SLOT GACOR HARI INI BANDAR TOTO bandar togel bo togel situs toto musimtogel toto slot
Appam, Appam - Tamil

டிசம்பர் 05 – மூன்று காரியங்கள்!

“உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும் (சங். 18:35).

இந்த வசனத்தைச் சற்று ஆழமாக சிந்தித்துப்பாருங்கள். மூன்று முறை “உம்முடைய” என்கிற வார்த்தை அடுத்தடுத்து வருகிறதை நாம் காணலாம். 1. உம்முடைய கேடகம் 2. உம்முடைய வலது கரம் 3. உம்முடைய காருணியம். இம்மூன்றையும் சற்றே சிந்திப்போமா?

  1. உம்முடைய இரட்சிப்பின் கேடகம்:- வேதம் சொல்லுகிறது: “தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்” (நீதி. 30:5).

கேடகம் என்ற வார்த்தையை சற்றுச் சிந்தித்துப்பாருங்கள். அது நமக்கு பாதுகாப்பைத் தருகிறது. சாத்தான் நம்மேல் தீய அம்புகளை எய்யும்போதும், பொல்லாத மனுஷர் பில்லிசூனியங்களைக்கொண்டு நம்மைத் தாக்கும்போதும், கர்த்தர் ஒருவரே நமக்கு கேடகமாய் இருக்கிறார்.

நம்மேல் வரவேண்டிய ஆக்கினையை இயேசு கிறிஸ்து தம்மேல் சுமந்தார். யுத்தக்களத்திலே விரோதி விஷ அம்புகளை எய்வான். ஈட்டிகளை வீசுவான். எதிர்த்து நிற்கும் வீரன் தன்னுடைய கைகளில் கேடகம் ஏந்தி நிற்கும்பட்சத்தில் அவன் பாதுகாக்கப்படுவான். தேவபிள்ளைகளே, கர்த்தரே உங்களுக்கு கேடகமாய் இருக்கிறார்.

  1. உம்முடைய வலது கரம்:- கர்த்தருடைய கரத்தை நோக்கிப்பாருங்கள். அவருடைய கரத்தைக்குறித்து, அது ஓங்கிய புயம் என்றும், உயர்ந்த கரம் என்றும் வேதம் சொல்லுகிறது. அன்பு தேவன் தம்முடைய நித்திய புயத்திற்குள்ளாக, வல்லமையான கரங்களுக்குள்ளாக நம்மைப் பாதுகாக்கிறார்.

“அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்” (உபா. 33:27) என்று மோசே சொல்லி, இஸ்ரவேல் ஜனங்களை தேவனுடைய பலத்த கரத்திலே ஒப்புவித்தார்.

காரணம், தேவனுடைய கரங்கள் என்றும் நிலைத்து நிற்கும் கரங்களாயும், நம்முடைய கால்கள் கல்லில் இடறாதபடி பாதுகாக்கும் கரங்களாகவும் (1 சாமு. 2:9), நம்மை முதிர்வயதுமட்டும் தூக்கிச் சுமக்கும் கரங்களாகவும் இருக்கின்றன (ஏசா. 46:4). தேவனுடைய கரம் உங்களோடுகூட இருக்குமென்றால் நீங்கள் பாதுகாப்பிற்குள்ளிருப்பீர்கள்.

  1. உம்முடைய காருணியம்:- உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்” என்று தாவீது மகிழ்ச்சியோடு சொல்லுகிறார் (சங். 18:35).

நம்முடைய சுயதிறமையினாலோ அல்லது சன்மார்க்கத்தினாலோ நாம் பெரியவர்களாகாமல், கர்த்தருடைய காருணியத்தினாலேயே ஆகிறோம். அவர் காருணியத்தினாலே நம்மை இழுத்துக்கொண்டார் (எரே. 31:3). அவருடைய காருணியத்தினாலே நம்மை அழைத்தார் (2 பேது. 1:3). அவருடைய காருணியம் என்னும் கேடகத்தினாலே அவர் நம்மைப் பாதுகாத்தார் (சங். 5:12).

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய பாதுகாக்கும் கரமும், கர்த்தருடைய காருணியமும் எப்பொழுதும் உங்களோடுகூட இருக்கட்டும். அப்போது நீங்கள் பெரியவர்களாவீர்கள்.

நினைவிற்கு:- “அவருடைய காருணியம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபரையும், புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்” (சக. 9:17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.