Daily Updates

தினம் ஓர் ஊர் – வீரகனூர் (Veeraganur) – 14/09/24

தினம் ஓர் ஊர் – வீரகனூர் (Veeraganur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – சேலம்

வட்டம் – கங்கவள்ளி

பரப்பளவு – 22.51 சதுர கிலோமீட்டர்கள் (8.69 sq mi)

மக்கள் தொகை – 11,624

கல்வியறிவு – 72.93%

District Collector and District Magistrate  – Dr. R. Brindha Devi, I.A.S.

Commissioner of Corporation  – Bro.  Ranjeet Singh, I.A.S.

Additional Collector  – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,

Commissioner of Police  – Sis. B. Vijayakumari,I.P.S.,

Superintendent of Police  – Bro. A.K. Arun Kabilan, IPS.,

District Revenue Officer and

Additional District Magistrate – Dr. P. Menaha

Salem Municipal Commissioner – Bro. Y.Surendiran

Salem Mayor – Bro. A. Ramachandran

Deputy Mayor – Sis. Saradha Devi

மக்களவைத் தொகுதி – கள்ளக்குறிச்சி

சட்டமன்றத் தொகுதி – கங்கவள்ளி

மக்களவை உறுப்பினர் – Bro. Malaiyarasan (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. A. Nallathambi (MLA)

Principal District Judge – Sis. S.Sumathi (Salem)

ஜெபிப்போம்

வீரகனூர் (Veeraganur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் கங்கவள்ளி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். வீரகனூர் பேரூராட்சிக்கு கிழக்கில் கங்கவள்ளி 12 கிமீ; மேற்கில் சின்னசேலம் 32 கிமீ; தெற்கில் பெரம்பலூர் 43 கிமீ தொலைவில் உள்ளது.

இந்த நகரம் கங்கவள்ளி சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். கங்கவள்ளி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. A. Nallathambi அவர்களுக்காகவும், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் Bro. Malaiyarasan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் கரம் இவர்களையும், இவர்கள் செய்கின்ற பணிகளிலும் ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி மொத்தம் 15 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. இப்பேரூராட்சி 22.51 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்கு அடிப்படை தேவைகள் அனைத்தும் கிடைத்திட ஜெபிப்போம்.

வீரகனூர் டவுன் பஞ்சாயத்தில் 11,624 மக்கள் தொகை உள்ளது, இதில் 5,736 ஆண்கள் மற்றும் 5,888 பெண்கள். இப்பேரூராட்சியில் 3,139 குடும்பங்கள் வாழ்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 95.71% பேரும், முஸ்லீம்கள்  3.36%  பேரும், கிறிஸ்தவர்கள் 0.90% பேரும் மற்றும் சீக்கியர் 0.01% உள்ளனர்.

வீரகனூர் நகரத்தின் கல்வியறிவு விகிதம் மாநில சராசரியான 80.09 % ஐ விட 72.93 % குறைவாக உள்ளது. வீரகனூரில் ஆண்களின் கல்வியறிவு 80.61% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 65.51% ஆகவும் உள்ளது. இப்பேரூராட்சியில் இரண்டு அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. தனியார் உயர்நிலை பள்ளி, ஒரு இரண்டாம் நிலை மற்றும் ஒரு முதன்மை தனியார் பள்ளிகள் என கிட்டத்தட்ட 5 அரசு பள்ளிகள் உள்ளன.

வீரகனூர் கால்நடை சந்தை என்பது சேலம் மாவட்டம் வீரகனூரில் உள்ள கால்நடை வாரச் சந்தையாகும். இது சேலத்திலேயே இரண்டாவது பெரிய சந்தையாகும். வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொடங்கி அடுத்த நாள் சனிக்கிழமை பிற்பகல் வரை நடைபெறும். இச்சந்தையில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், சென்னை, சேலம், திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து ஆடுகள், மாடுகள், காளைகள், கன்றுக்குட்டிகள் போன்ற கால்நடைகள் விற்பனைக்கு வருகின்றன.

இப்பேரூராட்சியில் விவசாயம் சிறந்து விளங்குகிறது. மொத்த மக்கள் தொகையில், 6,095 பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3,433 ஆண்கள் மற்றும் 2,662 பெண்கள். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

வீரகனூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். சத்தியத்தை மக்கள் அறியாத மக்களுக்கு சத்தியம் அறிவிக்கப்பட ஜெபிப்போம். வீரகனூர் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.