No products in the cart.
தினம் ஓர் ஊர் – பண்போலி(Panboli) – 05/08/23
தினம் ஓர் ஊர் – பண்போலி
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தென்காசி
மக்கள் தொகை – 9,313
கல்வியறிவு – 80.09 %
மக்களவைத் தொகுதி – தென்காசி
சட்டமன்றத் தொகுதி – கடையநல்லூர்
மாவட்ட ஆட்சியர் – Bro. Durai Ravichandran (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. E.T.Samson (I.P.S)
District Revenue Inspector – Bro. M.Nagaranjan
Special Revenue Inspector – Bro. A.Abdul Kadar @ Abu
மக்களவை உறுப்பினர் – Bro. Dhanush M.Kumar (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. C.Krishnamurali (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. S.Parkavi
நகராட்சி தலைவர் – Sis. R.Ramalakshmi
நகராட்சி துணை தலைவர் – Bro. S.Navaneetha Krishnan
வருவாய்துறை ஆணையர் – Bro. R.Petchikumar (Shencottai)
Principal District Munsif – Bro. K. Baskar
Additional District Judge – Sis. G.Anuradha
District Munisif cum Judicial Magistrate – Bro. M.Sunil Raja
ஜெபிப்போம்
பண்போலி (Panboli), என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில் இருக்கும் இரண்டாம்நிலை பேரூராட்சி ஆகும். இந்த நகரம் மாவட்டத் தலைமையிடமான தென்காசிக்கு கிழக்கே 9 கிமீ தொலைவிலும்; கடையநல்லூரிலிருந்து 18 கிமீ தொலைவிலும், செங்கோட்டையிலிருந்து 5 கிமீ தொலைவிலும்; குற்றாலத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது. பண்போலி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் Bro. C.Krishnamurali அவர்களுக்காகவும், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Dhanush M.Kumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியினை பொறுப்போடு செய்ய ஜெபிப்போம்.
செங்கோட்டை நகராட்சி ஆணையர் Sis. S.Parkavi அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. R.Ramalakshmi அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. S.Navaneetha Krishnan அவர்களுக்காகவும், வருவாய்துறை ஆணையர் Bro. R.Petchikumar (Shencottai) அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சி 8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 60 தெருக்களும், 2,619 வீடுகளையும் கொண்டுள்ளது. பண்போலி பேரூராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளுக்காகவும், வார்டு உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற எல்லா காரியங்களிலும் கர்த்தருடைய ஆலோசனையும், வழிநடத்தலும் இருக்க ஜெபிப்போம். குடிநீர், சாலை வசதி, மின்சாரம், போக்குவரத்து வசதி ஆகிய அடிப்படை வசதிகள் முறையாக செயல்பட ஜெபிப்போம்.
பண்போலி டவுன் பஞ்சாயத்தில் 9,313 மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஆண்கள் 4,692 பேரும், பெண்கள் 4,621 பேரும் உள்ளனர். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 928 ஆகும். மேலும் பண்போலியில், ஆண்களின் கல்வியறிவு 82.75% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 64.88% ஆகவும் உள்ளது. பண்போலியில் உள்ள மக்களுக்காக அவர்களின் தேவைகளுக்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தருடைய பாதுகாப்பு கரத்திற்குள்ளாக ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத மக்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.
பண்போலியில் விவசாயமே பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. நெல் மற்றும் தென்னை விவசாயம் உள்ளூர் மக்களின் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. ஏனெனில் நெல், தென்னை போன்ற பயிர்களை பயிரிடுவதற்கு நிலம் மிகவும் பொருத்தமானது. இந்த கிராமம் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டம் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவு தானியங்களின் மைய புள்ளியாக செயல்படுகிறது. விவசாயிகளுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். விவசாய தொழிலை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.
மேலும், பண்போலி பேரூராட்சியில் இருந்து ஏராளமான ஆண்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்கள். குடும்பத்தைவிட்டு வெளிநாட்டிற்கு சென்று வேலைசெய்பவர்களுக்காக ஜெபிப்போம். அவர்களுக்காகவும், அவர்களகுடும்பங்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கின்ற வேலை கர்த்தர் ஆசீர்வதித்து, அவர்கள் கையின் பிரயாசங்கள் வர்த்திக்க செய்ய ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.