கர்த்தர் எழுப்பி தரவும், புதிய சபைகள் கட்டப்படவும் ஜெபிப்போம். சாம்பவர் வடகரை பேரூராட்சியை கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.
