No products in the cart.

தினம் ஓர் ஊர் – ஒசூர் (Hosur) – 12/12/24
தினம் ஓர் ஊர் – ஒசூர் (Hosur)
மாவட்டம் – கிருஷ்ணகிரி
மாநிலம் – தமிழ்நாடு
பரப்பளவு – 190.3 km2 (73.5 sq mi)
மக்கள் தொகை – 539,663
கல்வியறிவு – 88.24%
District Collector – Sis. K. M. Sarayu, I.A.S.,
Superintendent of Police – Bro. P. Thangadurai I.P.S
District Revenue Officer – Bro. Sadhanaikural
Sub Collector – Sis. Priyanga
மக்களவைத் தொகுதி – கிருஷ்ணகிரி
சட்டமன்றத் தொகுதி – ஒசூர்
மக்களவை உறுப்பினர் – Bro. K. Gopinath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Y. Prakaash (MLA)
Deputy Mayor – Bro. C. Anandaiah (Hosur)
Corporation Commissioner – Bro. H. S. Srikanth IAS (Hosur)
City Health Officer – Dr. V. Prabhakaran (Hosur)
Principal District and Sessions Judge – Bro. S.Kumaraguru (Krishnagiri)
Principal Subordinate Judge – Bro. P.Shunmugaraj (Hosur)
District Munsif cum Judicial Magistrate – Bro. V.Agavithan (Hosur)
ஜெபிப்போம்
ஒசூர் மாநகராட்சி (Hosur City Municipal Corporation) தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மாநகராட்சி ஆகும். ஒசூர் நகராட்சி பிப்ரவரி 13, 2019-ஆம் ஆண்டு 13-ஆவது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தமிழகத்தின் மாவட்ட தலைநகர் அல்லாத முதல் மாநகராட்சி என்கிற பெருமை ஒசூர் மாநகராட்சியையே சேரும். பிப்ரவரி 2022-இல் மாநகராட்சிக்கான முதல் தேர்தல் நடைபெற்றது.
ஒசூர் செவிடபாடி என்ற தமிழ்ப்பெயரால் அழைக்கப்பட்டது என்றும், 13-ஆம் நூற்றாண்டில் போசளர் மன்னன் வீர இராமநாதன் ஆட்சிக்கால கல்வெட்டில் சூடவாடி எனவும் மருவி குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் 1674-ஆம் ஆண்டைச் சேர்ந்த மைசூர் மன்னர்கள் கால கல்வெட்டில்தான் ஹொசாவூரு என்ற பெயர் குறிக்கப்படுகிறது ஹொசவூரு-ஹொசூரு-ஹொசூர்-ஒசூர் என்று மாற்றம் அடைந்துள்ளது. ஹொச என்ற கன்னடச் சொல்லின் பொருள் புதிய என்பதாகும். ஒசூர் என்பதன் பொருள் புதூர் (புதிய ஊர்) என்பதாகும்.
ஒசூர் மாநகராட்சி 45 வார்டு உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. Deputy Mayor Bro. C. Anandaiah அவர்களுக்காகவும், Corporation Commissioner Bro. H. S. Srikanth அவர்களுக்காகவும், City Health Officer Dr. V. Prabhakaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர்களை இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இந்த நகரம் ஒசூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. Y. Prakaash அவர்களுக்காகவும், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் Bro. K. Gopinath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாக்கும் கரம் இவர்களை ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம்.
ஒசூர் வட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக ஒசூர் மாநகராட்சி உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 92 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஒசூர் வட்டத்தின் சூளகிரி ஊராட்சி ஒன்றியபகுதிகளைக் கொண்டு சூளகிரி வட்டம் நிறுவப்பட்டது.
இவ்வட்டத்தின் மக்கள்தொகை 539,663 ஆகும். அதில் 277,136 ஆண்களும், 262,527 பெண்களும் உள்ளனர். 129,512 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 57.5% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.16%, இசுலாமியர்கள் 5.98%, கிறித்தவர்கள் 2.6% மற்றும் பிறர் 0.26% ஆகவுள்ளனர்.
இந்நகரில் இயந்திரத்தொழில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. டிவிஎஸ் மோட்டார், அசோக் லேலண்ட், டைட்டன் நிறுவனம், இந்துஸ்தான் மோட்டர்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், இந்துஸ்தன் யூனிவர்சல், கேடர்பிள்ளர், டாட்ரா வேக்ட்ரா, தநீஜா ஏரொஸ்பேஸ் & ஏவிஎசன் லிமிடெட், பாடா இந்திய லிமிடெட், ஆரொ கிரைநைட், மதுகான் கிரைநைட், ஏஃசஈடு, INEL-இந்தியா நிப்பான் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், சுந்தரம் பாஸ்ட்னர்ஸ், முதலான நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இங்குள்ளன. தமிழக அரசால் 1538.41 ஏக்கரில் தொடங்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டை (சிப்காட்-1 மற்றும் சிப்காட்-2) இங்கு செயல்பட்டு வருகிறது.
ஒசூரில் உள்ள கால்நடைப் பண்ணை 1824-ஆம் ஆண்டு குதிரை வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கம் செய்யவும் பிரித்தானிய அரசாங்கத்தால் 1641.41 ஏக்கரில் நிறுவப்பட்டது. இந்த பண்ணை ஆசியாக் கண்டத்தில் உள்ள மிகப்பெரிய பண்ணைகளில் ஒன்று ஆகும். இங்கு ஜெர்சி மாடுகள், சிவப்பு சிந்தி, காங்கேயம் ஆகிய மாட்டினங்களும், மேச்சேரி செம்மறி, திருச்சி கருப்பு செம்மறி போன்ற செம்மறி ஆடுகளும், கொடி ஆடு, தலைச்சேரி போன்ற வெள்ளாட்டு இனங்களும், லார்ஜ் ஒயிட் யார்க்ஷயர் வெண் பன்றி இனமும், கத்தியவார், தூய இனம் ஆகிய குதிரை இனங்களும், கிரிராஜா, அசில், வெள்ளை லெக்கார்ன் ஆகிய கோழி இனங்களும், வான்கோழிகள் ஆகியவை வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.
ஓசூர் ஒரு தொழில்துறை மையமாக உள்ளது மற்றும் பல ஆட்டோமொபைல் மற்றும் உற்பத்தித் தொழில்களைக் கொண்டுள்ளது. ஓசூரைச் சுற்றி பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. தக்காளி, முட்டைக்கோஸ், வெங்காயம், மாம்பழம், கேப்சிகம், கேரட், வெள்ளரி, பீன்ஸ், கொத்தமல்லி இலைகள், டர்னிப்ஸ் மற்றும் முள்ளங்கி ஆகியவை முக்கியமாக விளைவிக்கப்படுகின்றது. ரோஜாக்களும் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன.
ஒசூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காகவும், மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்காகவும், தனியார் மற்றும் அரசு அலுவலங்களில் வேலை செய்கின்றவர்களுக்காகவும், சிறு வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை பாதுகாத்து வழிநடத்தும்படி பாரத்தோடு ஜெபிப்போம்.
ஒசூர் மாநகராட்சிக்காக ஜெபிப்போம். ஒசூர் மாநகராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்களின் இரட்சிப்பிற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் காணப்படுகின்ற பொருளாதார சூழ்நிலைகள் மாற ஜெபிப்போம். இந்த மாநகராட்சியில் செயல்படும் தொழில் நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள கால்நடைகள், பறவையினங்களுக்காக ஜெபிப்போம். அவைகள் பாதுகாக்கப்பட ஜெபிப்போம். இந்த நகரத்தின் இயற்கை வளங்களுக்காக ஜெபிப்போம். ஒசூர் மாநகராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.