No products in the cart.

தினம் ஓர் ஊர் – தாமரைக்குளம் (Thamaraikulam) – 19/10/23
தினம் ஓர் ஊர் – தாமரைக்குளம் (Thamaraikulam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தேனி
மக்கள் தொகை – 12,372
கல்வியறிவு – 66%
மக்களவைத் தொகுதி – தேனி
சட்டமன்றத் தொகுதி – பெரியகுளம்
மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)
District Revenue Officer – Sis. Jeyabharathi
District Forest Officer – Bro. S.Kowtham
மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. K.S.Saravanakumar (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. S.Ganesh
நகராட்சி தலைவர் – Sis. S.Sumitha
நகராட்சி துணை தலைவர் – Bro. S.Raja Mohamed
கிராமத் தலைவர் – திரு ஞான சம்பந்தம்
Revenue Divisional Officer – Sis. K.Sindhu (Periyakualam)
Town Planning Inspector – Bro. R.Veeranan
Principal District Judge – Sis. K. Arivoli
Additional District & Sessions Judge – Bro. P.Ganesan (Periyakulam)
Subordinate Judge – Bro. K.Mariappan (Periyakulam)
District Munsif – Bro. A.Kannan (Periyakulam)
Judicial Magistrate – Bro. K.Kamalanathan (Periyakulam)
ஜெபிப்போம்
தாமரைக்குளம் (Thamaraikulam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் குளந்தை நகர் என்று அழைக்கப்படும். தாமரைக்குளம் பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.
புதுக்கோட்டை அன்னவாசலைச் சுற்றி வாழ்ந்த மக்கள் கூட்டம் புதுக்கோட்டை மன்னரின் கொடுமையால் தங்கள் இடத்தை விட்டு இடம் பெயர்ந்தனர். சில குழுக்கள் தாமரைக்குளத்திற்கு வந்தனர், அவர்கள் இந்த இடத்தை ஒரு பொருத்தமான குடியிருப்பு என்று கண்டறிந்தனர். அதனால் அவர்கள் அந்த இடத்தில் ஒரு கிராமத்தை நிறுவினர், அது பின்னர் தாமரைக்குளம் என்று அழைக்கப்பட்டது. கிராமத்தை உருவாக்கும் போது அவர்கள் எல்லைகளை நிர்ணயித்தார்கள். அவர்கள் கிராமத்தை உருவாக்கியபோது முஸ்லிம்கள், கரகர்த்தார், அம்பலத்தார், மறவர், பிள்ளைமார் மற்றும் பறையர் என 5 வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் இருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் Sis. R.V.Shajeevana அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. Dongare Pravin Umesh அவர்களுக்காகவும், District Revenue Officer Sis. Jeyabharathi அவர்களுக்காகவும், District Forest Officer Bro. S.Kowtham அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை வழிநடத்திட ஜெபிப்போம்.
தாமரைக்குளம் பேரூராட்சி பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. தேனி மக்களவை உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் Bro. K.S.Saravanakumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை உண்மையாக நிறைவேற்ற ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
பெரியகுளம் நகராட்சி ஆணையர் Bro. S.Ganesh அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. S.Sumitha அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. S.Raja Mohamed அவர்களுக்காகவும், Revenue Divisional Officer Sis. K.Sindhu அவர்களுக்காகவும், Town Planning Inspector Bro. R.Veeranan அவர்களுக்காகவும், தாமரைக்குளம் பேரூராட்சியின் கிராமத் தலைவர் திரு ஞான சம்பந்தம் அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற எல்லா பணிகளிலும் தேவகரம் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
கும்பக்கரையிலிருந்து தொடங்கும் பம்பாறு (பாம்பு ஆறு) காந்திநகர் வழியாகச் சென்று வங்காளப்பட்டி அருகே வராகநதியில் கலக்கிறது. இந்த ஆற்றில் நந்தியாபுரம், பட்டத்திகுளம், புதுக்குளம் உள்ளிட்ட பல குளங்கள் நிரம்புகின்றன. இந்த ஆறு சுற்றுவட்டார பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இதற்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி மொத்தம் 12,372 மக்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஆண்கள் 51% மற்றும் பெண்கள் 49% உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 3,143 குடும்பங்கள் வாழ்கிறார்கள். தாமரைக்குளம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இந்த பேரூராட்சியில் வாழும் மக்களுக்காகவும் அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை பரிசுத்த ஆவியானவர் ஆளுகை செய்ய ஜெபிப்போம். குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சியின் முக்கிய தொழில் விவசாயம், குறிப்பாக மா, நெல், கரும்பு, வாழை, பருத்தி மற்றும் தென்னை. இக்கிராமத்தின் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். எண்ணிலடங்கா சிலரே அரசு ஊழியர்களாக பணியாற்றுகிறார்கள். இந்த நகரத்தில் உள்ள விவசாயிகளுக்காக, விவசாய குடும்பங்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம். தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். விவசாயிகள் செலவு செய்து விளைவித்த பொருட்கள் அவர்கள் எதிர்பார்த்த விலைக்கு விற்கப்பட ஜெபிப்போம்.