No products in the cart.

தினம் ஓர் ஊர் – களக்காடு (Kalakkad)
தினம் ஓர் ஊர் – களக்காடு (Kalakkad)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருநெல்வேலி
மக்கள் தொகை – 304,652
கல்வியறிவு – 88.63%
மக்களவைத் தொகுதி – திருநெல்வேலி
சட்டமன்றத் தொகுதி – நாங்குநேரி
District Collector – Bro. K. P. Karthikeyan (I.A.S)
Superintendent of Police – Bro. N.Silambarasan (I.P.S)
District Revenue Officer – Sis. M.Suganya
Joint Director / Project Director – Bro. S.Suresh
மக்களவை உறுப்பினர் – Bro. S.Gnanathiraviam (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Ruby R. Manoharan (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. R.Rajeswaran
Deputy Mayor – Bro. K.R.Raju
Commissioner – Bro.V. Sivakrishnamurthy
Chief Judicial Magistrate – Bro. S. Manojkumar (Tirunelveli)
Principal Sub Judge – Bro. M. Amirtha Velu (Tirunelveli)
Principal District Judge – Sis. C.P.M. Chandra
ஜெபிப்போம்
களக்காடு (Kalakkad) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகாவில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். களக்காடு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளில் ஒன்றாகும், மேலும் மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். களக்காடு பேரூராட்சியின் மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக 12 செப்டம்பர் 2021 அன்று களக்காடு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. களக்காடு நகராட்சிக்காக ஜெபிப்போம்.
முற்காலத்தில் பல (போர்) களங்களை கண்ட பெருமை கொண்டதால் களக்காடு எனப் பெயர் பெற்றதாகவும், ”களா”மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இது களக்காடு என பெயர் கொண்டதாகவும் கூறுவர். சுற்றிலும் பச்சைப் பசேல் வயல்களையும், குளங்களையும் கொண்டதாக விளங்குகிறது களக்காடு. இவ்வூரைச் சுற்றியுள்ள பெரும்பாலான சிறு கிராமங்களின் பெயர்கள் ”குளம்” என்று தான் முடிகிறது. இவ்வூர் பண்டை நாளில் ‘திருக்களந்தை’ என்று வழங்கப் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நகரமானது 17 ச.கி.மீ. பரப்பும், 27 வார்டுகளும், 234 தெருக்களும் கொண்டுள்ளது. களக்காடு நகராட்சி ஆணையர் Bro. R.Rajeswaran அவர்களுக்காகவும், வார்டு கவுன்சிலர்களுக்காகவும், வார்டு உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பணிகளை உண்மையாகவும், பொறுப்போடு நிறைவேற்றிட ஜெபிப்போம்.
மாவட்டத் தலைமையிட நகரமான திருநெல்வேலியிலிருந்து 45 கி.மீ. தொலைவிலும்; மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும்; நாங்குநேரியிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும்; வள்ளியூரிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும்; சேரன்மாதேவியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் களக்காடு உள்ளது.
இந்த நகராட்சி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Ruby R. Manoharan அவர்களுக்காகவும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. S.Gnanathiraviam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய வல்லமையான கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
களக்காடு டவுன் பஞ்சாயத்தில் 30,921 மக்கள் தொகை உள்ளது. இதில் 15,122 ஆண்கள் மற்றும் 15,799 பெண்கள் உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 8,098 குடும்பங்கள் வாழ்கின்றார்கள். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
இந்த நகரத்திற்கு அருகாமையில் உள்ள சுற்றுலா தலங்கள், 1. செங்கல்தேரி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் மேல் அமைந்துள்ள அழகான பகுதி செங்கல்தேரி ஆகும். 2. தலையணை: இங்கு பெரிய பெரிய பாறைகள் பல வடிவங்களில் காணப்படுகின்றன. தெளிந்த நீரோட்டம் உள்ள இந்த பகுதியில் பெரும்பாலான பாறைகள் பெரிய அளவு கூழாங்கற்களைப் போல் காட்சியளிக்கும். 3. பச்சையாறு அணை: களக்காடு நகரின் வடமேற்கே உள்ள மஞ்சுவிளை பகுதியில் உள்ளது. இதற்காக ஜெபிப்போம்.
களக்காடு மூன்று பக்கமும் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது. வனப்பகுதி கேஎம்டிஆர் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகமாக பாதுகாக்கப்படுகிறது. இது சிங்கவால் மக்காக் போன்ற பல அழிந்து வரும் விலங்குகளின் தாயகமாகும். இது திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் வளமான இடங்களில் ஒன்றாகும். சமீபத்தில் (சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு) தமிழக அரசால் வடக்கு பச்சையாறு அணை எனப்படும் சிறிய அணை கட்டப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைகள் காரணமாக களக்காட்டின் தட்பவெப்பம் பொதுவாக குளிர்ச்சியாகவும் தென்றலாகவும் இருக்கும்.
களக்காட்டில் மூன்று மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன: அரசு மேல்நிலைப் பள்ளி, குன்றக்குடி ஆதீனம் நடத்தும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிறுபான்மை சமூக அறக்கட்டளையால் நடத்தப்படும் கே.ஏ.எம்.பி. மீரானியா மேல்நிலைப் பள்ளி (அனைத்தும் மாநில வாரியப் பள்ளிகள்) மற்றும் இரண்டு தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் (செயின்ட் ஜான்ஸ். மற்றும் Nes) பல ஆரம்ப பள்ளிகளுக்கு கூடுதலாக. பொதுவாக இங்கு வாழும் மக்கள் நன்கு படித்தவர்கள். இந்த நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம்.
களக்காடு நகரத்தில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத மக்கள் மத்தியில் கர்த்தருடைய வார்த்தைகள் விதைக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். ஆவிக்குரிய தேவ ஊழியர்களை கர்த்தர் இந்த பகுதிகளில் எழுப்பி தர நாம் ஜெபிப்போம்.