No products in the cart.

தினம் ஓர் ஊர் – இராஜபாளையம் – 07/01/15
தினம் ஓர் ஊர் – இராஜபாளையம்
மாவட்டம் – விருதுநகர்
மாநிலம் – தமிழ்நாடு
மக்கள் தொகை – 3,47,668
கல்வியறிவு – 86.25%
மக்களவைத் தொகுதி – தென்காசி
சட்டமன்றத் தொகுதி – இராஜபாளையம்
மாவட்ட ஆட்சியர் – Bro. V.P.Jeyaseelan (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. L. Pitchi (I.P.S)
District Revenue Officer – Bro. R Rajendran (Virudhunagar)
மக்களவை உறுப்பினர் – Sis. Rani Srikumar (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Thangapandian (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. S.Nagarajan
நகராட்சி தலைவர் – Sis. A.A.S.Bavithra Syam
நகராட்சி துணை தலைவர் – Sis. K.Kalpana
Principal District Judge – Bro. K.Jeyakumar
ஜெபிப்போம்
இராஜபாளையம் (Rajapalayam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரிய நகராட்சி. இது மதுரையின் தென்மேற்கே 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரம் நூற்பு மற்றும் நெசவுக்கான பல ஆலைகளுடன் பொருளாதாரம் முதன்மையாக தொழில்துறை ஆகும். இந்த ஊர் மாம்பழத்திற்கும், ராஜபாளையம் நாய் இனத்திற்கும் பெயர் பெற்றது.
இங்கு 15 ஆம் நூற்றாண்டு மத்தியில் ஆந்திராவிலிருந்து தெலுங்கு பேசும் இராஜூக்கள் குடி பெயர்ந்தனர். அவர்களைக் குறித்தே இந்நகருக்கு இராஜபாளையம் என்ற பெயர் வரலாயிற்று. பாளையம் என்ற தமிழ்ச்சொல் கோட்டை என்று பொருள்படும். பழைய பாளையம் மற்றும் புதுப்பாளையம் என இன்றும் வழக்கில் உள்ளது. 16, 17 ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னரிடம் இருந்து இந்த நில பகுதியை வாங்கி இராஜபாளையம் என்ற நகரத்தை கட்டமைத்தனர்.
இராசபாளையம் வட்டம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 35 வருவாய் கிராமங்கள் உள்ளன. இராசபாளையம் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது. இராஜபாளையம் நகராட்சி ஆணையர் Bro. S.Nagarajan அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. A.A.S.Bavithra Syam அவர்களுக்காகவும், துணை நகராட்சி தலைவர் Sis. K.Kalpana அவர்களுக்காகவும் ஜெபிப்போம். தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியினை உண்மை உத்தமதோடு செய்ய ஜெபிப்போம்.
இந்த நகராட்சியின் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Thangapandian அவர்களுக்காகவும், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Sis. Rani Srikumar அவர்களுக்காகவும், மாவட்ட ஆட்சியர் Bro. V.P.Jeyaseelan அவர்களுக்காகவும், விருதுநகர் காவல்துறை கண்காணிப்பாளர் Bro. L. Pitchi, அவர்களுக்காகவும், District Revenue Officer Bro. R Rajendran அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய ஆளுகைக்குள் இவர்களை ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.
இந்த நகராட்சியில் மொத்தம் 3,47,668 மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஆண்கள் 1,73,529 பேரும், பெண்கள் 1,74,139 பேரும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 44.6% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இங்குள்ள மக்களில் இந்துக்கள் 95.14% பேரும், இசுலாமியர்கள் 1.78% பேரும், கிறித்தவர்கள் 2.86% பேரும் மற்றும் பிற மதத்தை சார்ந்தவர்கள் 0.03% பேரும் வாழ்கின்றார்கள். இங்கு மொத்தம் 1,00,543 குடும்பங்கள் உள்ளன. இராஜபாளையம் மக்களுக்காக அவர்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.
இராஜபாளையத்தில் ஆரம்பத்தில் முதன்மைத் தொழிலாக விவசாயம் இருந்தது. 1936 ஆம் ஆண்டில், திரு பிஏசி ராமசாமி ராஜா முதல் பருத்தி நூற்பு ஆலையை ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் என்ற பெயரில் தொடங்கினார். பின்னர், பல ஜவுளி ஆலைகள் தொடங்கப்பட்டன. இன்று, ராஜபாளையம் ஜவுளித் தொழிலின் முக்கிய மையமாக உள்ளது, இது கட்டுகள், நெய்த துணி, நைட்வேர் மற்றும் பிற பொருட்களுக்கு பிரபலமானது. அறுவைசிகிச்சை பருத்தி காஸ் தயாரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
இராஜபாளையம் நாய் இனம் விஜயநகரப் பேரரசின் வருகையின்போது ஆந்திர, கர்நாடகப் பகுதியில் இருந்து தமிழகம் வந்த பாளையக்காரர்கள் மூலமாக தமிழகம் வந்த நாயாகும். இது ஒரு பெரிய நாயாகும். இது வெள்ளை நிற உடலும், இளஞ்சிவப்பு மூக்கும், மடிந்த காதுகளும் கொண்டிருக்கும். வளர்ப்பு நாய் வகைகளில் இராசபாளையம் நாய் மிகவும் அறியப்பட்ட இந்திய நாட்டு நாய் இனமாகும். அங்கு இவ்வகை நாயினம் அழிந்துபோய் தமிழகத்தின் இராஜபாளையத்தில் மட்டும் எஞ்சியதால் இராஜபாளையம் நாய் என ஊர் பெயராலேயே அழைக்கப்பட்டது. இதை ஆங்கிலத்தில் பொலிகார் ஹவுண்ட் என்றும் அழைக்கப்படுகிறது.
இராஜபாளையம் தங்கப்பூ சடையாரம் என்பது திருமணத்தின் போது மணப்பெண்களுக்குச் சூட்டப்படும் ஒரு அலங்காரப் பொருள் ஆகும். இவை காலங்காலமாக விருதுநகர் மாவட்டம் இராசபாளையம் பகுதியில் கைவேலைப்பாடுகளுடன் தயார் செய்யப்படுகிறது. இந்த ராஜபாளையம் ஜடையாரங்கள் சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக அவர்களின் கையின் பிரயாசத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.
இராஜபாளையம் நகராட்சிக்காக ஜெபிப்போம். இராஜபாளையம் நகராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்களின் இரட்சிப்பிற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இராஜபாளையம் நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம். இராஜபாளையம் நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் செய்கிற தொழில்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம். இராஜபாளையம் நகராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.