No products in the cart.

தினம் ஓர் ஊர் – முத்துப்பேட்டை (Muthupet) – 06/12/23
தினம் ஓர் ஊர் – முத்துப்பேட்டை (Muthupet)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருவாரூர்
மக்கள் தொகை – 41722
கல்வியறிவு – 71%
மக்களவைத் தொகுதி – நாகப்பட்டினம்
சட்டமன்றத் தொகுதி – திருத்துறைப்பூண்டி
District Collector – Sis. T.Charusree (I.A.S)
Additional Collector (Development) /
Project Director – Sis. S. Priyanka (I.A.S)
The Superintendent of Police – Bro. S. Jeyakumar (I.P.S)
District Revenue Officer – Bro. K.Shanmuganathan
மக்களவை உறுப்பினர் – Bro. M.Selvarasu (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. K.Marimuthu (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. Malligha
நகராட்சி தலைவர் – Sis. S.Bhuvanapriya
நகராட்சி துணை தலைவர் – Sis. S.Akila
பேரூராட்சி தலைவர் – Sis. மும்தாஜ் நவாஸ் கான்
Chief Judicial Magistrate – Bro.T.Balamurugan (Tiruvarur)
ஜெபிப்போம்
முத்துப்பேட்டை (Muthupet) தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை வட்டத்தை சேர்ந்த ஒரு நகரம் மற்றும் தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். சதுப்புநிலக் காடுகளுக்காகப் முத்துப்பேட்டை புகழ்பெற்றது. முத்துப்பேட்டை நகரம் பட்டுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் நகரங்களுக்கு இடையே உள்ளது. பட்டுக்கோட்டையிலிருந்து 22 கி.மீ. மற்றும் மன்னார்குடியிலிருந்து 41 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திருவாரூர்மாவட்டத்தின் கடைக்கோடி நகரமும் மக்கள்தொகையில் மூன்றாம் பெரிய நகரமாகவும் முத்துப்பேட்டை உள்ளது. முத்துப்பேட்டை பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினர் Bro. M.Selvarasu அவர்களுக்காகவும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் Bro. K.Marimuthu அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பொறுப்பினை உண்மையாக நிறைவேற்றிட ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சியானது 17.80 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 166 தெருக்களும், 15 அரசு அலுவலகங்கள், 16 கல்விக்கூடங்கள், 12 மருத்துவமனைகள், 166 தெருக்கள், 17 பள்ளிவாசல்கள், 8 கோவில்கள், 1 தேவாலயம் உள்ளன. இந்த பேரூராட்சியின் நகராட்சி ஆணையர் Sis. Malligha அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. S.Bhuvanapriya அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Sis. S.Akila அவர்களுக்காகவும், பேரூராட்சி தலைவர் Sis. மும்தாஜ் நவாஸ் கான் அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சதுப்பு நிலக்காடுகளாகும். இது திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இடையில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 119 கிலோ மீட்டர். முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளைவிட 10 மடங்கு பெரியது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாங்குரோவ் காடுகள் இவை. முத்துப்பேட்டையில் சதுப்பு நிலக்காடுகள் (லகூன்) அமைந்துள்ளது தனித்தனித்தீவுகளாக காட்சியளிப்பது முத்துப்பேட்டையின் சிறப்பம்சமாகும்.
முத்துப்பேட்டை பேரூராட்சியில் மொத்தம் 41722 மக்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 47% மற்றும் பெண்கள் 53% இருக்கிறார்கள். இஸ்லாமியம் முக்கிய மதம், மக்கள் தொகையில் 76.4% இந்த நகரத்தில் உள்ள முஸ்லிம்கள் உள்ளனர். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
முத்துப்பேட்டையின் சராசரி கல்வியறிவு விகிதம் 71% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 78% மற்றும் பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். “ஆவன்னா நேனா உதவி பெறும் துவக்கப் பள்ளி” தான் முத்துப்பேட்டையில் துவங்கப்பட்ட முதல் பள்ளிக்கூடமாகும். இப்பள்ளி சங்கத்து பள்ளிக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பேரூராட்சியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம்
முத்துப்பேட்டையில் பொருளாதார நடவடிக்கைகளில் தென்னை விவசாயம் மற்றும் அக்வா பண்ணைகள் அடங்கும். உள்ளூர் மக்களின் பாரம்பரிய தொழில் மீன்பிடித்தல் மற்றும் நகரத்தில் இரண்டு மீன் சந்தைகள் உள்ளன. முத்துப்பேட்டையின் பிரதானமாக தொழிலாக இருப்பது மீன் பிடிப்பதும், வீட்டுமனை விற்பனை, விவசாயம், தேங்காய் வியாபாரமுமாகும். முத்துப்பேட்டையிலிருந்து பல மாநிலங்களுக்குத் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக ஜெபிப்போம்.
ஆண்டவர் ஷேக் தாவூத் கமில் ஒலியுல்லாவின் 700 ஆண்டுகள் பழமையான இஸ்லாமிய ஆலயமான முத்துப்பேட்டை தர்கா பாரம்பரிய கட்டிடக்கலையைப் பயன்படுத்தி கட்டப்பட்டது. இந்த புனித தர்காவிற்கு ஜாதி, மதம், மத வேறுபாடின்றி மக்கள் வந்து செல்கின்றனர். பெரும்பாலான பார்வையாளர்கள் கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள், இருப்பினும் சர்வதேச பார்வையாளர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தருகின்றனர். மேலும் 70 கி.மீ. தொலைவில் தஞ்சாவூரும், 29 கி.மீ. தொலைவில் மல்லிபட்டினமும் வேளாங்கண்ணி நாகூர் தென் கிழக்கு முனையில் கோடியக்கரையும் சுற்றுலா தளங்களாக அமைந்துள்ளன. இந்த நகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக ஜெபிப்போம்.