No products in the cart.

தினம் ஓர் ஊர் – கோம்பை (Kombai) – 21/10/23
தினம் ஓர் ஊர் – கோம்பை (Kombai)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தேனி
மக்கள் தொகை – 15,960
கல்வியறிவு – 64%
மக்களவைத் தொகுதி – தேனி
சட்டமன்றத் தொகுதி – கம்பம்
மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)
District Revenue Officer – Sis. Jeyabharathi
District Forest Officer – Bro. S.Kowtham
மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Eramakrishnan (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. M.Ganesan
நகராட்சி தலைவர் – Sis. B.Renupriya
நகராட்சி துணை தலைவர் – Bro. M.Selvam
Principal District Judge – Sis. K. Arivoli
Judicial Magistrate – Bro. A.Ramanathan (Uthamapalayam)
Subordinate Judge – Bro. M.Shivaji Chellaih (Uthamapalayam)
District Munsif – Bro. A.Saravanasenthilkumar (Uthamapalayam)
ஜெபிப்போம்
கோம்பை (Kombai) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் கோம்பை நாய் வகைக்குப் பெயர்பெற்றதாகும். நாயக்கர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் கோம்பை ஒன்று. கோம்பை, தேனியிலிருந்து 37 கிமீ தொலைவில் உள்ளது. கோம்பை பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
கோம்பை என்பதற்கு முடக்கு, மலையடிவாரம், தென்னை என்று பல பொருள் குறிக்கும் சொல் என்றாலும், இங்கு பன்றிமலை, மேற்குமலை, கழுகுமலை என்னும் மூன்று மலைகளிடையே முன்பு முடங்கிக் கிடந்ததால் முடங்கில் இருந்ததால் இப்பெயர் பெற்றதாக கருதப்படுகிறது.
இது கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் குளிர்ந்த காலநிலையைக் கொண்டுள்ளது. கோம்பை கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 399 மீட்டர் (1309 அடி) உயரத்தில் உள்ளது. இந்த கிராமம் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. வடக்குப் பக்கம்- பண்ணைப்புரம், கிழக்குப் பக்கம்- சாலமலை மலைகள், மேற்குப் பக்கம்- கேரள எல்லை மலைகள், தெற்குப் பக்கம்- உத்தமபாளையம் நகரம். ராமக்கல் மெட்டு மலைகள் என்று அழைக்கப்படும் இரண்டு மலைகள் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளன மற்றும் சாலமாலி மலைகள் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளன.
கோம்பை நாய் அல்லது பாலிகர் நாய் தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சைட்ஹவுண்ட் இனமாகும். பாரம்பரியமாக வேட்டையாடுவதற்காக வைக்கப்படும், அவை சிறந்த காவலர் நாய்களை உருவாக்குவதில் நற்பெயரைக் கொண்டுள்ளன. கோம்பை நாய் மற்றும் ராஜபாளையம் நாய் ஆகியவை காவல் துறையில் பணிபுரிகின்றன.
இப்பேரூராட்சியானது கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் Bro. Eramakrishnan அவர்களுக்காகவும், தேனி மக்களவை உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களை தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியானது 19.02 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 7 தெருக்களும் கொண்டது. நகராட்சி ஆணையர் Bro. M.Ganesan அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. B.Renupriya அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. M.Selvam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களுக்காகவும், அவர்களுடைய பணிகளுக்காக பணிகளுக்காக ஜெபிப்போம்.
கோம்பை பேரூராட்சியில் மொத்தம் 15,960 மக்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள் 50%. கோம்பையின் சராசரி கல்வியறிவு 64% ஆகும். இங்கு பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். கிறித்தவர்களும் இசுலாமியர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இந்த பேரூராட்சியில் வாழும் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை பரிசுத்த ஆவியானவர் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
கோம்பை பேரூராட்சியில் முதன்மைத்தொழிலாக வேளாண்மை விளங்குகிறது. தென்னை, காய்கறிகள், நிலக்கடலை, சோளம், கம்பு ஆகியன பொதுவாகப் பயிரிடப்படுகின்றன. வெள்ளிதோறும் ஊருக்குக் கிழக்கே வாரச்சந்தை கூடுகிறது. இது இன்றளவும் உயிர்ப்புடன் உள்ள சிற்றூர்ச்சந்தைகளுள் ஒன்றாகும். சுற்றுவட்டாரங்களில் மஞ்சள்காமாலை நாட்டு மருத்துவத்துக்குப் பெயர்பெற்றது. இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் விவசாயத்தில் கவனம் செலுத்துகிறார்கள். விவசாயிகள் முதன்மையாக தென்னை மற்றும் புளியை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர், இது இப்பகுதியில் இந்த பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகும். விவசாயிகளுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.