No products in the cart.

தினம் ஓர் ஊர் – விளாவூர் (Vilavur) – 27/09/23
தினம் ஓர் ஊர் – விளாவூர் (Vilavur)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 14320
கல்வியறிவு – 79%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – பத்மநாபபுரம்
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. T.Mano Thangaraj (MLA)
நகராட்சி ஆணையாளர் – Bro. S.Lenin
நகராட்சி தலைவர் – Bro. G.Arulshoban
நகராட்சி துணை தலைவர் – Bro. R.Unnikrishnan
Principal District Court – Bro. P.Ramachandran (Kanyakumari)
ஜெபிப்போம்
விளாவூர் (Vilavur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதன் கிழக்கில் நாகர்கோவில் 22 கிமீ; மேற்கில் மார்த்தாண்டம் 15 கிமீ; வடக்கில் குலசேகரம் 12 கிமீ; தெற்கில் திங்கள்நகர் 12 கிமீ தொலைவில் உள்ளது. விளாவூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
விளாவூர் பேரூராட்சி 1981ம் வருடம் கோதநல்லூர் பேரூராட்சியின் ஒருபகுதியினையும், சாரோடு ஊராட்சியினையும் இணைத்து உருவாக்கப்பட்டது. இப்பேரூராட்சியானது முதல் நிலை பேரூராட்சியாக தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வியாவூர் பேரூராட்சியின் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியானது 22.25 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 26 தெருக்களும் கொண்டுள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு கவுன்சிலர்களுக்காகவும், அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளுக்காகவும் ஜெபிப்போம். இந்த பகுதியில் உள்ள மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட ஜெபிப்போம்.
விளாவூர் பேரூராட்சியில் மொத்தம் 14320 மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் ஆண்கள் 48% பேரும் மற்றும் பெண்கள் 52% பேரும் உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 3725 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 35.40% பேரும், முஸ்லிம் 1.96% பேரும், கிறிஸ்தவர்கள் 62.56% பேரும், புத்த 0.02% பேரும் இருக்கிறார்கள். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். குடும்பங்களில் கர்த்தருடைய கரம் ஆளுகை செய்ய ஜெபிப்போம். குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியில் மொத்த 5065 உழைக்கும் மக்களில் 86.48 % பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 4,123 ஆண்கள், 942 பெண்கள் ஆவார்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் செய்கின்ற தொழில்களுக்காகவும், கையின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம்.
விளாவூரில் சராசரி கல்வியறிவு 79% உள்ளது. ஆண்களின் கல்வியறிவு 83% மற்றும் பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இந்த நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். படிக்கின்ற பிள்ளைகளுக்கு வேண்டிய ஞானத்தையும், பெலத்தையும் கர்த்தர் கொடுக்கும்படி ஜெபிப்போம். கற்பிக்கும் ஆசிரியர்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள வாலிப பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்.