No products in the cart.

தினம் ஓர் ஊர் – மண்டபம் (Mandapam) – 26/03/25
தினம் ஓர் ஊர் – மண்டபம் (Mandapam)
மாவட்டம் – இராமநாதபுரம்
மாநிலம் – தமிழ்நாடு
பரப்பளவு – 5 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi)
மக்கள் தொகை – 18,427
கல்வியறிவு – 87.08%
மக்களவைத் தொகுதி – இராமநாதபுரம்
சட்டமன்றத் தொகுதி – இராமநாதபுரம்
மாவட்ட ஆட்சியர் – Bro. Simranjeet Singh Kahlon I.A.S.
Superintendent of Police – Bro. G.Chandeesh I.P.S.
Additional Collector DRDA – Bro. Veer Pratap Singh IAS.,
Wildlife Warden – Dr. R.Murugan I.F.S.,
District Revenue Officer – Bro. R. Govindarajalu
Principal District Judge – Bro. A.K.Mehbub Alikhan (Ramanathapuram)
ஜெபிப்போம்
மண்டபம் (Mandapam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும். இராமநாதபுரத்திலிருந்து 38 கி.மீ. தொலைவில் மண்டபம் உள்ளது.
மண்டபம் நகரம் 18 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இது 5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 73 தெருக்களும் கொண்ட மண்டபம் பேரூராட்சியானது, இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
மண்டபம் நகர பஞ்சாயத்தில் 18,427 மக்கள் தொகை உள்ளது, இதில் 9,299 ஆண்கள் மற்றும் 9,128 பெண்கள் உள்ளனர். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 2142 ஆகும், இது மண்டபத்தின் (TP) மொத்த மக்கள் தொகையில் 11.62% ஆகும். மண்டபத்தில், ஆண்களின் கல்வியறிவு சுமார் 90.97% ஆகவும், பெண் கல்வியறிவு விகிதம் 83.10% ஆகவும் உள்ளது. இப்பேரூராட்சி 4,296 குடும்பங்கள் வாழ்கிறார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்து 64.58%, முஸ்லிம் 27.48%, கிறிஸ்தவர் 7.50%, சீக்கியர் 0.03%, பௌத்தர் 0.02% மற்றும் ஜெயின் 0.01% உள்ளனர்.
மண்டபத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் மண்டபம் முகாம் (Mandapam Camp) ரயில் நிலையம் உள்ளது. இந்தியாவில் பெரிய மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம் இங்கு அமைந்துள்ளது. இங்கிருந்து 18 கிமீ தொலைவில் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் உள்ளது. மண்டபத்தில் 1961ஆம் ஆண்டில் இந்திய-நார்வே திட்டம் ஏற்படுத்தப்பட்டது. சிறந்த மீன் பிடிக்கும் படகுகள் கட்டப்பட்டு மீன் பிடிக்கும் தொழில் இங்கு நடைபெறுகிறது. மீன் உணவு உற்பத்தி நிலையம் ஒன்றும் இங்கு உள்ளது.
மண்டபத்திற்கும், இராமேஸ்வரத் தீவிற்கும் இடையிலுள்ள கடல் பகுதியில் 3 கி.மீ. நீளமுள்ள பாம்பன் பாலம் உள்ளது. மண்டபத்தையும் இராமேஸ்வரத் தீவையும் இணைக்கும் சாலைப் போக்குவரவிற்கான பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. மண்டபத்தில் ஒரு பேருந்து நிறுத்தம், ஒரு தொடக்கநிலை சுகாதார மையம், ஒரு சந்தை உள்ளது. மண்டபத்திற்கு அருகில் குருசடை தீவு உள்ளது. இது கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக உள்ளது.
மொத்த மக்கள்தொகையில், 5,972 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 5,187 பேர் ஆண்கள், 785 பேர் பெண்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பில், தொழிலாளி என்பவர் வணிகம், வேலை, சேவை மற்றும் விவசாயி மற்றும் தொழிலாளர் நடவடிக்கைகளைச் செய்பவர் என வரையறுக்கப்படுகிறார். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கிற தொழிலுக்காகவும் ஜெபிப்போம்.
மண்டபம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்காகவும், மக்களவை உறுப்பினருக்காகவும் ஜெபிப்போம். தொண்டி பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். இப்பேரூராட்சியின் தலைவருக்காகவும், துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். மண்டபம் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.