No products in the cart.

தினம் ஓர் ஊர் – மணவாளக்குறிச்சி (Manavalakurichi)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 10969
கல்வியறிவு – 79%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – குளச்சல்
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. J.G.Prince (MLA)
நகராட்சி ஆணையாளர் – Bro. S.Lenin
நகராட்சி தலைவர் – Bro. G.Arulshoban
நகராட்சி துணை தலைவர் – Bro. R.Unnikrishnan
Principal District Court – Bro. P.Ramachandran (Kanyakumari)
ஜெபிப்போம்
மணவாளக்குறிச்சி (Manavalakurichi) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்களின் பொதுவான மொழிகள் தமிழும் மலையாளமும் ஆகும். மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. குளச்சல் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. J.G.Prince அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். தேவசித்தத்திற்கு இவர்களை ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.
மணவாளக்குறிச்சி பேரூராட்சியின் நகராட்சி ஆணையர் Bro. S.Lenin அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. G.Arulshoban அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. R.Unnikrishnan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற எல்லா காரியங்களிலும் கர்த்தர் இவர்களோடுகூட இருந்து பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியானது 4.2 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 28 தெருக்களும், 3123 வீடுகளும், 10969 மக்கள்தொகையும் கொண்டுள்ளது. மொத்த மக்கள்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 5478 பெண்களை விட சற்றே குறைவு 5491. மணவாளக்குறிச்சியின் சராசரி கல்வியறிவு விகிதம் 79% ஆகும். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். சிறுபிள்ளைகளுக்காகவும், வாலிப பிள்ளைகளுக்காகவும் அவர்களின் எதிர்காலத்திற்காகவும் ஜெபிப்போம்.
மணவாளக்குறிச்சி நகரத்தின் முக்கியத் தொழில்களாக மீன் பிடித்தல், விவசாயம், கயிறு திரித்தல் போன்றவை ஆகும். இந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் செய்கின்ற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். தொழிலுக்குண்டான தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
முட்டம் இல் உள்ள ஜெப்பியார் மீன்பிடி துறைமுகம் அருகில் உள்ள கடல் துறைமுகமாகும். இது ஒரு தனியார் கடல் துறைமுகம் மற்றும் கல்வியாளரும் தொழிலதிபருமான ஜெப்பியாரால் கட்டப்பட்டது. மற்றொரு கடல் துறைமுகம் கொளச்சல் ஆகும். இது ஒரு பழமையான துறைமுகம், 18 ஆம் நூற்றாண்டில் பழமையானது. வாஸ்கோடகாமா இதை “கொலாச்சி” என்று அழைத்தார். 1741 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி கோலாச்சல் போரில் மன்னர் அனிசம் திருநாள் மார்த்தாண்ட வர்மா டச்சுக்காரர்களை தோற்கடித்த பிறகு, வெற்றியின் நினைவாக கடற்கரைக்கு அருகில் ஒரு வெற்றித் தூண் அமைக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் மணவாளக்குறிச்சியில் அமைந்திருக்கும் மணல் ஆலைதான் மத்திய அரசின் ஒரே ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அனுசக்தி துறையின் கீழ் இயங்கி வரும் இந்திய அருமணல் ஆலை மணவாளக்குறிச்சியில் 1950 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆலை இல்மனைட், ருட்டைஸ், சிர்கன், மோனோசைட், கார்னெட் மற்றும் சில்லிமனைட் ஆகிய கனிமங்களை கடற்கரை மணலில் இருந்து பிரித்து எடுக்கிறது. இந்த தொழிற்சாலைக்காக ஜெபிப்போம். இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.