Daily Updates

தினம் ஓர் ஊர்-ஆலங்குளம் (Alangulam) – 25/02/25

 

தினம் ஓர் ஊர்-ஆலங்குளம் (Alangulam)

மாவட்டம்-தென்காசி

மாநிலம்-தமிழ்நாடு

மக்கள் தொகை-176,138

கல்வியறிவு-79.08%

மாவட்ட ஆட்சியர்-Bro. Dr. G.S.Sameeran, I.A.S

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்-Bro. Aravind, T.P.S.,

District Revenue Inspector-Bro. M.Nagaranjan

மக்களவைத் தொகுதி-தென்காசி

சட்டமன்றத் தொகுதி-ஆலங்குளம்

Principal District Judge -Bro. B. Rajavel (Tenkasi)

Additional District Judge-Bro. S. Manojkumar (Tenkasi)

Chief Judicial Magistrate -Bro. C.Kathiravan (Tenkasi)

District Munsif -Sis. A. Muthuselvam (Alangulam)

Judicial Magistrate -Sis. S. Ananthavalli (Alangulam)

ஜெபிப்போம்

ஆலங்குளம் (Alangulam), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் உள்ள சிறப்பு நிலைப் பேரூராட்சி ஆகும். இதன் அருகாமையில் கிழக்கில் திருநெல்வேலி 38 கி.மீ.; மேற்கில் தென்காசி 24 கி.மீ.; வடக்கில் சங்கரன்கோவில் 48 கி.மீ.; தெற்கில் அம்பாசமுத்திரம் 20 கி.மீ. வடமேற்குப் பகுதியில் சுரண்டை 17 கி.மீ ஆகிய ஊர்கள் உள்ளன. ஆலங்குளம் பேரூராட்சியாக ஜெபிப்போம்.

ஆலங்குளம் வட்டம் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து புதிதாக நிறுவப்பட்ட தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் கீழப்பாவூர், நெட்டூர், புதுப்பட்டி, வெங்கடாம்பட்டி, ஆலங்குளம் என 5 குறுவட்டங்களும், 35 வருவாய் கிராமங்களும் உள்ளன.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த நகரம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்நகரமானது 12.29 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 130 தெருக்களும், 5,796 வீடுகளையும் கொண்டுள்ளது.

ஆலங்குளம் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 176,138 ஆகும். இதில் 87,050 ஆண்கள் மற்றும் 89,088 பெண்கள் இருக்கிறார்கள். ஆலங்குளம் தாலுகாவில் மொத்தம் 47,594 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 71% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவர்களில் இந்துக்கள் 87.55% பேரும், இசுலாமியர்கள் 0.48% பேரும், கிறித்தவர்கள் 11.87% பேரும், பிற மதங்களை சார்ந்தவர்கள் 0.10% பேரும் வாழ்கிறார்கள்.

ஆலங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் விவசாயம் மற்றும் பீடி சுற்றுதல் பிரதான தொழிலாக உள்ளது. விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். விவசாயிகள் செலவு செய்து விளைவித்த பொருட்கள் அவர்கள் எதிர்பார்த்த விலை விற்கப்பட ஜெபிப்போம். பீடி சுற்றுதல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக ஜெபிப்போம்.

ஆலங்குளம் நகரத்திற்காக ஜெபிப்போம். ஆலங்குளம் நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். ஆலங்குளம் நகரத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காக, கிராம மக்களுக்காக ஜெபிப்போம். ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், தென்காசி மக்களவை உறுப்பினருக்காகவும், ஊராட்சி மன்றங்களுக்காக, ஊராட்சி மன்ற தலைவருக்காக, மன்ற துணை தலைவருக்காகவும், மன்ற உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். ஆலங்குளம் நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.