No products in the cart.

தினம் ஓர் ஊர் – போடிநாயக்கனூர் (Bodinayakkanur) – 09/10/23
தினம் ஓர் ஊர் – போடிநாயக்கனூர் (Bodinayakkanur)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தேனி
மக்கள் தொகை – 180,789
கல்வியறிவு – 76.96%
மக்களவைத் தொகுதி – தேனி
சட்டமன்றத் தொகுதி – போடிநாயக்கனூர்
மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)
District Revenue Officer – Sis. Jeyabharathi
District Forest Officer – Bro. S.Kowtham
மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. O.Panneerselvam (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. G.Rajalakshmi
நகராட்சி தலைவர் – Sis. Raja Rajeswari Sankar
நகராட்சி துணை தலைவர் – Sis. A.Krishnaveni
Principal District Judge – Sis. K. Arivoli
District Munsif – Sis. M.M.J.Ummul Faritha (Bodinayakanur)
Judicial Magistrate – Sis. G.K.Velumayil (Bodinayakanur)
ஜெபிப்போம்
போடிநாயக்கனூர் (Bodinayakkanur) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். ஆரம்ப காலத்தில் தென்காசியம்பதி (தமிழில் தென்காசியம்பதி) என்ற பெயரால் அழைக்கப்பட்டது. பின்னர், அந்த இடத்தை ஆண்ட போதயநாயக்கர் என்ற நபரின் பெயரால், இந்த நகரம் போதயநாயக்கனூர் என்று அழைக்கப்பட்டது. பின்னர் போடிநாயக்கனூராக மாறியது. போடிநாயக்கனூர் நகராட்சிக்காக ஜெபிப்போம்.
போடிநாயக்கனூர் வட்டம் தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக தென்காசியம்பதி நகரம் உள்ளது. இவ்வட்டத்தில் தென்காசியம்பதி ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் போடிநாயக்கனூர், கோடாங்கிப்பட்டி, ராசிங்காபுரம் என 3 என உள்வட்டங்களும், 15 வருவாய் கிராமங்களும் உள்ளது. போடிநாயக்கனூர் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களின் இரட்சிப்பிற்காகவும், தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.
போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. O.Panneerselvam அவர்களுக்காகவும், தேனி மக்களவைத் உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். தேவ கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம். இந்த தொகுதி மக்களுக்காக இவர்கள் எடுக்கும் முயற்சிகளை கர்த்தர் நிறைவேற்றி கொடுக்கும்படி ஜெபிப்போம்.
போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையர் Sis. G.Rajalakshmi அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. Raja Rajeswari Sankar அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Sis. A.Krishnaveni அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் பணியினை பொறுப்போடும், உண்மையோடும் செய்ய கர்த்தர் கிருபை கொடுக்கும்படி ஜெபிப்போம்.
இவ்வட்டத்தில் மொத்தம் 180,789 வாழ்கிறார்கள். அவர்களில் 90,426 ஆண்களும், 90,363 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் 60.9% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.48%, இசுலாமியர்கள் 2.52%, கிறித்தவர்கள் 0.91 மற்றும் பிற மதங்களை சார்ந்தவர்கள் 0.08% ஆகவுள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 49,589 குடும்பங்கள் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம். குடும்பங்களை பரிசுத்த ஆவியானவர் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில், மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட, ‘ஏலக்காய் நகரம்’ எனவும் அழைக்கப்படும் ஒரு நகராகும். இந்த நகரம் ஏலக்காய், காப்பி “குளம்பி”, தேயிலை, பருத்தி விற்பனை செய்வதற்கான, விலை நிர்ணயிக்கக்கூடிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் ஏலக்காய் கடைகளுக்கும், காப்பி கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி ) வேலைக்குச் செல்கின்றனர். குறிப்பிட்ட அளவு மாங்காய் விவசாயம் நடைபெறுகிறது. விவசாயத்திற்காகவும், விவசாய குடும்பங்களுக்காகவும் அவர்களின் தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.
போடிநாயக்கனூர் பகுதிக்குத் தேவையான குடிநீர் குரங்கணியில் உள்ள கொட்டகுடி ஆற்றிலிருந்து நீர், குழாய்களில் கொண்டு வரப்பட்டு, பரமசிவன் கோவில் மலையடிவாரத்தில் குடிநீராகப் பிரித்தெடுத்து/சுத்திகரிக்கப்பட்டு ஊருக்குள் வழங்கப்படுகிறது. நீர் பிடிப்புப் பகுதியில் இருந்து வீட்டிற்கு தண்ணீர் வரும் வரை மின்சாரம் செலவளிக்கப்படுவதில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். இப்பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. போடிநாயக்கனூர் நகராட்சி பணிகளுக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.
போடிநாயக்கனூர் நகராட்சிக்காக ஜெபிப்போம். போடிநாயக்கனூர் மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். போடிநாயக்கனூர் பகுதியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம். போடிநாயக்கனூர் நகரத்தில் அநேக தேவபிள்ளைகளை கர்த்தர் எழுப்பி தரும்படி ஜெபிப்போம்.