No products in the cart.

தினம் ஓர் ஊர் – மருங்காபுரி (Marungapuri) – 17/06/24
தினம் ஓர் ஊர் – மருங்காபுரி (Marungapuri)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருச்சிராப்பள்ளி
மக்கள் தொகை – 3943
கல்வியறிவு – 71.44%
மக்களவைத் தொகுதி – கரூர்
சட்டமன்றத் தொகுதி – மணப்பாறை
District Collector – Bro. M.Pradeep Kumar (IAS)
Assistant Collector – Bro. J.E.Padmaja (IAS)
Commissioner of Police – Sis. N. Kamini (IPS)
Superintendent of Police – Bro. V. Varunkumar (IPS)
District Revenue Officer – Sis. R. Rajalakshmi
Project Director – Bro. S. Devanathan
மக்களவை உறுப்பினர் – Sis. Jothimani (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. P. Abdul Samad (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. S.N. Siyamala
நகராட்சி தலைவர் – Sis. Geetha A Maickelraj
நகராட்சி துணை தலைவர் – Sis. R. Muthulakshmi
Principal District Judge – Bro. K.Babu
ஜெபிப்போம்
மருங்காபுரி தாலுக்கா என்பது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுக்கா ஆகும். இது 2013 இல் மணப்பாறை தாலுகாவில் இருந்து பிரிக்கப்பட்டது. மருங்காபுரி தாலுக்காவில் மருங்காபுரி, துவரங்குறிச்சி மற்றும் வளநாடு ஃபிர்காக்கள் அதன் அதிகார எல்லைகளாக உள்ளன.
மருங்காபுரி வட்டம் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக மருங்காபுரி நகரம் உள்ளது. நகராட்சி ஆணையர் Sis. S.N. Siyamala அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. Geetha A Maickelraj அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Sis. R. Muthulakshmi அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
மருங்காபுரி பேரூராட்சி, மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். மக்களவை உறுப்பினர் சகோதரி ஜோதிமணி அவர்களுக்காகவும், சட்டமன்ற உறுப்பினர் சகோ. அப்துல் சமது அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற எல்லா காரியங்களிலும் கர்த்தர் துணையாக இருந்து வழிநடத்தும்படி ஜெபிப்போம். இந்த தொகுதியின் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றும்படி ஜெபிப்போம்.
மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் சகோதரி சி.அம்மாக்கண்ணு அவர்களுக்காக ஜெபிப்போம். கர்த்தருடைய கரத்திற்குள் இவரை ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.
மருங்காபுரி தொகுதி மற்றும் மருங்காபுரி தாலுக்காவில் மொத்தம் 49 பஞ்சாயத்து கிராமங்களும், 96 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இந்த தாலுக்காவில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களுக்காகவும் அவர்களுடைய ஆசீர்வாதங்களுக்காக ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களும் தங்களுடைய பணியை உண்மையோடு செய்ய அவர்களுக்கு தேவன் கிருபை பாராட்டும்படி ஜெபிப்போம்.
மருங்காபுரி ஊராட்சியில் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். விவசாயிகளுக்காகவும், விவசாய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். அவர்களுடைய குடும்ப பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம்.
மருங்காபுரி பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 3943 ஆகும். இதில் 1969 ஆண்கள் மற்றும் 1974 பெண்கள் உள்ளனர். இந்த நகரத்தில் 888 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். மருங்காபுரியில் ஆண்களின் கல்வியறிவு 81.49% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 61.39% ஆகவும் உள்ளது. இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகையில் 2222 பேர் பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பிரதான வேலையில் ஈடுபட்டுள்ள 2222 தொழிலாளர்களில், 482 பேர் விவசாயிகள் மற்றும் 1123 பேர் விவசாயத் தொழிலாளர்கள். இவர்களுக்காகவும், இவர்கள் கையின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.