No products in the cart.

தினம் ஓர் ஊர் – இராயகிரி(Rayagiri) – 08/08/23
தினம் ஓர் ஊர் – இராயகிரி
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தென்காசி
மக்கள் தொகை – 11223
கல்வியறிவு – 61%
மக்களவைத் தொகுதி – தென்காசி
சட்டமன்றத் தொகுதி – வாசுதேவநல்லூர்
மாவட்ட ஆட்சியர் – Bro. Durai Ravichandran (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. E.T.Samson (I.P.S)
District Revenue Inspector – Bro. M.Nagaranjan
Special Revenue Inspector – Bro. A.Abdul Kadar @ Abu
மக்களவை உறுப்பினர் – Bro. Dhanush M.Kumar (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. T.Sadhan Tirumalaikumar (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. S.M.Farijan (Tenkasi)
நகராட்சி தலைவர் – Bro. R.Sadhir
நகராட்சி துணை தலைவர் – Bro. K.N.L.Subbaiah
Municipal Engineer – Bro. R.Jayaseelan
Principal District Munsif – Bro. K. Baskar
Additional District Judge – Sis. G.Anuradha
District Munsif cum Judicial Magistrate – Sis. P. Jeyakaleeswar
ஜெபிப்போம்
இராயகிரி (Rayagiri), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும். இந்த ஊரின் வடக்கே சிவகிரி எனும் ஊரும், தெற்கே வாசுதேவநல்லூர் எனும் ஊரும், கிழக்கே கரிவலம்வந்தநல்லூர் எனும் ஊரும் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் எல்லைகளாக உள்ளன. இராயகிரி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
இராயகிரி பேரூராட்சி திருநெல்வேலியிலிருந்து 80 கிமீ தொலைவிலும், சங்கரன்கோவிலிருந்து 24 கிமீ தொலைவிலும், சிவகிரியிலிருந்து 7 கிமீ தொலைவிலும், வாசுதேவநல்லூரிலிருந்து 10 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த பேரூராட்சிக்கு அருகில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி 8.5 ச.கிமீ பரப்பும், 15 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்டுள்ளது. இங்குள்ள ஒவ்வொரு வார்டுகளுக்காக, வார்டு உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியினை உண்மையோடு நிறைவேற்ற ஜெபிப்போம்.
இராயகிரி பேரூராட்சி வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. T.Sadhan Tirumalaikumar அவர்களுக்காகவும், மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Dhanush M.Kumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.
இராயகிரி பேரூராட்சி மேற்குத் தொடர்ச்சி மலைக்கு கிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேற்படி மலையிலிருந்து தோன்றும் ஆற்று நீர் இராஜசிங்கபேரி குளம், குலசேகரன்பேரி குளம் ஆகிய குளங்களுக்கு நீர் வரத்தாக உள்ளது. இராஜசிங்கபேரி குளத்திலிருந்து கடம்பன்குளம், மேலப்பண்ணந்தி குளம், கீழப்பண்ணந்தி குளம், ஆண்டான் குளம், சமுத்திரப்பேரி குளம் மற்றும் மேலக்கரிசல்குளம் போன்ற குளங்களுக்கு நீர் கிடைக்கிறது. இந்த பேரூராட்சியில் உள்ள நீர்நிலைகளுக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியில் மொத்தம் 11223 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் ஆண்கள் 52% மற்றும் பெண்கள் 48% உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 3270 குடும்பங்கள் இருக்கிறார்கள். ராயகிரியில் ஆண்களின் கல்வியறிவு 72% மற்றும் பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். ராயகிரி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.
இராயகிரியில், ஆறு தொடக்கப் பள்ளிகள், ஒரு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஒரு மேல்நிலைப் பள்ளி மற்றும் இரண்டு தனியார் மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இந்த பேரூராட்சியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக, படிக்கும் பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காக ஜெபிப்போம்.
இராயகிரியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கின்ற தொழிலுக்காகவும், கையின் பிரயாசங்களை ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம். அவர்கள் குடும்பங்களின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.