No products in the cart.

தினம் ஓர் ஊர்-எழுமலை (Elumalai) – 16/03/24
தினம் ஓர் ஊர்-எழுமலை (Elumalai)
மாநிலம்-தமிழ்நாடு
மாவட்டம்-மதுரை
மக்கள் தொகை-15,746
கல்வியறிவு-72.31 %
மக்களவைத் தொகுதி-தேனி
சட்டமன்றத் தொகுதி-உசிலம்பட்டி
District Collector-Sis. M. S. Sangeetha (IAS)
Additional Collector (D) / Project Director-Bro. S. Saravanan (IAS)
Superintendent of Police-Bro. Dongare Pravin Umesh (IPS)
District Revenue Officer-Bro. R. Sakthivel
மக்களவை உறுப்பினர்-Bro. P. Ravindhranath (MP)
சட்டமன்ற உறுப்பினர்-Bro. P. Ayyappan (MLA)
Mayor-Sis. Indirani Pon Vasanth
Deputy Mayor-Bro.T. Nagarajan
Madurai Corporation Commissioner-Bro. C. Dinesh Kumar
Deputy Commissioner-Bro. M. Dhayanithi
Deputy Commissioner-Bro. K. Saravanan
Principal District and Sessions Judge-Bro. S. Sivakadatcham (Madurai)
ஜெபிப்போம்
எழுமலை (Elumalai) (எழில்மிகு எழுமலை), என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இந்நகரமானது நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. தெற்கே சதுரகிரி, மேற்கே மாவூத்து வேலப்பர் மலை, வடக்கே குதிரை கிரி என்கிற வாசிமலை மற்றும் கிழக்கே திடியன் மலை உள்ளது. எழுமலை பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.
மாவட்ட ஆட்சியர் Sis. M. S. Sangeetha அவர்களுக்காகவும், Additional Collector (D) / Project Director Bro. S. Saravanan அவர்களுக்காகவும், Superintendent of Police Bro. Dongare Pravin Umesh அவர்களுக்காகவும், District Revenue Officer Bro. R. Sakthivel அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களையும், இவர்கள் செய்கின்ற பணிகளையும் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியானது உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. P. Ayyappan அவர்களுக்காகவும், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற பணிகளில் தேவ சித்தம் நிறைவேறிட ஜெபிப்போம்.
எழுமலை நகர் 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. எழுமலை டவுன் பஞ்சாயத்தில் 15,746 மக்கள்தொகை உள்ளது. இதில் 7,890 ஆண்கள் மற்றும் 7,856 பெண்கள் உள்ளனர். ஏழுமலையில் ஆண்களின் கல்வியறிவு 74.67% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 55.60% ஆகவும் உள்ளது. இந்த நகரத்தில் மொத்தம் 4,224 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.
மொத்த மக்கள் தொகையில், 8,006 பேர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 4,722 ஆண்கள் மற்றும் 3,284 பெண்கள் ஆவார்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்களின் தேவைகளுக்காகவும் ஜெபிப்போம். கையிட்டு செய்யும் எல்லா வேலைகளையும் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.
எழுமலை நகரில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியை அரசு நடத்துகிறது. மேலும் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ விஸ்வ வித்யாலயா தொடக்கப் பள்ளி. கூடுதலாக, பல ஆரம்ப பள்ளிகள் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சேவை செய்கின்றன. திருவள்ளுவர் குழுமம் சூலபுரம்/மல்லாபுரத்தில் 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதற்காக ஜெபிப்போம்.