Daily Updates

தினம் ஓர் நாட்டின் தலைநகரம் பாகிஸ்தானின் தலைநகரம் – இஸ்லாமாபாத் (Islamabad – Capital of Pakistan)

தினம் ஓர் நாட்டின் தலைநகரம் பாகிஸ்தானின் தலைநகரம் – இஸ்லாமாபாத் (Islamabad – Capital of Pakistan)

நாடு (Country) – பாகிஸ்தான் (Pakistan)

கண்டம் (Continent) – Asia

அதிகாரப்பூர்வ மொழி – Urdu

மக்கள் தொகை – 1,108,872

மக்கள் – Pakistani

அரசாங்கம் – பாராளுமன்ற ஜனநாயக குடியரசு

President – Asif Ali Zardari

Prime Minister – Shehbaz Sharif

Assembly Speaker – Sardar Ayaz Sadiq

Chief Justice – Yahya Afridi

மொத்த பகுதி – 220.15 km2 (85.00 sq mi)

தேசிய விலங்கு – Markhor

தேசிய பறவை – Chukar Partridge

தேசிய மலர் – Common Jasmine

தேசிய மரம் – Himalayan Cedar

தேசிய பழம் – Mango

தேசிய விளையாட்டு – Field Hockey

நாணயம் – Pakistani Rupee

ஜெபிப்போம்

இஸ்லாமாபாத் (Islamabad) பாகிஸ்தானின் தலைநகரமாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் இஸ்லாமாபாத் தலைநகரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. 1960களில் இந்நகரம் கட்டப்பட்டு கராச்சிக்குப் பதிலாக புதிய தலைநகரமாக்கப்பட்டது. இஸ்லாமாபாத் அதன் உயர் வாழ்க்கைத் தரம், பாதுகாப்பு மற்றும் பசுமைக்கு பெயர் பெற்றது. 2017ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி 1,014,825 மக்கட் தொகை கொண்ட இஸ்லாமாபாத் பாகிஸ்தானின் 9வது பெரிய நகரமாகும். மேலும் பெரிய இஸ்லாமாபாத்-ராவல்பிண்டி பெருநகரப் பகுதி நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும். இந்த பெருநகர்ப் பகுதி நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கட் தொகையைக் கொண்டது.

நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள போத்தோஹர் பீடபூமியில், ராவல்பிண்டி மாவட்டத்திற்கும், வடக்கே மார்கல்லா ஹில்ஸ் தேசிய பூங்காவிற்கும் இடையில் இஸ்லாமாபாத் அமைந்துள்ளது. இப்பகுதி வரலாற்று ரீதியாக பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வாவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. மார்கல்லா பாஸ் இரு இடங்களுக்கும் இடையிலான நுழைவாயிலாக செயல்படுகிறது.

கிரேக்க கட்டிடக் கலைஞர் கான்ஸ்டான்டினோஸ் அப்போஸ்டலோ டோக்ஸியாடிஸ் இந்த நகரத்தை வடிவமைத்தார். நகரம் நிர்வாக, இராஜதந்திர இடங்கள், குடியிருப்புப் பகுதிகள், கல்வித் துறைகள், தொழில்துறை துறைகள், வணிகப் பகுதிகள் மற்றும் கிராமப்புற மற்றும் பசுமைப் பகுதிகள் உட்பட எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்படுகின்றது. மார்கல்லா ஹில்ஸ் தேசிய பூங்கா மற்றும் ஷகார்பரியன் பூங்கா உள்ளிட்ட பல பூங்காக்கள் மற்றும் காடுகள் இந்த நகரத்தில் அமையப்பெற்றுள்ளன. இஸ்லாமாபாத் நகரம் தெற்காசியாவின் மிகப்பெரிய மசூதியான பைசால் மசூதி உட்பட பல அடையாளங்களை கொண்டுள்ளது. பாகிஸ்தானின் தேசிய நினைவுச்சின்னம் மற்றும் ஜனநாயக சதுக்கம் ஆகிய அடையாளச் சின்னங்களும் இங்கு அமைந்துள்ளன.

இஸ்லாமாபாத் முசாபராபாத்தில் இருந்து 120 கி.மீ தொலைவிலும், பெஷாவருக்கு கிழக்கே 185 கி.மீ தொலைவிலும், லாகூரில் இருந்து 295 கி.மீ தொலைவிலும் மற்றும் இந்திய ஜம்மு-காஷ்மீர் ஒன்றிய பகுதியின் தலைநகரான ஸ்ரீநகரில் இருந்து 300 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

இஸ்லாமாபாத் ஈரப்பதமான துணை வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. இங்கு வெப்பமான மாதம் சூன் ஆகும். சூன் மாத சராசரி அதிகபட்ச வெப்பநிலை 38°C (100.4°F)ஐ விட அதிகமாக காணப்படும். அதிக மழையைக் கொண்ட மாதம் சூலை ஆகும்.

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% பங்களிக்கிறது. 1989இல் நிறுவப்பட்ட இஸ்லாமாபாத் பங்குச் சந்தையானது, கராச்சி பங்குச் சந்தை மற்றும் லாகூர் பங்குச் சந்தைக்குப் என்பவற்றிற்கு பிறகு பாகிஸ்தானின் மூன்றாவது பெரிய பங்குச் சந்தையாகும். இஸ்லாமாபாத் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் விரிவாக்கத்தைக் கண்டுள்ளது. இங்கு இரண்டு மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் உள்ளன. அவை ஏராளமான தேசிய மற்றும் வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டுள்ளன.

இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையம் மூலம் உலகெங்கிலும் உள்ள முக்கிய இடங்களுடன் இஸ்லாமாபாத் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் பாகிஸ்தானில் மிகப்பெரிய விமான நிலையமாகும். இது இஸ்லாமாபாத்திற்கு வெளியே ஃபதே ஜாங்கில் அமைந்துள்ளது.

பாகிஸ்தான் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து வாழ்வாதாரம் தேடி லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளதாக பாகிஸ்தானின் குடியேற்றத் துறை குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமாபாத் நகரத்தின் வறுமை நிலை மாறவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிடையே தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் தொடர்ந்து போர்ப்பதற்றம் நிலவுகிறது. இந்நிலை மாற ஜெபிப்போம். இரு நாடுகளின் சமாதானத்திற்காக ஜெபிப்போம். இரு நாடுகளுக்கிடையே போர் மூளாதிருக்க ஜெபிப்போம். இஸ்லாமாபாத் நகரத்தின் சமாதானத்திற்காக ஜெபிப்போம்.

இஸ்லாமாபாத் நகரத்திற்காக ஜெபிப்போம். இந்நகரத்தின் PRIME MINISTER, PRESIDENT, ASSEMBLY SPEAKER, CHIEF JUSTICE மற்றும் அரசு அதிகாரிகளுக்காக ஜெபிப்போம். இந்நகர மக்களின் இரட்சிப்புக்காக ஜெபிப்போம். இந்நகரத்தின் பொருளாதாரத்திற்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.