No products in the cart.

தினம் ஓர் ஊர் – திருக்குறுங்குடி (Tirukkurungudi) – 17/02/24
தினம் ஓர் ஊர் – திருக்குறுங்குடி (Tirukkurungudi)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருநெல்வேலி
மக்கள் தொகை – 9342
கல்வியறிவு – 72%
மக்களவைத் தொகுதி – திருநெல்வேலி
சட்டமன்றத் தொகுதி – நாங்குநேரி
District Collector – Bro. K. P. Karthikeyan (I.A.S)
Superintendent of Police – Bro. N.Silambarasan (I.P.S)
District Revenue Officer – Sis. M.Suganya
Joint Director / Project Director – Bro. S.Suresh
மக்களவை உறுப்பினர் – Bro. S.Gnanathiraviam (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Ruby R. Manoharan (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. R.Rajeswaran
Deputy Mayor – Bro. K.R.Raju
Commissioner – Bro.V. Sivakrishnamurthy
Chief Judicial Magistrate – Bro. S. Manojkumar (Tirunelveli)
Principal Sub Judge – Bro. M. Amirtha Velu (Tirunelveli)
Principal District Judge – Sis. C.P.M. Chandra
ஜெபிப்போம்
திருக்குறுங்குடி (Tirukkurungudi) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது ஒரு பழமையான ஊர். இது தான் இந்தியாவின் தலைசிறந்த தொழில் அதிபர் டி. வி. சுந்தரம் அய்யங்கார் (T.V.S) பிறந்த ஊர் ஆகும். திருக்குறுங்குடி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி திருநெல்வேலியிலிருந்து 40 கிமீ தொலைவிலும், வள்ளியூரிலிருந்து 14 கிமீ தொலைவிலும், சேரன்மாதேவியிலிருந்து 40 கிமீ தொலைவிலும், நாகர்கோயிலிருந்து 36 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த பேரூராட்சிக்கு அருகாமையில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Ruby R. Manoharan அவர்களுக்காகவும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. S.Gnanathiraviam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய வல்லமையான கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இந்த நகரமானது 15 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்டுள்ளது. களக்காடு நகராட்சி ஆணையர் Bro. R.Rajeswaran அவர்களுக்காகவும், வார்டு கவுன்சிலர்களுக்காகவும், ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பணிகளை உண்மையாகவும், பொறுப்போடும் நிறைவேற்ற ஜெபிப்போம்.
திருக்கருங்குடி டவுன் பஞ்சாயத்தில் 9,342 பேர் உள்ளனர். இவர்களில் 4,503 பேர் ஆண்கள் மற்றும் 4,839 பேர் பெண்கள். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 85.89% பேரும், இஸ்லாமியர்கள் 1.45% பேரும், கிறிஸ்தவர்கள் 12.59% பேரும், சீக்கியர் 0.02% பேரும், புத்த 0.02% மற்றும் பிற மதங்களை சார்ந்தவர்கள் மற்றவை 0.03% பேரும் உள்ளனர். இந்த பேரூராட்சியில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பத்தின் தேவைகளுக்காக ஜெபிப்போம்.
திருக்குறுங்குடியில் மொத்த மக்கள்தொகையில் 3,999 பேர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 2,686 ஆண்கள் மற்றும் 1,313 பெண்கள் உள்ளனர். திருக்குறுங்குடியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிக மழைப்பொழிவு இருந்ததால் நெல் முக்கிய பயிராக இருந்தது ஆனால் தற்போது மழை பற்றாக்குறையாக இருப்பதால், வாழைப்பழம் ஒரு முக்கிய பயிராக மாறியுள்ளது. திருக்குறுங்குடி அருகே உள்ள மகேந்திரகிரி மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் உள்ளன. விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் இந்த பகுதியில் நல்ல மழையை கொடுக்கும்படி ஜெபிப்போம்.