Daily Updates

தினம் ஓர் ஊர் – ஏத்தாப்பூர் (Yethapur) – 03/09/24

தினம் ஓர் ஊர் – ஏத்தாப்பூர் (Yethapur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – சேலம்

வட்டம் – ஆத்தூர்

பரப்பளவு – 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)

மக்கள் தொகை – 10,968

கல்வியறிவு – 84.21 %

District Collector and District Magistrate  – Dr. R. Brindha Devi, I.A.S.

Commissioner of Corporation  – Bro.  Ranjeet Singh, I.A.S.

Additional Collector  – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,

Commissioner of Police  – Sis. B. Vijayakumari,I.P.S.,

Superintendent of Police  – Bro. A.K. Arun Kabilan, IPS.,

District Revenue Officer and

Additional District Magistrate  – Dr. P. Menaha

Attur Municipality Commissioner – Sis. D.V. Subhashini

Attur Municipality Chairman – Sis. M. Nirmalapapitha

Attur Municipality Vice -Chairman  – Sis. G. Kavitha

Revenue Inspector  – Bro. Nagaraj

மக்களவைத் தொகுதி – கள்ளக்குறிச்சி

சட்டமன்றத் தொகுதி – ஆத்தூர்

மக்களவை உறுப்பினர் – Bro. Malaiyarasan (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. A. P. Jayasankaran (MLA)

Principal District Judge – Sis. S.Sumathi (Salem)

Subordinate Judge – Bro. K. Ananthan (Attur)

ஜெபிப்போம்

ஏத்தாப்பூர் (Yethapur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியின் எல்லைகளாக கல்ராயன் மலை, கிழக்கில் பெத்தநாயக்கன்பாளையம், தெற்கில் புத்திரகவுண்டன்பாளையம் ஊராட்சி, மேற்கில் வைத்தியகவுண்டன்புதூர் ஊராட்சி மற்றும் கல்யாணகிரி ஊராட்சி உள்ளது.

இப்பேரூராட்சியில் ஏத்தாப்பூர் மற்றும் அபிநவம் என்று இரண்டு வருவாய் கிராமங்கள் உள்ளது. ஏத்தாப்பூர் பேரூராட்சிக்கு மேற்கில் சேலம் 41 கிமீ; கிழக்கில் ஆத்தூர் 12 கிமீ தொலைவிலும் உள்ளது. ஏத்தாப்பூரின் 2 கிமீ தொலைவில் தொடருந்து நிலையம் உள்ளது.

இந்த பேரூராட்சி கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் Bro. A. P. Jayasankaran அவர்களுக்காகவும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Malaiyarasan அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

ஏத்தாப்பூர் நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. Attur Municipal Commissioner Sis. D.V. Subhashini அவர்களுக்காகவும், Municipal Chairman Sis. M. Nirmalapapitha அவர்களுக்காகவும்,  Municipal Vice –Chairman Sis. G. Kavitha அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி 10,968 மக்கள்தொகையும் கொண்டது. இதில் 5,535 ஆண்கள் மற்றும் 5,433 பெண்கள் உள்ளனர். இங்கு 2,866 குடும்பங்கள் வசிக்கின்றார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்து 98.27%, முஸ்லிம் 1.01% மற்றும் கிறிஸ்தவர் 0.66% உள்ளனர். ஏத்தாப்பூரில், ஆண்களின் கல்வியறிவு 91.34% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 76.98% ஆகவும் உள்ளது.

ஏத்தாப்பூர் நகரத்தில் உள்ள மொத்த மக்கள்தொகையில், 4,977 பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் இதில் 3,213 ஆண்கள் மற்றும் 1,764 பெண்கள். பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கிற தொழில்களுக்காகவும் ஜெபிப்போம்.

ஏத்தாப்பூர் பேரூராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். ஏத்தாப்பூர் பேரூராட்சியில் வாழும் மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை ஏற்படுத்தும்படி ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம். ஏத்தாப்பூர் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.