No products in the cart.

தினம் ஓர் ஊர்-அன்னவாசல் (Annavasal) – 16/11/23
தினம் ஓர் ஊர்-அன்னவாசல் (Annavasal)
மாநிலம்-தமிழ்நாடு
மாவட்டம்-புதுக்கோட்டை
மக்கள் தொகை-8,906
கல்வியறிவு-79.31 %
மக்களவைத் தொகுதி-கரூர்
சட்டமன்றத் தொகுதி-விராலிமலை
மாவட்ட ஆட்சியர்-Sis. I.S.Mercy Ramya (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர்-Bro. Vandita Pandey (I.P.S)
மக்களவை உறுப்பினர்-Sis. Jothimani Sennimalai (MP)
சட்டமன்ற உறுப்பினர்-Bro. C. Vijayabaskar (MLA)
நகராட்சி ஆணையர்-Sis. S.N.Siyamala
நகராட்சி தலைவர்- Sis. S.Thilagavathi
நகராட்சி துணை தலைவர்-Bro. M.Liyakath Ali
Town Planning Officer-Bro. Balaji
Town Planning Inspectors-Bro. S.Jayasankar
Sis. Vijaya Varatha Rajan
Principal District Judge -Bro. K.Poorana Jeya Anand
District Munsif cum Judicial Magistrate-Bro. S.Anbuthasan (Illuppur)
ஜெபிப்போம்
அன்னவாசல் (Annavasal) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியானது ஜனவரி 14, 1974க்கு முன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து, 14 ஜனவரி 1974 அன்று புதுக்கோட்டை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அன்னவாசல் பிப்ரவரி மாதத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கும், வாரச் சந்தைக்கும் பிரபலமானது. அன்னவாசல் பேரூராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.
இந்த நகரம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கரூர் மக்களவை உறுப்பினர் Sis. Jothimani Sennimalai அவர்களுக்காகவும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் Bro. C. Vijayabaskar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இந்த நகரமானது 10.13 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 15 தெருக்களும் கொண்டுள்ளது. இலுப்பூர் வட்டத்தின் நகராட்சி ஆணையர் Sis. S.N.Siyamala அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. S.Thilagavathi அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. M.Liyakath Ali அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கவுன்சிலர்களுக்காகவும் அவர்களுடைய பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
அன்னவாசல் டவுன் பஞ்சாயத்தில் 8,906 மக்கள் தொகை உள்ளது, இதில் 4,429 ஆண்கள் மற்றும் 4,477 பெண்கள் உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 2,050 குடும்பங்கள் வாழ்கிறார்கள். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகளின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.
அன்னவாசலின் சராசரி கல்வியறிவு விகிதம் 67% ஆகும். இதில் 55% ஆண்களும், 45% பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர். இந்த பேரூராட்சியில் உள்ள பள்ளிகளுக்காக ஜெபிப்போம். படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.
அன்னவாசலின் மொத்த மக்கள்தொகையில் 3,872 பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்காகவும், இவர்கள் செய்கிற வேலைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். மேலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.