Daily Updates

தினம் ஓர் ஊர் – தெங்கம்புதூர்  (Thengampudur) – 16/09/23

தினம் ஓர் ஊர் – தெங்கம்புதூர்  (Thengampudur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – கன்னியாகுமரி

மக்கள் தொகை – 14,538

கல்வியறிவு – 93.63%

மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி

சட்டமன்றத் தொகுதி – கன்னியாகுமரி

மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)

துணை மாவட்ட ஆட்சியர் –  Bro. H.R.Koushik (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)

District Revenue Officer –  Bro. J.Balasubramaniam

District Forest Officer – – Bro. M.Ilayaraja (I.F.S)

Joint Director / Project Director – Bro. P.Babu

மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)

சட்டமன்ற உறுப்பினர் — Bro. Thalavai Sundaram (MLA)

மாநகராட்சி ஆணையாளர் — Bro. Anand Mohan

Principal District Court  –  Bro. P.Ramachandran (Kanyakumari)

ஜெபிப்போம்

தெங்கம்புதூர் (Thengampudur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த பேரூராட்சி கன்னியாகுமரியிலிருந்து 11 கிமீ; நாகர்கோவிலிருந்து 9 கிமீ தொலைவிலும் உள்ளது. தெங்கம்புதூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

தெங்கம்புதூர் நகர் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. அக்டோபர், 2021 முதல் நாகர்கோயில் மாநகராட்சியுடன் கன்னியாகுமரி மாவட்டத்தின் தெங்கம்புதூர் மற்றும் ஆளுர் பேரூராட்சிகள் முழுமையாக இணைக்கப்பட்டது. தெங்கம்புதூர் நகரத்தில் உள்ள வார்டு கவுன்சிலர்களுக்காக ஜெபிப்போம்.

தெங்கம்புதூர் பேரூராட்சி கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Thalavai Sundaram  அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி 4.15 சகிமீ பரப்பும், 27 தெருக்களும் 3849 வீடுகளும் உள்ளன. தெங்கம்புதூர் பேரூராட்சியில் மொத்தம் 14,538 மக்கள் இருக்கிறார்கள் இவர்களில் ஆண்கள் 7,289 ஆண்கள் மற்றும் 7,249 பெண்கள் உள்ளனர். மக்கள் தொகையில் இந்துக்கள் 81.01% பேரும், முஸ்லிம்கள் 0.71% பேரும், கிறிஸ்தவர்கள் 18.21% பேரும், பௌத்த 0.01% பேரும், மதங்களை பின்பற்றாதவர்கள் 0.07% பேரும் உள்ளனர். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். இங்குள்ள குடும்பங்களை கர்த்தருடைய பாதுகாப்புகரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.

தெங்கம்புதூர் நகரத்தின் எழுத்தறிவு விகிதம் மாநில சராசரியான 80ஐ விட 93.63% அதிகமாக உள்ளது. தெங்கம்புதூரில் ஆண்களின் கல்வியறிவு 95.44% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 91.82% ஆகவும் உள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள சிறுபிள்ளைகளுக்காக, வாலிப பிள்ளைகளுக்காக ஜெபிப்போம். படிக்கின்ற பிள்ளைகளுக்கு கர்த்தர் ஞானத்தை கொடுத்து அவர்களை வழிநடத்தவும், படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் வாலிப பிள்ளைகளுக்கு கர்த்தர் நல்ல வேலையை கட்டளையிடவும் ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியில் மொத்த மக்கள் தொகையில் 5,155 பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 4,097 ஆண்கள் மற்றும் 1,058 பெண்கள் ஆவர். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக அவர்கள் செய்கின்ற தொழில்களுக்காக ஜெபிப்போம். அவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் கர்த்தர் பாதுகாத்திட ஜெபிப்போம்.

தெங்கம்புதூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களுடைய தேவைகளுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதியில் ஆண்டவருடைய வார்த்தை அறிவிக்கப்படவும் ஜெபிப்போம். மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய  எழுப்புதலை

கொண்டுவரும்படி ஜெபிப்போம். வாலிப பிள்ளைகள் கர்த்தருக்காக எழும்பி பிரகாசித்திட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.