Daily Updates

தினம் ஓர் ஊர் – நடுவட்டம் (Naduvattam) – 23/01/25

தினம் ஓர் ஊர் – நடுவட்டம் (Naduvattam)

மாவட்டம் – நீலகிரி

வட்டம் – உதகமண்டலம்

மாநிலம் – தமிழ்நாடு

மக்கள் தொகை – 8,505

கல்வியறிவு – 76.47 %

மாவட்ட ஆட்சியர் – Sis. Lakshmi Bhavya Tanneeru I.A.S.,

Superintendent of Police  – Sis. N.S. Nisha I.P.S.,

Additional Collector (Dev) /

Project Director, DRDA /

Project Director, SADP  – Bro. H.R. Koushik I.A.S.,

District Revenue Officer – Bro. M. Narayanan

மக்களவைத் தொகுதி – நீலகிரி

சட்டமன்றத் தொகுதி – கூடலூர்

மக்களவை உறுப்பினர் – Bro. A. Raja (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Pon Jayaseelan (MLA)

Chairperson  – Sis. M.Vanieshwari

Vice Chairman – Bro. J.Ravikumar

District Munsif Kothagiri, Coonoor

and District Court of Nilgiris – Bro. Duraisamy

District Judge  – Bro. N. Muralidharan (Udhagamandalam)

ஜெபிப்போம்

நடுவட்டம் (Naduvattam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். “பெட்டா” என்றால் கன்னட மொழியில் மலை என்று பொருள். நடுவட்டம் பேரூராட்சி, மேற்கு தொடர்ச்சி மலையில் 1750 மீட்டர் உயரத்தில் உள்ளது.

நடுவட்டம் நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இப்பேரூராட்சியானது 61.70 சகிமீ பரப்பும், 30 தெருக்களும் கொண்டுள்ளது. தேயிலைத் தோட்டங்களும் சின்கோனா மரக்காடுகளும் இவ்வூரில் பெருமளவில் காணப்படுகின்றன.

இப்பேரூராட்சி கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.  கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. Pon Jayaseelan அவர்களுக்காகவும், நீலகிரி மக்களவை உறுப்பினர்  Bro. A. Raja அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பொறுப்பினை உண்மையாக நிறைவேற்றிட ஜெபிப்போம்.

நடுவட்டம் டவுன் பஞ்சாயத்தில் 8,505 மக்கள் தொகை உள்ளது, இதில் 4,249 ஆண்கள் மற்றும் 4,256 பெண்கள். நடுவட்டம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இப்பேரூராட்சியில் மொத்தம் 2340 குடும்பங்கள் வாழ்கிறார்கள். நடுவட்டத்தில் ஆண்களின் கல்வியறிவு 85.53% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 67.39% ஆகவும் உள்ளது. மக்கள்தொகையில் இந்து 90.68%, முஸ்லிம் 4.20%, கிறிஸ்தவர்கள் 4.84%, சீக்கியர் 0.02% மற்றும் பௌத்தர் 0.01% உள்ளனர்.

இப்பேரூராட்சியில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 4,653 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2,607 ஆண்கள் மற்றும் 2,046 பெண்கள். மக்கள்தொகை கணக்கெடுப்பில், தொழிலாளி வணிகம், வேலை, சேவை, மற்றும் விவசாயி மற்றும் தொழிலாளர் செயல்பாடுகளை செய்பவர் என வரையறுக்கப்படுகிறது.

நடுவட்டம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். நடுவட்டம் நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம்.  நடுவட்டம் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.