Daily Updates

தினம் ஓர் ஊர் – உடையார்பாளையம் (Udayarpalayam) – 07/04/24

தினம் ஓர் ஊர் – உடையார்பாளையம் (Udayarpalayam)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – அரியலூர்

மக்கள் தொகை – 384,800

கல்வியறிவு – 80.01%

மக்களவைத் தொகுதி – சிதம்பரம்

சட்டமன்றத் தொகுதி – ஜெயங்கொண்டம்

மாவட்ட ஆட்சியர் – Sis. J. Anne Mary Swarna (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. S. Selvaraj (I.P.S)

மாவட்ட வருவாய் அலுவலர் – Sis. M.S.Kalaivani

திட்ட இயக்குனர் – Sis. S. Gangatharini

மக்களவை உறுப்பினர் – Bro. Thol. Thirumavalavan (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Ka. So. Ka. Kannan (MLA)

நகராட்சி ஆணையர் – Sis. Chithra Soniya

நகராட்சி தலைவர் – Sis. Shanthi K

நகராட்சி துணை தலைவர் – Bro. Kaliyamoorthy.T

வருவாய் ஆய்வாளர் – Bro. Rajendran.R

நகரமைப்பு அலுவலர் – Bro. Manikaselvan

Principal District and Session Judge  – Bro. M.Christopher (Ariyalur)

Additional District Judge – Bro. A.Karnan (Ariyalur)

ஜெபிப்போம்

உடையார்பாளையம் (Udayarpalayam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பேரூராட்சி ஆகும். இங்குள்ள உடையார்பாளையம் அரண்மனை மிகவும் தொன்மை வாய்ந்தது. உடையார்பாளையம் நகரத்திற்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

தமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களுள் உடையார்பாளையம் ஒன்று. வீரத்திற்கும் தியாகத்திற்கும் கல்விக்கும் பெயர் பெற்ற பல ஜமீன்தார்கள் இதனைச் சிறப்புடன் ஆண்டிருக்கிறார்கள். இது ‘காலாட்கள் தோழ உடையார்கள்’ தங்கள் படைகளுடன் 350க்கும் மேற்பட்ட கிராமங்களை ஆட்சி செய்த சமஸ்தானத்தின் தலைநகரம் என்பதால் இந்நகருக்கு ‘உடையார்பாளையம்’ என்னும் பெயருண்டானது.

திருச்சி – சிதம்பரம் சாலையில், அரியலூருக்கு வடகிழக்கே 38 கிமீ தொலைவில் அமைந்த உடையார்பாளையம் பேரூராட்சிக்கு அருகே அமைந்த ஊர்கள், ஜெயங்கொண்டம் 8 கிமீ; கும்பகோணம் 30 கிமீ விருத்தாச்சலம் 40 கிமீ தொலைவில் உள்ளது. இந்த நகரத்திற்கு அருகே உள்ள ஊர்களுக்காக ஜெபிப்போம்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் Sis. J. Anne Mary Swarna அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. S. Selvaraj அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் அலுவலர் Sis. M.S.Kalaivani அவர்களுக்காகவும், திட்ட இயக்குனர் Sis. S. Gangatharini அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

அரியலூர் மாவட்ட நகராட்சி ஆணையர் Sis. Chithra Soniya அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. Shanthi K அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. Kaliyamoorthy.T அவர்களுக்காகவும், வருவாய் ஆய்வாளர் Bro. Rajendran அவர்களுக்காகவும், நகரமைப்பு அலுவலர் Bro. Manikaselvan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்களுடைய பணிகளை உண்மையாகவும், தேவபயத்தோடு செய்யவும் ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Ka. So. Ka. Kannan அவர்களுக்காகவும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Thol. Thirumavalavan அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் திரு பயற்ணீசுவரர் ஆலயம் அமைந்துள்ள காரணத்தினால் இது ஆன்மீக சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் ஒரு நகரமாக அமைந்துள்ளது. தமிழகத்திலேயே மிகப் பெரிய தாலுக்கா’வாக இன்றளவும் இருப்பது உடையார்பாளையம் தாலுக்கா தான். இன்று பல தாலுக்கா’களாக பிரிக்கப்பட்டு இருந்தாலும் பெரிய தாலுக்கா’வாகவே கருதப்படுகிறது. பாளையக்காரர் ஆட்சிக்காலத்தில் மாபெரும் வணிக நகராகவே இந்நகரம் இருந்துள்ளது.

உடையார்பாளையம் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். 12.4 சதுரகி.மீ பரப்பளவு கொண்ட இந்நகரம் 18 பெரிய வார்டுகளாக பிரிக்கப்பட்டு பேரூராட்சித்தலைவர் மற்றும் செயல்அலுவலரால் நிர்வகிக்கபடுகிறது. பல்வேறு தெருக்களை உடைய இந்நகரத்தில் சொத்துவரி, குடிநீர் வரி வசூலித்தல் மற்றும் குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை நகர நிர்வாகம் மேற்கொள்கிறது.

உடையார்பாளையம் தாலுகாவில் 190,974 ஆண்கள் மற்றும் 193,826 பெண்களுடன் 384,800 மக்கள் தொகை உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் கணிசமான அளவில் கிறித்தவர்களும் முஸ்லிம்களும் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம், குடும்பங்களின் தேவைகளுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.

உடையார்பாளையத்தில் விவசாயம் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறது. இங்கு முந்திரி, கடலை, கரும்பு, போன்ற பயிர்கள் செய்யப்படுகின்றன. இங்கு முந்திரி, கடலை முக்கிய பயிர்கள் ஆகும். பட்டு மற்றும் தறி உற்பத்தியிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. கால்நடைகள் வளர்ப்பு பெரிதும் உதவுகிறது. இவ்வூர் நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்றது. இந்த நகரத்தில் உள்ள விவசாய குடும்பங்களுக்காகவும், நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.