Daily Updates

தினம் ஓர் ஊர் – உதயேந்திரம் (Uthayendram) – 16/10/24

தினம் ஓர் ஊர் – உதயேந்திரம் (Uthayendram)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – திருப்பத்தூர்

வட்டம் – வாணியம்பாடி

பரப்பளவு – 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)

மக்கள் தொகை – 13,837

கல்வியறிவு – 83.90%

District Collector – Bro. K. Tharpagaraj, IAS

Superintendent of Police  – Sis. Shreya Gupta, IPS.

District Revenue Officer  – Bro. Narayanan

Municipality Commissioner – Bro. Sathishkumar

Chairman – Sis. Uma Bai

மக்களவைத் தொகுதி – வேலூர்

சட்டமன்றத் தொகுதி – வாணியம்பாடி

மக்களவை உறுப்பினர் – Bro. Kathir Anand (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. G. Sendhil Kumar (MLA)

District and Sessions Judge – Sis. S. Meenakumari (Tirupathur)

Chief Judicial Magistrate  – Bro. J. Omprakash (Tirupathur)

Subordinate Judge – Sis. P. Sudha (Tirupathur)

Principal District Munsif – Sis. R. Vijayalakshmi (Tirupathur)

ஜெபிப்போம்

உதயேந்திரம் (Uthayendram) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தின், வாணியம்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி அருகில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் நகராட்சிகள் அமைந்துள்ளது.

மாவட்டத் தலைமையிடமான வேலூரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள உதயேந்திரம் பேரூராட்சிக்கு அருகில் 3 கிமீ தொலைவில் உள்ள வாணியம்பாடியில் உள்ளது. இதன் வடக்கில் ஆம்பூர் 18 கிமீ; தெற்கில் திருப்பத்தூர் 26 கிமீ தொலைவில் உள்ளது.

இந்த பேரூராட்சியானது வேலூர் மக்களவைத் தொகுதிக்கும், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. வேலூர் மக்களவை உறுப்பினர் Bro. Kathir Anand அவர்களுக்காகவும், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் Bro. G. Sendhil Kumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

உதயேந்திரம் பேரூராட்சி 8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 61 தெருக்களையும் கொண்டுள்ளது. இப்பேரூராட்சி 3,062 வீடுகளும், 13,837 மக்கள்தொகையும், கொண்டது. வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. எனவே இப்பேரூராட்சியில் உள்ள பொது மக்கள் 50% பேர் தோல் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். 30% பேர் வேளாண்மை செய்கின்றனர்.

ஒரு காலத்தில் உதயேந்திர மக்கள் பாலாற்றின் வளத்தில் வாழ்ந்தவர்கள். 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர் பண ஆதிக்கத்தில் தோல் பதனிடும் தொழிலால் இவர்கள் ஓரளவு பணம் சம்பாதித்தாலும், அந்த பகுதியில் நீரும், நிலமும் கெட்டதுதான் மிச்சம். இதிலிருந்து இன்னும் மீளமுடியவில்லை. உதயேந்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, இராணிப்பேட்டை, வாலாஜா என்று ஒரு 150 கிலோ மீட்டருக்கு நிலமும் நீரும் கெட்டுப்போயுள்ளது.

தோல் பதனிடும் தொழில் தவிர காலனி தைக்கும் தொழிலில் ஒரு சில பெண்கள் ஈடுபட்டுள்ளனர். அதைதவிர மிக முக்கியமான தொழிலாக தச்சுத் தொழில் செய்வோர் ஏராளமாக உள்ளனர். உதயேந்திரத்தில் கிறித்தவர்கள் பெரும்பான்மை வகிக்கின்றனர். இங்கு ஆதிதிராவிடரும், தெலுங்கு பேசும் மக்களும், இசுலாமியரும் வசிக்கின்றனர்.

உதயேந்திரம் பேரூராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். உதயேந்திரம் நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கிற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். உதயேந்திரம் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.