No products in the cart.

தினம் ஓர் ஊர் – சித்தன்னவாசல் (Sithanavasal) – 25/11/23
தினம் ஓர் ஊர் – சித்தன்னவாசல் (Sithanavasal)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – புதுக்கோட்டை
மக்கள் தொகை – 1629
கல்வியறிவு – 79.31 %
மக்களவைத் தொகுதி – கரூர்
சட்டமன்றத் தொகுதி – விராலிமலை
மாவட்ட ஆட்சியர் – Sis. I.S.Mercy Ramya (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Vandita Pandey (I.P.S)
மக்களவை உறுப்பினர் – Sis. Jothimani Sennimalai (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. C. Vijayabaskar (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. S.N.Siyamala
நகராட்சி தலைவர் – Sis. S.Thilagavathi
நகராட்சி துணை தலைவர் – Bro. M.Liyakath Ali
Town Planning Officer – Bro. Balaji
Town Planning Inspectors – Bro. S.Jayasankar
Sis. Vijaya Varatha Rajan
Principal District Judge – Bro. K.Poorana Jeya Anand
District Munsif cum Judicial Magistrate – Bro. S.Anbuthasan (Illuppur)
ஜெபிப்போம்
சித்தன்னவாசல் (Sithanavasal) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் தொகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம்/குக்கிராமமாகும். சித்தன்னவாசல் புதுக்கோட்டை நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்த தொல்லியல் சிறப்பு மிக்க கிராமம் ஆகும். இது சித்தன்னவாசல் ஊராட்சிக்கு உட்பட்டது. சித்தன்னவாசல் ஊராட்சிக்காக ஜெபிப்போம்.
சித்தன்னவாசல் கிழக்கு நோக்கி புதுக்கோட்டை தொகுதி, வடக்கு நோக்கி விராலிமலை தொகுதி, தெற்கு நோக்கி பொன்னமராவதி தொகுதி, தெற்கே திருமயம் தொகுதி ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, காரைக்குடி, லால்குடி ஆகியவை சித்தன்னவாசலுக்கு அருகிலுள்ள நகரங்கள் ஆகும். இந்த ஊராட்சிக்கு அருகில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.
இந்த நகரம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கரூர் மக்களவை உறுப்பினர் Sis. Jothimani Sennimalai அவர்களுக்காகவும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் Bro. C. Vijayabaskar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
சித்தன்னவாசல் ஊராட்சியின் நகராட்சி ஆணையர் Sis. S.N.Siyamala அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. S.Thilagavathi அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர்Bro. M.Liyakath Ali அவர்களுக்காகவும், Town Planning Officer Bro. Balaji அவர்களுக்காகவும், Town Planning Inspectors Bro. S.Jayasankar, Sis. Vijaya Varatha Rajan அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இந்த ஊராட்சியில் மொத்த மக்கள் தொகை 1629. இதில் 805 ஆண்களும், 824 பெண்களும் ஆகும். மொத்த மக்கள் தொகையில் 650 பேர் கல்வியறிவு பெற்றவர்கள்.இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் தேவைகளுக்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் கர்த்தருடைய ஆளுகை உண்டாயிருக்க ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம்.
சித்தன்னவாசல் ஊராட்சி மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த ஊராட்சியின் தலைவருக்காகவும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற பணிகளில் தேவ கரம் பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.
சித்தன்னவாசல் ஊராட்சியில் 135 குடிநீர் இணைப்புகள், 5 சிறு மின்விசைக் குழாய்கள், 5 கைக்குழாய்கள், 4 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 15 உள்ளாட்சிக் கட்டடங்கள், 3 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள், 15 ஊரணிகள் அல்லது குளங்கள், 100 ஊராட்சி ஒன்றியச் சாலைகள், 3 ஊராட்சிச் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது. இதற்காக ஜெபிப்போம்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தலம் சித்தன்னவாசல். இரண்டாம் நூற்றாண்டினை சோ்ந்த சமணா் கோயில் ஒன்று இருபுறமும் மகாவீரா் சிலைகளுடன் இங்கு காணப்படுகிறது. இந்த கோயில் தியான மண்டபம் அல்லது அறிவா் கோயில் என்றழைக்கப்படுகிறது. இந்த கோயிலின் மேல்புறத்தில் (ceiling) மகேந்திர வா்மன் காலத்து ஒவியங்கள் வரையப்பட்டுள்ளது. இந்திய ஒவியக்கலை வரலாற்றில் அஜந்தா குகை ஒவியத்திற்கு அடுத்ததாக புகழ்பெற்ற ஒவியங்கள் அங்கு அமைந்துள்ளது.
இங்குள்ள குகைகளின் மேற்கு சரிவிலும், மூலிகைகளினால் வரையப்பட்ட (Fresco – Paintings) ஒவியங்கள் காணப்படுகிறது. தமிழா்களின் கலை பண்பாட்டினை பாறைசாற்றும் உயிரோட்டமுள்ள ஒவியங்களாக இவை திகழ்கின்றன். ஓா் அழகிய குளத்தில் தாமரை மலா்கள், அல்லி மலா்கள், மீன்கள் நீந்துவது போலவும் எருமைகள் நிற்பது போலவும் யானைகள் தண்ணீா் குடிப்பது போலவும் கீரிப்பிள்ளை விளையாடுவது போலவும் அரசன் அரசியின் ஒவியங்களும் தத்தரூபமாக அமையப்பெற்றுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பொழுது போக்கிற்காக இங்கு சிறுவா் பூங்காவும் இசை நீருற்றுகளும் சுற்றுலாத்துறை சார்பாக நிறுவப்பட்டுள்ளது. சித்தன்னவாசல் சுற்றுலா வளா்ச்சி சங்கத்தின் சார்பாக படகு குளம் ஒன்றும் இங்கு செயல்படுகிறது. இந்த நகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக ஜெபிப்போம்.