Daily Updates

தினம் ஓர் ஊர் – சாமளாபுரம் (Samalapuram) – 03/10/24

தினம் ஓர் ஊர் – சாமளாபுரம் (Samalapuram)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – திருப்பூர்

வட்டம் – பல்லடம்

பரப்பளவு  –  21.75 சதுர கிலோமீட்டர்கள் (8.40 sq mi)

மக்கள் தொகை – 20,691

கல்வியறிவு – 65%

District Collector  – Bro. T Christuraj , I.A.S

District Revenue Officer  – Bro. K Karthikeyan

Commissioner of Police  – Sis. Lakshmi IPS

Superintendent of Police  – Bro. Abhishek Gupta IPS

Municipal Commissioner – Sis.  M.Banumathi

Municipal Chairman – Sis. R.Kavithamani

Municipal Vice – Chairman – Sis. E. Narmadha

Revenue Inspector – Bro. Marippan

மக்களவைத் தொகுதி – கோயம்புத்தூர்

சட்டமன்றத் தொகுதி – சூலூர்

மக்களவை உறுப்பினர் – Bro. Ganapathi Rajkumar (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Kandasamy (MLA)

Principal District and Sessions Judge – Bro. N.Gunasekaran (Tiruppur)

District Munsif  – Bro. V.Kalidasan (Palladam)

Judicial Magistrate  Sis. K.Chithra (Palladam)

Sub Judge – Bro. K.S.S.Siva (Palladam)

ஜெபிப்போம்

சாமளாபுரம் (Samalapuram) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சாமளாபுரம் பேரூராட்சிக்கு கிழக்கில் திருப்பூர் 16 கிமீ; மேற்கில் சூலூர் 17 கிமீ; வடக்கில் அவிநாசி 20 கிமீ ; தெற்கில் பல்லடம் 16 கிமீ தொலைவில் உள்ளது.

சாமளாபுரம் நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. பல்லடம் நகரத்தின் Municipal Commissioner Sis.  M.Banumathi அவர்களுக்காகவும், Municipal Chairman Sis. R.Kavithamani அவர்களுக்காகவும், Municipal Vice – Chairman Sis. E. Narmadha அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கோயம்புத்தூர் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. சூலூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. Kandasamy அவர்களுக்காகவும், கோயம்புத்தூர் மக்களவை உறுப்பினர் Bro. Ganapathi Rajkumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

சாமளாபுரம் பேரூராட்சியானது 21.75 சகிமீ பரப்பும், 58 தெருக்களையும் கொண்டுள்ளது. இந்த நகரம் திருப்பூரின் புறநகர்ப் பகுதியாகும். சோமனூர், கருமத்தம்பட்டி இரட்டை நகரங்களுக்கு அருகில் அவிநாசி சாலைக்கும் திருச்சி சாலைக்கும் இடையே சாமளாபுரம் உள்ளது. இது பல்லடம் தாலுகா மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் கீழ் வருகிறது.

சாமளாபுரம் டவுன் பஞ்சாயத்தில் 20,691 மக்கள்தொகை உள்ளது, இதில் 10,404 ஆண்கள் மற்றும் 10,287 பெண்கள் உள்ளனர். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 2153 ஆகும். இப்பேரூராட்சியில் 5,938 குடும்பங்கள் வசிக்கிறார்கள். இந்த நகரத்தில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 91.67%, முஸ்லீம்கள் 0.42% மற்றும் கிறிஸ்தவர்கள் 7.67% உள்ளனர்.

இப்பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகையில், 10,508 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 6,858 ஆண்கள் மற்றும் 3,650 பெண்கள். மக்கள்தொகை கணக்கெடுப்பில், தொழிலாளி வணிகம், வேலை, சேவை, மற்றும் விவசாயி மற்றும் தொழிலாளர் செயல்பாடுகளை செய்பவர் என வரையறுக்கப்படுகிறது.

சாமளாபுரம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பகுதியில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற தொழில்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம். சாமளாபுரம் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.