Daily Updates

தினம் ஓர் ஊர் – மண்ணச்சநல்லூர் (Manachanallur) – 07/06/24

தினம் ஓர் ஊர் – மண்ணச்சநல்லூர் (Manachanallur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – திருச்சிராப்பள்ளி

மக்கள் தொகை – 192,869

கல்வியறிவு – 82.05%

மக்களவைத் தொகுதி – பெரம்பலூர்

சட்டமன்றத் தொகுதி – மண்ணச்சநல்லூர்

மாவட்ட ஆட்சியர் – Bro. Pradeep Kumar (I.A.S)

Commissioner of Police  – Sis. N. Kamini (IPS)

Superintendent of Police – Bro. V. Varunkumar (IPS)

District Revenue Officer  – Sis. R. Rajalakshmi

Project Director – Bro. S. Devanathan

மக்களவை உறுப்பினர் – Bro. T. R. Paarivendhar (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. S. Kathiravan (MLA)

நகராட்சி ஆணையர் – Bro. V. Saravanan

Mayor – Bro. M. Anbazhagan

Deputy Mayor – Sis. G. Dhivya

Principal District Judge – Bro. K.Babu

ஜெபிப்போம்

மண்ணச்சநல்லூர் (Manachanallur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுக்கா மற்றும் நகரமாகும். மண்ணச்சநல்லூர் அரிசி ஆலைகளுக்கு பெயர் பெற்றது. திருச்சி மாநகராட்சி எல்லையில் இருந்து 12 கிமீ தொலைவில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி உள்ளது.

மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 46 வருவாய் கிராமங்கள் உள்ளன. மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது. மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம்.

மண்ணச்சநல்லூர் நகரம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. S. Kathiravan அவர்களுக்காகவும், பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் Bro. T. R. Paarivendhar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பணியினை தேவ பயத்தோடு செய்ய ஜெபிப்போம்.

மணச்சநல்லூர் நகரம் 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. நகராட்சி ஆணையர் Bro. V. Saravanan அவர்களுக்காகவும், Mayor Bro. M. Anbazhagan அவர்களுக்காகவும், Deputy Mayor Sis. G. Dhivya அவர்களுக்காகவும் ஜெபிப்போம். தேவ கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இவ்வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 192,869 ஆகும். இவர்களில் ஆண்கள் 96,154 பேரும், பெண்கள் 96,715 பேரும் உள்ளனர். கிராமப்புறங்களில் 70.8% மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரத்தில் குடும்பங்கள் 49,878 வாழ்கின்றார்கள். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.45%, இசுலாமியர்கள் 3.06%, கிறிஸ்தவர்கள் 6.25% மற்றும் பிறர் 0.24% ஆக உள்ளனர். மண்ணச்சநல்லூர் நகரத்தில் வாழும் மக்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம்.

மண்ணச்சநல்லூர் அரிசி ஆலைகளுக்கு பெயர் பெற்றது. இப்பகுதியில் பெரும்பாலும் ரைஸ் மில் வியாபாரம் நன்றாக நடப்பதாக கூறப்படுகிறது. அரிசி ஆலைகளில் பணி செய்யும் தொழிலாளர்களுக்காகவும் அவர்களின் கையின் பிரயாசத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.

இந்த தாலுகாவில் உள்ள கிராமங்களில் நற்செய்தி அறிவிக்கப்படாத மக்களுக்கு தேவனுடைய சத்தியத்தை அறிவிக்கும் தேவஊழியர்கள் எழும்பவும், இரட்சிக்கப்படாத மக்கள் ஆண்டவரை ஏற்றுகொள்ளவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.