Daily Updates

தினம் ஓர் ஊர்-அ. வெள்ளாளப்பட்டி (A. Vellalapatti) – 13/03/24

தினம் ஓர் ஊர்-அ. வெள்ளாளப்பட்டி (A. Vellalapatti)

மாநிலம்-தமிழ்நாடு

மாவட்டம்-மதுரை

மக்கள் தொகை-8325

கல்வியறிவு-72%

மக்களவைத் தொகுதி-மதுரை

சட்டமன்றத் தொகுதி-மேலூர்

District Collector-Sis. M. S. Sangeetha (IAS)

Additional Collector (D) / Project Director-Bro. S. Saravanan (IAS)

Superintendent of Police-Bro. Dongare Pravin Umesh (IPS)

District Revenue Officer-Bro. R. Sakthivel

மக்களவை உறுப்பினர்-Bro. S. Venkatesan (MP)

சட்டமன்ற உறுப்பினர்-Bro. Periyapulian @ P. Selvam (MLA)

நகராட்சி ஆணையர்-Bro. C.Arumugam

நகராட்சி தலைவர்-Bro. U.Mohammed Yasin

நகராட்சி துணை தலைவர்-Bro. S. Elanchelian

Principal District and Sessions Judge-Bro. S. Sivakadatcham (Madurai)

Sub Judge-Bro. S. Ganesan (Melur Taluk)

ஜெபிப்போம்

அ. வெள்ளாளப்பட்டி (A. Vellalapatti) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது மதுரையிலிருந்து 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த டவுன் பஞ்சாயத்து 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அ. வெள்ளாளப்பட்டி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

அ.வெள்ளாளப்பட்டி என்பது மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். ஏ.வெள்ளாளபட்டி நகர் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. நகராட்சி ஆணையர் Bro. C.Arumugam அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. U.Mohammed Yasin அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. S. Elanchelian அவர்களுக்காகவும் ஜெபிப்போம். நகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.

அ.வெள்ளாளப்பட்டி பேரூராட்சி மதுரை மக்களவைத் தொகுதிக்கும், மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. மதுரை மக்களவை உறுப்பினர் Bro. S. Venkatesan அவர்களுக்காகவும், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. Periyapulian @ P. Selvam அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

அ.வெள்ளாளப்பட்டி நகரில் மொத்தம் 1,981 குடும்பங்கள் வசிக்கின்றன. அ.வெள்ளாளப்பட்டியின் மொத்த மக்கள் தொகை 8,325 இதில் 4,177 ஆண்கள் மற்றும் 4,148 பெண்கள் ஆவர். 0-6 வயதுக்குட்பட்ட 527 ஆண் குழந்தைகளும் 475 பெண் குழந்தைகளும் உள்ளனர். அ.வெள்ளாளப்பட்டியின் கல்வியறிவு விகிதம் 72% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 80.71% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 63.27% ஆகவும் உள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

இந்த நகரம் மதுரை மாவட்டத்தின் நிர்வாக எல்லைக்கு உட்பட்டது. இந்த நகரம் 8.88 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயம், சிறு வணிகம் மற்றும் சிறு குடிசைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளார்கள். மொத்த மக்கள் தொகையில், 4,266 பேர் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் முக்கிய தொழிலாளர்கள் 1,447 பேரும், உழவர்கள் 274 பேரும், விவசாயத் தொழிலாளர்கள் 2,270 பேரும் உள்ளனர். இவர்களுக்காக ஜெபிப்போம். இவர்கள் கையிட்டு செய்கின்ற எல்லா வேலைகளையும் கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியில் மொத்த இந்து மக்கள் 91.1% பேரும், முஸ்லீம் மக்கள் 7.83% பேரும், கிறிஸ்தவர் 0.25% பேரும், சீக்கியர் 0.01% பேரும், பௌத்தர் 0.01% மற்றும் 0.05% பிற மதங்களை சார்ந்தவர்களும் வாழ்கிறார்கள். கிறிஸ்தவர்கள் குறைவாக இருக்கும் இந்த பகுதியில் கர்த்தர் அநேக தேவபிள்ளைகளை எழுப்பிதர ஜெபிப்போம். அ.வெள்ளாளப்பட்டி பேரூராட்சியில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகள் கிடைத்திட ஜெபிப்போம். அ.வெள்ளாளப்பட்டி பேரூராட்சியை கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.