No products in the cart.

தினம் ஓர் ஊர் – நங்கவரம் (Nangavaram) – 05/07/24
தினம் ஓர் ஊர் – நங்கவரம் (Nangavaram)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கரூர்
மக்கள் தொகை – 17,629
கல்வியறிவு – 80.09%
மக்களவைத் தொகுதி – பெரம்பலூர்
சட்டமன்றத் தொகுதி – குளித்தலை
District Collector – Bro. M. Thangavel, I.A.S
Superintendent of Police – Bro. Prabhakar
District Revenue Officer – Bro. M. Kannan
Project Director – Sis. Sreelekha Thamilchelvan
Municipality Commissioner – Bro. N.Nanda Kumar (Kulithalai)
Chairman – Bro. V.P.Sekar (Kulithalai)
Vice-Chairman – Bro. K.M.Senthilkumar (Kulithalai)
மக்களவை உறுப்பினர் – Bro. Arun Nehru (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. R.Manickam (MLA)
District Judge – Bro. R. Shanmuga Sundaram
Chief Judicial Magistrate (Karur) – Bro. C.Sornakumar
Principal District Munsif Judge (Karur) – Sis. T.P.Sridevi
Principal District Munsif – Sis. R.Tamilarasi
ஜெபிப்போம்
நங்கவரம் (Nangavaram) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். இவ்வூர் சோழர் காலத்தில் நங்கை பிரமதேயமான அரிஞ்சிகைச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.
கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கரூர்- 60 கிமீ, குளித்தலை-18 கிமீ, திருச்சிராப்பள்ளி-20 கிமீ, முக்கொம்பு சுற்றுலாத்தலம்-6 கிமீ தொலைவில் நங்கவரம் பேரூராட்சி அமைந்துள்ளது.
நங்கவரம் பேரூராட்சி குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் Bro. R.Manickam அவர்களுக்காகவும், பெரம்பலூர் மக்களவை உறுப்பினர் Bro. Arun Nehru அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
நங்கவரம் நகரம் 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. Municipality Commissioner Bro. N.Nanda Kumar அவர்களுக்காகவும், Chairman Bro. V.P.Sekar அவர்களுக்காகவும், Vice-Chairman Bro. K.M.Senthilkumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
நங்கவரம் டவுன் பஞ்சாயத்தில் 17,629 மக்கள்தொகை உள்ளது, இதில் 8,614 ஆண்கள் மற்றும் 9,015 பெண்கள் உள்ளனர். நங்கவரத்தில் ஆண்களின் கல்வியறிவு 81.79% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 63.67% ஆகவும் உள்ளது. இப்பேரூராட்சியில் மொத்தம் 4,477 குடும்பங்கள் வாழ்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் இந்து 98.89%, முஸ்லிம் 0.75%, கிறிஸ்தவர் 0.33% பேர் உள்ளனர்.
நங்கவரம் பேரூராட்சி காவிரி ஆறு அருகில் இருப்பதால் விவசாயம் முதன்மைத் தொழிலாகும். உய்யக்கொண்டன், கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் பாசனம் பெருகிறது. மண்வளமும் நீர்வளமும் இருப்பதால் வாழை, கோரை புல், கரும்பு, நெல் ஆகியவை அதிகமாக வளர்கிறது. குறிப்பாக நெல் இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. குளித்தலைக்கு மேற்கே லாலாப்பேட்டை என்ற ஊரிலிருந்து கிழக்கே நங்கவரம் வரையில் பகுதிகளில் பயிரிடப்படும் பல்வேறு தரப்பட்ட நெல் ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
நங்கவரம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். நங்கவரம் பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.