Daily Updates

தினம் ஓர் ஊர் – நிலக்கோட்டை (Nilakkottai) – 30/03/25

தினம் ஓர் ஊர் – நிலக்கோட்டை (Nilakkottai)

மாவட்டம் – திண்டுக்கல்

மாநிலம் – தமிழ்நாடு

மக்கள் தொகை – 286,641

மொத்த பரப்பளவு  – 9.90 சகிமீ

கல்வியறிவு – 76.27%

மக்களவைத் தொகுதி – திண்டுக்கல்

சட்டமன்றத் தொகுதி – நிலக்கோட்டை

District Collector  – Bro.S. Saravanan, IAS

District Revenue Officer  – Sis. R.Jeyabharathi

Superintendent of PoliceRevenue  – Dr.A.Pradeep IPS

PRINCIPAL DISTRICT AND

SESSIONS JUDGE  – Sis. A.MUTHU SARATHA

District Munsif – Bro. P.JAISANKAR (Nilakottai)

Judicial Magistrate  – Bro. R.RAGHURAMAN (Nilakottai)

ஜெபிப்போம்

நிலக்கோட்டை (Nilakkottai) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலைப் பேரூராட்சி ஆகும். இந்த நகரம் 1958 இல் 1 வது கிரேடு டவுன் பஞ்சாயத்து என நிறுவப்பட்டது. 1970ல், தேர்வு தரமாக மாற்றப்பட்டது. டவுன் பஞ்சாயத்து, 1996 முதல், நகராட்சி சட்டத்தின் கீழ் உள்ளது. 2004ல், சிறப்பு கிராம பஞ்சாயத்து என்றும், 2006ல், தேர்வு தர டவுன் பஞ்சாயத்து என்றும் அழைக்கப்பட்டது.

வரலாற்று ஆய்வின் படி நிலக்கோட்டையை உருவாக்கியவர் கூளப்ப நாயக்கர். பாளையபட்டு முன்பே நிலக்கோட்டையை 1512ல் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் அனுமதியுடன் உருவாக்கினார். பின்னர் 1529 க்கும், 1564 க்கும் இடையில் மதுரை மண்டலத்தை நிர்வகித்தவர் விசுவநாத நாயக்கர். விஜயநகரப் பேரரசின் விசுவாசியான இவர், அப்பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயக்கர் நிர்வாக முறையைத் தழுவிப் பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தினார். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார். நிலக்கோட்டை பாளையத்தை ஆட்சி செய்த பாளையக்காரர் கூளப்ப நாயக்கர் ஆவார்.

இந்த நகரம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. நிலக்கோட்டை வட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 43 வருவாய் கிராமங்கள் உள்ளன. மேலும் இருபத்தி மூன்று ஊராட்சி மன்றங்களையும் கொண்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 286,641 மக்கள்தொகை கொண்டது. இதில் 144,482 ஆண்களும், 142,159 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 70.4% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 89.94%, இசுலாமியர்கள் 2.52%, கிறித்தவர்கள் 7.27% & பிறர் 0.27% ஆகவுள்ளனர்.  இந்த நகரத்தில் மொத்தம் 73,232 குடும்பங்களை கொண்டுள்ளது.

நிலக்கோட்டை அதன் பூ சந்தைகளுக்கு பிரபலமானது, இது இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியுள்ளர். பூ பறித்தல், பூ தொடுத்தல், பூ வியாபாரம் செய்தல் போன்ற தொழில்களை செய்து வருகின்றனர். நிலக்கோட்டை என்பதால் மதுரை மண்டலத்தின் மல்லிகைப் புகழ் பெற்றது. நிலக்கோட்டை மதுரை மாவட்டத்தில் இருந்தாலும் பின்னர் திண்டுக்கல் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

நிலக்கோட்டை பித்தளை மற்றும் பொற்கொல்லர்களுக்கும் பெயர் பெற்றது. SIPCOT ஆல் நிறுவப்பட்ட ஒரு தொழில்துறை எஸ்டேட் உள்ளது, இதில் ஃபென்னர் (இந்தியா) லிமிடெட், தரணி ரப்பர் பிரைவேட் லிமிடெட், ஆம்வே மற்றும் TAFE டிராக்டர் கம்பெனி போன்ற உற்பத்தி மற்றும் அசெம்பிள் யூனிட்கள் உள்ளன. இன்டர்நேஷனல் அக்ரிகல்சுரல் பிராசசிங் பிரைவேட் லிமிடெட் (IAP), 100% ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் முன்னணி காய்கறிகள் பதப்படுத்தும் நிறுவனமாகும்.

நிலக்கோட்டை நகரத்திற்காக ஜெபிப்போம். நிலக்கோட்டை நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம். விவசாய தொழிலுக்காகவும், விவசாயிகளுக்காகவும், விவசாய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். அவர்களுடைய தேவைகளுக்காக ஜெபிப்போம். நிலக்கோட்டை நகரத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம். நகரத்தின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். நிலக்கோட்டை நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.