Daily Updates

தினம் ஓர் ஊர் – சோழவந்தான் (Cholavandan) – 15/03/24

தினம் ஓர் ஊர் – சோழவந்தான் (Cholavandan)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – மதுரை

மக்கள் தொகை – 22,578

கல்வியறிவு – 80.7%

மக்களவைத் தொகுதி – தேனி

சட்டமன்றத் தொகுதி – சோழவந்தான்

District Collector – Sis. M. S. Sangeetha (IAS)

Additional Collector (D) / Project Director – Bro. S. Saravanan (IAS)

Superintendent of Police – Bro. Dongare Pravin Umesh (IPS)

District Revenue Officer – Bro. R. Sakthivel

மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. A. Venkatesan (MLA)

Mayor – Sis. Indirani Pon Vasanth

Deputy Mayor – Bro.T. Nagarajan

Madurai Corporation Commissioner – Bro. C. Dinesh Kumar

Deputy Commissioner – Bro. M. Dhayanithi

Deputy Commissioner – Bro. K. Saravanan

Principal District and Sessions Judge – Bro. S. Sivakadatcham (Madurai)

Judicial Magistrate – Sis. S. Vengatalakshmi

ஜெபிப்போம்

சோழவந்தான் (Cholavandan) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். பாகனூர் கூற்றத்து சோழாந்தக சதுர்வேதி மங்கலம் என்று கல்வெட்டுகளில் அழைக்கப்பட்ட இவ்வூர் சோழவந்தான் என தற்போது அழைக்கப்படுகிறது. சோழாந்தகன் என்பது வீரபாண்டியனின் சிறப்புப் பெயர் ஆகும். சோழவந்தான் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது 15.24 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளையும் கொண்டது. இந்த நகரம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. A. Venkatesan அவர்களுக்காகவும், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

சோழவந்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,578 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 11,168 ஆண்கள், 11,410 பெண்கள் ஆவார்கள். சோழவந்தான் மக்களின் சராசரி கல்வியறிவு 82.41% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 88.98%, பெண்களின் கல்வியறிவு 75.98% ஆகும். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 93.54% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 4.53% கிறிஸ்தவர்கள் 1.64%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். கிறிஸ்தவர்கள் குறைவாக உள்ள இந்த பேரூராட்சியில் கர்த்தர் அநேக தேவபிள்ளைகளை எழுப்பி தர ஜெபிப்போம்.

சோழவந்தான் அதன் வெற்றிலைகளுக்கு மிகவும் பிரபலமானது, அவை துணைக் கண்டத்தில் உள்ள பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மேலும் நெல் பயிரிடப்படும் முக்கிய பயிர்; சோழவந்தனைச் சுற்றிலும் நெல் வயல்களே நிறைந்துள்ளது. வாழை மற்றும் தென்னை மற்ற முக்கிய பயிர்கள். சோழவந்தானிலிருந்து வைகை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தென்கரை கிராமம் சில சமயங்களில் ஒரு சிறிய “தென்னை தீவு” என்று அழைக்கப்படுகிறது. கர்த்தர் விவசாயிகளையும், விவசாய தொழிலையும் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.

சோழவந்தான் மதுரை விவேகானந்தா கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது. மேலும் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசன் சண்முகனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, எம்.வி.எம். மெட்ரிக் பள்ளி மற்றும் காமராஜர் மேல்நிலைப் பள்ளி ஆகியவை உள்ளூர் பள்ளிகளாகும். இந்த பேரூராட்சியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், மாணவர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.