No products in the cart.

தினம் ஓர் ஊர் – உள்ளிக்கோட்டை (Ullikkottai) – 13/12/23
தினம் ஓர் ஊர் – உள்ளிக்கோட்டை (Ullikkottai)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருவாரூர்
மக்கள் தொகை – 5260
கல்வியறிவு – 82.58%
மக்களவைத் தொகுதி – தஞ்சாவூர்
சட்டமன்றத் தொகுதி – மன்னார்குடி
District Collector – Sis. T.Charusree (I.A.S)
Additional Collector (Development) /
Project Director – Sis. S. Priyanka (I.A.S)
The Superintendent of Police – Bro. S. Jeyakumar (I.P.S)
District Revenue Officer – Bro. K.Shanmuganathan
மக்களவை உறுப்பினர் – Bro. S.S.Palanimanickam (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. T.R.B.Rajaa (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. V.Narayanan
நகராட்சி தலைவர் – Bro. Mannai T.Chozharajan
நகராட்சி துணை தலைவர் – Bro. R.Kailasam
நகராட்சி மேலாளர் – சகோ. மீரான் மன்சூர்
கட்டிட ஆய்வாளர் – சகோ. விஜயகுமார்
Town Planning Inspectors – Bro. M.Dhanapal & Sis. J.Kavitha
Chief Judicial Magistrate – Bro.T.Balamurugan (Tiruvarur)
Subordinate Court – Bro. K.Sakthivel (Mannargudi)
Judicial Magistrate Court No-II – Bro. M.Sureshkarthik (Mannargudi)
ஜெபிப்போம்
உள்ளிக்கோட்டை (Ullikkottai) தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மன்னார்குடி வட்டத்துக்கு உட்பட்ட மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இயற்கையெழில் சூழ்ந்த ஊர் ஆகும். மன்னார்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு வடசேரி வழியாக செல்லும் சாலையில் 9 கி.மீ.தொலைவில் உள்ளது. உள்ளிக்கோட்டை நகரத்திற்காக ஜெபிப்போம்.
உள்ளிக்கோட்டைக்கு அருகே மகாதேவப்பட்டினத்தில் பழமையான கோட்டை உள்ளது. முற்காலத்தில் வணிகர்கள் தங்கி செல்லும் இடமாக இருந்து உள்ளது. உள்ளே கோட்டை உள்ளது என்பதை அறிய இப்போது அழைக்கப்படும் உள்ளிக்கோட்டை வழியாக மகாதேவப்பட்டினத்துக்கு செல்லும் வழியில் ‘உள்ளே கோட்டை’ என்று பலகை இருந்ததாகவும், அதுவே காலபோக்கில் மறுவி உள்ளிக்கோட்டை என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஊரைச் சுற்றியுள்ள வடசேரி, தளிக்கோட்டை, மகாதேவப்பட்டினம், திருப்பாலக்குடி, ஆலங்கோட்டை, கீழதிருப்பாலக்குடி, கண்டிதம்பேட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பரவாக்கோட்டை போன்ற ஊர்களுக்கு இது ஒரு மையப் பகுதியாக விளங்குகிறது. இந்த நகரரை சுற்றியுள்ள ஊர்களுக்காகவும், மக்களுக்காகவும் ஜெபிப்போம்.
உள்ளிக்கோட்டை மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் Bro. Bro. T.R.B.Rajaa அவர்களுக்காகவும், தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் Bro. S.S.Palanimanickam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
உள்ளிக்கோட்டையில் 1960 களின் பிற்பகுதிகளில் அதாவது 1966,67,68 களில் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த அமரர் சு.பக்கிரிசாமியின் பெரும் முயற்சியால் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று கொண்டுவரப்பட்டது. தற்போது அது பெரிதாக வளர்ந்து சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. உள்ளிக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையானது உள்ளிக்கோட்டை மற்றும் அதைச்சுற்றி உள்ள கிராமங்களுக்கான முக்கிய மருத்துவமனையாக உள்ளது. இதற்காக ஜெபிப்போம்.
இந்த நகரத்தில் உழவுத் தொழிலே முக்கியமானது. நெல், மக்காச்சோளம், கரும்பு, நிலக்கடலை, உளுந்து, எள் போன்றவை பயிர் செய்யப்படுகின்றன. காவிரியின் கிளை நதியான வடவாறு வாய்க்கால் இவ்வூரின் வழியே பாய்கிறது. ஆற்றுப்பாசனத்தை நம்பி இருந்த இம்மக்கள், காவிரி நீர் கானல் நீராகி விட்டதால், தற்போது விவசாயத்திற்கு முழுவதும் ஆழ்துளைக்கிணறுகளையே நம்பி இருக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். நிலத்தடி நீர் மட்டம் 15 அடியிலிருந்து தற்போது 200 அடிக்கு கீழிறங்கி விட்டது. வேளாண்மை நடவடிக்கைகளுக்கு இடையே பெரும்பான்மையினர் சிங்கப்பூர், மலேசியா, லண்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு போன்ற வெளிநாடுகளில் பணி செய்து பொருளீட்டுகின்றனர். விவசாயத்திற்கு தேவையான மழையை கர்த்தர் கொடுக்கும்படி ஜெபிப்போம். வெளிநாடுகளில் வேலை செய்து வருபவர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
இவ்வூரின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததற்கு சிங்கப்பூர் ஓர் முக்கிய காரணமாகும். சுமார் மூன்று தலைமுறைகளாக உள்ளிக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி உள்ளனர். பெரும்பாலும் வீட்டிற்கு ஒருவர் சிங்கப்பூரில் பணிசெய்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் ஒப்பந்தப் பணியிலோ, நிரந்தரவாசியாகவோ அல்லது சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவராகவோ உள்ளனர். உள்ளிக்கோட்டையை சின்ன சிங்கப்பூர் என்றும் வேடிக்கையாகக் குறிப்பதுண்டு.
உள்ளிக்கோட்டை நகரத்தில் மின்வாரியத்தின் இளநிலைப் பொறியாளர் அலுவலகம் ஒன்றும், கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகமும், பத்திரப் பதிவு அலுவலகமும் உள்ளன. ஊராட்சி மன்றத்திற்கு ஒரு அலுவலகமும் உள்ளது. மேலும் ஒரு நூலகமும், அரசு தலைமைத்தபால் நிலையம், தொலைபேசி இயக்ககம் மற்றும் அரசு கால்நடை பராமரிப்பு மருத்துவமனை ஆகியவை உள்ளன.
உள்ளிக்கோட்டை ஊராட்சி மன்னார்குடி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஊராட்சி மன்ற தலைவருக்காகவும், துணை தலைவருக்காகவும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகை 5260 மக்கள் வசிக்கின்றனர் இதில் 2683 ஆண்கள், 2577 பெண்கள் உள்ளனர்.இங்கு மொத்தம் 1401 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். குடும்பங்களை பரிசுத்த ஆவியானவர் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
உள்ளிக்கோட்டை முதல் கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 82.58% ஆக உள்ளது. இதில் ஆண்களின் கல்வியறிவு 89.10% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 75.89% ஆகவும் உள்ளது. 1913 ஆம் ஆண்டு இங்கு துவக்கப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இப்போது இங்கு அரசு மேனிலைப் பள்ளி ஒன்றும், ஆரம்பப் பள்ளி இரண்டும் மற்றும் ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியும் உள்ளன.இங்குள்ள பள்ளிகளுக்காகவும், பள்ளி மாணவர்களுக்காகவும்இ ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம்.
உள்ளிக்கோட்டை மொத்த மக்கள் தொகையில் 2098 பேர் முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பிரதான வேலையில் ஈடுபட்டுள்ள 2098 தொழிலாளர்களில், 803 பேர் விவசாயிகள் மற்றும் 907 பேர் விவசாயத் தொழிலாளர்கள். இவர்களுக்காகவும், இவர்களுடைய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். மேலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் அவர்களோடுகூட இருந்து வழித்திட ஜெபிப்போம்.