Daily Updates

தினம் ஓர் ஊர் – ஆயக்குடி (Ayakkudi) – 14/04/25

தினம் ஓர் ஊர் – ஆயக்குடி (Ayakkudi)

வட்டம் – பழனி

மாவட்டம் – திண்டுக்கல்

மாநிலம் – தமிழ்நாடு

மக்கள் தொகை – 27,156

மொத்த பரப்பளவு  – 56.56 சதுர கிலோமீட்டர்கள் (21.84 sq mi)

கல்வியறிவு – 75.8%

மக்களவைத் தொகுதி – திண்டுக்கல்

சட்டமன்றத் தொகுதி – பழனி

District Collector  – Bro.S. Saravanan, IAS

District Revenue Officer  – Sis. R.Jeyabharathi

Superintendent of PoliceRevenue  – Dr.A.Pradeep IPS

PRINCIPAL DISTRICT AND

SESSIONS JUDGE  – Sis. TMT.A.MUTHU SARATHA

Additional District Judge  – Sis. MT.A.MALARVIZHI (Palani)

Principal Sub Judge  – Sis. TMT.K.RENUGADEVI (Palani)

ஜெபிப்போம்

ஆயக்குடி (Ayakkudi) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இப்பகுதியை ஆய் மன்னர்கள் ஆண்டதால் ஆயக்குடி என்ற பெயர் வந்தது. இப்பகுதியை வேளிர் குல ஆயர் மன்னர்கள் ஆண்டனர். திண்டுக்கல் – பழநி சாலையில் அமைந்த ஆயக்குடி பேரூராட்சி, பழநியிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், திண்டுக்கல்லிருந்து 53 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

ஆயக்குடி என்பது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து நகரமாகும். இந்த நகரம் கொய்யாவுக்கு பெயர் பெற்றது. கொடைக்கானலின் சரிவுகளில் இது இயற்கையால் நிரம்பியுள்ளது.ஆயக்குடி என்பது முதலில் ஆயர் (மேய்ப்பர்) குடி (வசிக்கும் இடம்) என்று பொருள்படும், இது சங்க நிலப்பரப்பின் “முல்லை” நிலத்தில் கால்நடை வளர்ப்பவர்களின் குடியேற்றத்துடன் தன்னை இணைத்துக் கொள்கிறது.

ஆயக்குடி நகரம் 18 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. 56.56 சகி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 64 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பழனி சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

ஆயக்குடி பேரூராட்சியின் மக்கள் தொகை 27,156 ஆகும், இதில் 13,533 ஆண்கள் மற்றும் 13,623 பெண்கள். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 2526 ஆகும், இது ஆயக்குடியின் மொத்த மக்கள் தொகையில் 9.30% ஆகும். ஆயக்குடி பேரூராட்சியில் 7,314 குடும்பங்கள் வசிக்கிறார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்து 84.18%, முஸ்லிம் 14.91%, கிறிஸ்தவர் 0.80% மற்றும் சீக்கியர் 0.07% உள்ளனர்.

இப்பகுதியில் எலுமிச்சை, இலவம் (பஞ்சு), கொய்யா, மா, தென்னை ஆகியன முக்கிய பயிர்களாகும். பருத்தி சாகுபடியும் உண்டு.சுவை மிகுந்த ஆயக்குடி கொய்யா தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. மொத்த மக்கள் தொகையில், 13,236 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 8,175 பேர் ஆண்கள், 5,061 பேர் பெண்கள். இவ்வூரில் செயல்படும் ஆயக்குடி இலவச பயிற்சி மையம் தமிழக தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கிறது.மேலும் இங்கு பயின்ற மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு அலுவலகத்திலும் வேலை பார்த்து வருகிறார்கள்.

ஆயக்குடி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். ஆயக்குடி பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.  ஆயக்குடி பேரூராட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள விவசாய குடும்பங்களுக்காக ஜெபிப்போம். ஆயக்குடி பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.