Daily Updates

தினம் ஓர் ஊர் – கறம்பக்குடி (Karambakkudi) – 29/04/25

தினம் ஓர் ஊர் – கறம்பக்குடி (Karambakkudi)

மாவட்டம் – புதுக்கோட்டை

மாநிலம் – தமிழ்நாடு

மக்கள் தொகை – 110,612

கல்வியறிவு – 66.16 %

மக்களவைத் தொகுதி – திருச்சிராப்பள்ளி

சட்டமன்றத் தொகுதி – கந்தர்வகோட்டை (தனி)

மாவட்ட ஆட்சியர் – Sis. M. Aruna, I.A.S..

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Thiru. Abishek Gupta

மாவட்ட வருவாய் அலுவலர் – Bro. SADHEESH R

Chief Judicial Magistrate  – Bro. K.S.Paulpandian (Pudukkottai)

Principal Subordinate Judge  – Bro. V. Venkatesaperumal (Pudukkottai)

District Munsif cum Judicial Magistrate  – Bro. J.S. Vishwadev (Karambakudi)

ஜெபிப்போம்

கறம்பக்குடி (Karambakkudi) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பேரூராட்சி ஆகும். இது டெல்டா பகுதியில் உட்பட்டதாகும். கறம்பக்குடி பேரூராட்சி, புதுக்கோட்டையிலிருந்து 39 கிமீ தொலைவிலும், பட்டுக்கோட்டையிலிருந்து 23 கிமீ தொலைவிலும் உள்ளது.

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. கறம்பக்குடி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கறம்பக்குடியில் இயங்குகிறது. கறம்பக்குடியில் உள்ள ஊராட்சி மன்றங்களுக்காகவும், ஊராட்சி மன்ற தலைவருக்காகவும், மன்ற உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கறம்பக்குடி பேரூராட்சியானது 5.60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 15 வார்டுகளையும் 53 தெருக்களையும் கொண்ட தேர்வுநிலை பேரூராட்சியாகும். கறம்பக்குடி பேரூராட்சியானது 39 கிராமத்தை உள்ளடக்கியது.

கறம்பக்குடி தாலுகாவில் மொத்தம் 110,612 மக்கள் உள்ளனர். அவர்களில்  54,685 ஆண்கள் மற்றும் 55,927 பெண்கள் இருக்கிறார்கள். இந்த தாலுகா 66.16 எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. கறம்பக்குடியில் மூன்று முக்கிய மதங்கள் (இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம்) பின்பற்றப்படுகின்றன. முக்கிய தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் பல மசூதிகள் உள்ளன.

இந்த பேரூராட்சியின் முக்கிய வருமான ஆதாரம் விவசாயம். நெல், நிலக்கடலை மற்றும் கரும்பு ஆகியவை முக்கிய பயிர்கள். குறிப்பாக ரெகுநாதபுரம், குளந்திரன்பட்டு, திருமனஞ்சேரி, புதுப்பட்டி, தீத்தன்விடுதி, ஊரணிபுரம், நெய்வேலி, இடையாத்தி போன்ற சில கிராமங்களில் இருந்து நெல் வருமான ஆதாரங்கள். பலர் வெளிநாடுகளுக்குச் சென்று அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணிபுரிகின்றனர்.

கறம்பக்குடி நகரத்திற்காக ஜெபிப்போம். இந்த தாலுகாவில் வாழும் மக்களுக்காக அவர்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். இந்நகரத்தின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். கறம்பக்குடி நகரத்தில் உள்ள விவசாய குடும்பங்களுக்காக ஜெபிப்போம். கறம்பக்குடி நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.