Daily Updates

தினம் ஓர் ஊர் – குற்றாலம்(Courtalam) – 06/08/23

தினம் ஓர் ஊர் – குற்றாலம்

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தென்காசி

மக்கள் தொகை – 2,710

கல்வியறிவு – 75%

மக்களவைத் தொகுதி – தென்காசி

சட்டமன்றத் தொகுதி – தென்காசி

மாவட்ட ஆட்சியர் – Bro. Durai Ravichandran (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. E.T.Samson (I.P.S)

District Revenue Inspector – Bro. M.Nagaranjan

Special Revenue Inspector – Bro. A.Abdul Kadar @ Abu

மக்களவை உறுப்பினர் – Bro. Dhanush M.Kumar (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. S.Palani Nadar (MLA)

நகராட்சி ஆணையர் – Sis. S.M.Farijan (Tenkasi)

நகராட்சி தலைவர் –  Bro. R.Sadhir

நகராட்சி துணை தலைவர் – Bro. K.N.L.Subbaiah

Municipal Engineer – Bro. R.Jayaseelan

Principal District Munsif – Bro. K. Baskar

Additional District Judge – Sis. G.Anuradha

ஜெபிப்போம்

குற்றாலம் (Courtalam), தமிழ்நாடு மாநிலத்தில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறப்புநிலை பேரூராட்சி ஆகும். மழைக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது. குற்றாலம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் எனவும் கூறப்படுகிறது. சங்ககாலத்தில் இது தேனூர் என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இந்த பேரூராட்சி திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், தென்காசியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், செங்கோட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

இப்பேரூராட்சியின் 8.5 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 78 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. தென்காசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் Bro. S.Palani Nadar அவர்களுக்காகவும், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Dhanush M.Kumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலம் அகஸ்தியமலைத் தொடரின் ஒரு பகுதியாகும். அப்பகுதியில் வாழ்ந்ததாகக் கருதப்படும் அகஸ்திய முனிவரின் பெயரைக் கொண்ட மலையாகும். குற்றாலத்திற்கு அருகில் உள்ள நகரம் 5 கிமீ (3.1 மைல்) தொலைவில் தென்காசி உள்ளது. இந்த மலையானது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும்.

குற்றாலம் பேரூராட்சி 556 வீடுகளும், 2,710 மக்கள்தொகையும் கொண்டுள்ளது. இவர்களில் ஆண்கள் 41% மற்றும் பெண்கள் 59%. உள்ளார்கள். குற்றாலத்தில் சராசரி கல்வியறிவு 75% ஆக உள்ளது. குற்றாலத்தில் உள்ள மக்களுக்காக அவர்களுடைய ஆசீர்வாதத்திற்காகவும், தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.

குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன. தென்மேற்குப் பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் “குற்றால சீசன்” என அழைக்கப்படுகிறது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் உள்ளன. அவை 1) பேரருவி 2) ஐந்தருவி 3) சிற்றருவி 4) பாலருவி 5) புலியருவி 6) பழத்தோட்ட அருவி 7) செண்பகாதேவியருவி 8) பழையகுற்றால அருவி 9) தேனருவி இந்த அருவிகளில் இருந்து கிளம்பும் சாரல் வெகு தொலைவு வரை தென்படும். குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக அவர்களின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.