Daily Updates

தினம் ஓர் ஊர் – கீரமங்கலம் (Keeramangalam)

தினம் ஓர் ஊர் – கீரமங்கலம் (Keeramangalam)

வட்டம் – ஆலங்குடி

மாவட்டம் – புதுக்கோட்டை

மாநிலம் – தமிழ்நாடு

மக்கள் தொகை – 9,357

கல்வியறிவு – 74%

மக்களவைத் தொகுதி – சிவகங்கை

சட்டமன்றத் தொகுதி – ஆலங்குடி

மாவட்ட ஆட்சியர் – Sis. M. Aruna, I.A.S..

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Thiru. Abishek Gupta

மாவட்ட வருவாய் அலுவலர் – Bro. SADHEESH R

Chief Judicial Magistrate  – Bro. K.S.Paulpandian (Pudukkottai)

Principal Subordinate Judge  – Bro. V. Venkatesaperumal (Pudukkottai)

District Munsif cum Judicial Magistrate  – Bro. A.Vijayabharathi (Alangudi)

ஜெபிப்போம்

கீரமங்கலம் (Keeramangalam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். இக்கிராமத்தின் அசல் பெயர் நக்கீரமங்கலம் என்று தமிழ்ப் பெருந்தகைக் கவிஞரான “நக்கீரர்” பெயரால் அழைக்கப்பட்டது. இங்குள்ள மலர்ச்சந்தை மற்றும் காய்கனிச் சந்தை இவ்வட்டாரத்தில் மிக பிரபலமானதாக உள்ளது.

கீரமங்கலம் முதல்நிலை பேரூராட்சி, புதுக்கோட்டையிலிருந்து 43 கிமீ தொலைவிலும். அறந்தாங்கிலிருந்து 20 கிமீ தொலைவிலும் உள்ளது. இதன் கிழக்கில் பேராவூரணி 13 கிமீ, மேற்கில் ஆலங்குடி 24 கிமீ, வடக்கில் பட்டுக்கோட்டை 30 கிமீ; தெற்கில் அறந்தாங்கி 20 கிமீ தொலைவில் உள்ளது. இந்த பேரூராட்சியின் அருகில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.

இந்த நகரம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இப்பேரூராட்சியானது 35.50 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 41 தெருக்களும் கொண்டுள்ளது. இந்த நகரத்தில் உள்ள கவுன்சிலர்களுக்காகவும், பேரூராட்சி தலைவருக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை உண்மையாக நிறைவேற்ற ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகை 9,357 ஆகும். இவர்களில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள் 50% உள்ளனர். இப்பேரூராட்சியில் மொத்தம் 2,402 குடும்பங்கள் வசிக்கின்றனர். கீரமங்கலத்தின் சராசரி கல்வியறிவு 74% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகம். இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 66% ஆக உள்ளது.

கீரமங்கலம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இங்குள்ள மக்களுக்காகவும், அவர்களுடைய தேவைகளுக்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் தெய்வீக சமாதானம் உண்டாக ஜெபிப்போம். குடும்பத்தில் இரட்சிக்கப்படாத பிள்ளைகளின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். கீரமங்கலம் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.