Daily Updates

தினம் ஓர் ஊர் – பந்தலூர் (Pandalur) – 20/01/25

தினம் ஓர் ஊர் – பந்தலூர் (Pandalur)

மாவட்டம் – நீலகிரி

மாநிலம் – தமிழ்நாடு

பரப்பளவு – 30.93 சகிமீ

மக்கள் தொகை – 125,877

கல்வியறிவு – 76.79%

மாவட்ட ஆட்சியர் – Sis. Lakshmi Bhavya Tanneeru I.A.S.,

Superintendent of Police  – Sis. N.S. Nisha I.P.S.,

Additional Collector (Dev) /

Project Director, DRDA /

Project Director, SADP  – Bro. H.R. Koushik I.A.S.,

District Revenue Officer – Bro. M. Narayanan

மக்களவைத் தொகுதி – நீலகிரி

சட்டமன்றத் தொகுதி – கூடலூர்

மக்களவை உறுப்பினர் – Bro. A. Raja (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Pon Jayaseelan (MLA)

Municipal Commissioner  – Bro. P.Muniappan

Chairman – Sis. S.SIVAGAMY

Vice- Chairman – Bro. .P.NAGARAJAN

District Munsif Kothagiri, Coonoor

and District Court of Nilgiris – Bro. Duraisamy

ஜெபிப்போம்

பந்தலூர் (Pandalur) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரத்தில் பந்தலூர் அமைந்துள்ளது. பந்தலூர் ஒரு மூன்றாம் நிலை நகராட்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் 2 உள்வட்டங்களும், 8 வருவாய் கிராமங்களும் உள்ளன. கிறிஸ்துவுக்கு முன்பிருந்தே குறைந்தபட்சம் பத்து நூற்றாண்டுகளுக்கு இந்தப் பகுதிகளில் மனித குடியிருப்புகள் இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். பண்டைய காலங்களில், இந்த நிலம் வேத பழங்குடியினரின் ராஜாக்களால் ஆளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நகரம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கும், நீலகிரி மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. கூடலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Pon Jayaseelan அவர்களுக்காகவும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. A. Raja அவர்களுக்காகவும் ஜெபிப்போம். Municipal Commissioner Bro. P.Muniappan அவர்களுக்காகவும், Chairman – TMT.S.SIVAGAMY அவர்களுக்காகவும், Vice- Chairman – THIRU.P.NAGARAJAN அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம்.

19 ஆம் நூற்றாண்டின் நடுவில் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியினர் தேவாலா நகரம் மற்றும் பந்தலூரில் சுரங்கங்கள் வெட்டி, தங்க கனிமங்கள் எடுத்துள்ளனர். இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனம் இங்கு ஒரு பண்ணைக் குடியிருப்புப் பகுதியை உருவாக்கினர். சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் தங்கக் கனிமங்களின் அளவு சராசரியைக்காட்டிலும் பெருமளவு படிப்படியாகக் குறைந்தது. இருப்பினும் 20 ஆம் நூற்றாண்டு தொடங்கும் வரை தங்கம் வெட்டப்படுவது தொடர்ந்தது.

இந்த பகுதியில் இருந்த நிலத்தின் பெரும்பகுதி நிலம்பூர், கோவிலகம் மற்றும் மைசூர் மகாராசாவின் சுதேச அரசுகளின் சொத்து ஆகும். நெல்லியாலம் ராணி என்பவர் இப்பகுதியிலிருந்த மைசூர் மகாராசாவின் சொத்துக்களை நிர்வாகம் செய்தார். பந்தலூர் வட்டம் 61,538 ஆண்களையும் 64,339 பெண்களையும் சேர்த்து 125,877 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. பந்தலூர் தாலுகா பனியாக்கள், குரும்பர்கள், காட்டு நாயக்கர்கள் போன்ற பழங்குடியின மக்களுக்கு ஒரு புனித இடம் என்று நம்பப்படுகிறது.

18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பந்தலூரில் காப்பியும் தேயிலையும் பயிரிடப்பட்டன. அக்காலத்தில் பல ஐரோப்பியர்கள் நீலகிரியிலும் வயநாட்டிலும் குடியேறியிருந்தனர். டி.எச். மக்லியோடு மற்றும் என்றி அட்சென்விலர் போன்றவர்கள் அவர்களில் சிலராவர். பந்தலூர் தாலுக்காவின் பெரும்பகுதி தேயிலைத்தோட்டங்களால் நிறைந்தது. குறு மற்றும் பெரு விவசாயிகள், தோட்டத்தொழிலாளர்கள், தொழிற்சாலைகள், அதனை சார்ந்து இயங்கும் தொழில்கள் என தேயிலை இந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பந்தலூர் தாலுகாவில் நீலகிரி வரையாடு, நீலகிரி குரங்கு, தேவாங்கு, மலபார் மலை அணில், வெளிமான், புலி, குரைக்கும் மான், ஆசிய யானை போன்றவை பொதுவாக காணப்படும் விலங்குகள் காணப்படுகின்றன. இங்கு ஒரே வாழிடத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆசிய யானைகள் வாழுந்துவருவது குறிப்பிடத்தக்கது. பந்தலூரில் பல்வேறு மூலிகைகளும், மிளகு போன்ற கொடிகளும், மிகுந்து காணப்படுகின்றன. நீலகிரியின் சிறப்பம்சங்களுள் ஒன்றான 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூவை இங்கு காணமுடியும்.

பந்தலூர் நகரத்திற்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தின் முக்கிய தொழிலான தோட்ட வேலையில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். அவர்களின் கையின் பிரயாசத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். இங்கு வாழும் வனவிலங்குகள் மற்றும் பறவையினங்கள் பாதுகாக்கப்பட ஜெபிப்போம். பந்தலூரில் உள்ள இயற்கை வளங்களுக்காக ஜெபிப்போம். பந்தலூர் நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.